Khub.info Learn TNPSC exam and online pratice

தமிழ்நாடு

Q1. தமிழ்நாடு 
தலைநகரம்: சென்னை
பரப்பளவு: 1, 30, 058 ச.கி.மீ
மாவட்டங்கள்: 32
மாநகராட்சிகள்: 12
நகராட்சிகள்: 144
வருவாய் மண்டலங்கள்: 76
தாலுக்காக்கள்: 226
பேரூராட்சிகள்: 561
பஞ்சாயத்து யூனியன்கள்: 385
ஊராட்சிகள்: 12606
வருவாய் கிராமங்கள்: 16564
மொழி: தமிழ், ஆங்கிலம், தெலுங்கு
மக்கள் தொகை: 7, 21, 47, 030 (6வது இடம்)
எழுத்தறிவு: 80.33%
சட்ட மன்ற தொகுதிகள்: 234
மக்களவை தொகுதிகள்: 39
மாநிலங்களவை தொகுதிகள்: 18
முக்கிய ஆறுகள்: காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி, அமராவதி
பூகோள அமைப்பு: 13.09° வடக்கு 80.27° கிழக்கு
எல்லைகள்: கேரளா, கர்நாடகம், ஆந்திரபிரதேசம், புதுச்சேரி (யூ.பி), வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல்"
முக்கிய நகரங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி,ஈரோடு, தஞ்சாவூர், கரூர், விருதுநகர், சேலம், வேலூர், நமக்கல், ராமேஸ்வரம், ராமநாதபுரம், சிவகாசி, சிதம்பரம், ஊட்டி, திண்டுக்கல், தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.
மாநில கீதம்: தமிழ்த் தாய் வாழ்த்து: "நீராடும் கடலுடுத்த......"
மாநில மரம்: பனை
மாநில விலங்கு: நீலகிரி தார் ஆடு (வரையாடு)
மாநில விளையாட்டு: கபடி
மாநில பறவை: எமரால்டு புறா
மாநில மலர்: செங்காந்தள்
மாநில நாட்டியம்: பரதம்
ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்
முதல் மந்திரி: எடப்பாடி கே. பழனிசாமி
 


   

 

Q2. வரலாற்று சுருக்கம்:
உலகிலேயே மிக பழமையான மனித சமுதாயம் வாழ்ந்த பகுதியாக கருதப்படும் ஒரு பகுதி. இப்பகுதி, சேர, சோழ, பல்லவ மற்றும் பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டுவநத பகுதி. 1639ல், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, சென்னப்பட்டணம் என்ற கிராமத்தை வந்தவாசி நாயக்கரிடம் இருந்து விலைக்கு பெற்று தங்களுடைய வியாபாரத் தலத்தை துவக்கி, நாளடைவில் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதையும் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்துக்குள் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது சரித்திரம். இவ்வாறாக, 1684ல், ஆங்கிலேயர்கள், தங்களின் நிர்வாக வசதிக்காக, இப்பகுதியை ""மெட்ராஸ் ப்ரெஸிடென்சி"" என்ற மாகாணத்தை உருவாக்கி ஆண்டு வந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மாகாணங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் மலபார் பகுதிகள் கேரளாவுக்கும், திருப்பதி ஆந்திர பிரதேசத்துக்கும் கொடுக்கப்பட்டு, திருத்தணி பகுதி மாநிலத்துடன் சேர்க்கப்பட்டு மெட்ராஸ் மாகாணமாக 1.11.1956 ல் உருவெடுத்தது. 14.1.1969 முதல் தமிழ்நாடாகவும், 1996ல் ""மெட்ராஸ்"" சென்னையாகவும் அழைக்கப்பட்டு வருகிறது.
Q3. அமைச்சரவை: (ஆகஸ்ட் 2017 நிலைப்படி)
S.No. பெயர்: இலாக்காக்கள்:
1 எடப்பாடி கே. பழனிசாமி  -- முதலமைச்சர்  பொதுத்துறை, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் காவல் மற்றும் உள்துறை,  பொதுப்பணி, பாசனம், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்.  
2.

ஓ.பன்னீர் செல்வம்

துணை முதலமைச்சர் -- நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச் சீட்டுகள், வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
3 திண்டுக்கல் ஸ்ரீநிவாசன்  வனத்துறை
4 கே. பாண்டியராஜன் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை 
5 செல்லூர் ராஜூ  கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்
6 P. தங்கமணி  மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்), மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்  
7 எஸ்.பி.வேலுமணி  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல்,சிறப்புத் திட்ட செயலாக்கம்.
8 டி. ஜெயக்குமார்  மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை 
9 சி.வி.சண்முகம்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்
10 கே.பி. அன்பழகன்  தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல்.
11 டாக்டர்.வி.சரோஜா  மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.
12 எம்.சி.சம்பத் தொழில்துறை
13 கே.சி.கருப்பண்ணன்  சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு 
14 ஆர். காமராஜ் உணவு, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.
15 ஓ.எஸ்.மணியன்  கைத்தறி மற்றும் ஜவுளித்துறை 
16 உடுமலை ராதாகிருஷ்ணன்  கால்நடைப் பராமரிப்பு
17 டாக்டர் சி.விஜயபாஸ்கர்  மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
18 கே.டி. ராஜேந்திர பாலாஜி  பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி
19 ஆர். துரைக்கண்ணு  வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு
20 கடம்பூர் ராஜூ  செய்தி மற்றும் விளம்பரம் ,திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம்,எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்
21 ஆர்.பி.உதயகுமார்  வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
22 பி.பெஞ்சமின்   ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள்
23 கே.சி. வீரமணி  வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்.
24 கே.ஏ. செங்கோட்டையன்   பள்ளிக் கல்வித் துறை .
25 வெல்லமண்டி கே. நடராஜன்  சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம்
26 டாக்டர் நிலோஃபர் கஃபீல்  தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம்.
27 எம்.ஆர்.விஜயபாஸ்கர்  போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம்
28 டாக்டர். எம். மணிகண்டன்  தகவல் தொழில்நுட்பம்
29 வி.எம்.ராஜலக்ஷ்மி  ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
30 ஜி. பாஸ்கரன்  கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்
31 செவ்வூர் எஸ். ராமச்சந்திரன்  இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்
32 எஸ்.வளர்மதி  பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்
33 பி.பாலகிருஷ்ண ரெட்டி  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
     
     
     
     
     
     
  இதர முக்கிய அதிகாரிகள் - 2016 நிலையில்  
1. அரசு தலைமைச் செயலாளர்  திருமதி.கிரிஜா வைத்தியநாதன்  I A S  
2. தலைமை தேர்தல் அதிகாரி  ராஜேஷ் லக்கானி  I A S 
3. சென்னை மேயர்  சைதை துரைசாமி 
4. அட்வகேட் ஜெனரல்  விஜய் நாராயண்
5. டைரக்டர் ஜெனரல் -- போலீஸ்  டி.கே.ராஜேந்திரன்  I P S 
6. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  இந்திரா பானர்ஜி 
7. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  டாக்டர் கே. அருள்மொழி

 

Q4. மாநகராட்சிகள் -- தொடக்கம் -- மேயர்கள்: (மார்ச் 2016 நிலையில்)
1.   சென்னை -- 30.12.1687 -- சைதை சா.துரைசாமி.
2.  கோயம்புத்தூர் -- 1981 -- கணபதி P. ராஜ்குமார்
3.   மதுரை -- 1971 -- ராஜன் செல்லப்பா
4.   திருச்சிராப்பள்ளி -- 1994 -- V. ஜெயா
5.   சேலம் -- 1994 -- S. சௌண்டப்பன்
6.   திருநெல்வேலி -- 1994 -- விஜிலா சத்யானந்த்
7.   தூத்துக்குடி -- 2008 -- அந்தோணி க்ரேஸி
8.   வேலூர் -- 2009 -- P. கார்த்தியாயிணி
9.   திருப்பூர் -- 2010 -- A. விசாலாக்ஷி
10. ஈரோடு -- 2010 -- மல்லிகா பரமசிவம்
11. தஞ்சாவூர் -- 2013 -- சாவித்திரி கோபால்
12. திண்டுக்கல் -- 2014 -- வி. மருதராஜ்
Q5. மக்களவை தொகுதிகள்:
39
1. சென்னை தெற்கு 2. சென்னை வடக்கு 3.மத்திய சென்னை 4.ஸ்ரீபெரும்புதூர் 5. அரக்கோணம் 6. வேலூர் 7. கிருஷ்ணகிரி 8. தர்மபுரி 9. திருவண்ணாமலை 10. ஆரணி 11.கள்ளக்குறிச்சி 12. சேலம் 13. நாமக்கல் 14.ஈரோடு 15. திருப்பூர் 16. கோயம்புத்தூர் 17. பொள்ளாச்சி 18. திண்டுக்கல் 19.கரூர் 20. திருச்சிராப்பள்ளி 21. பெரம்பலூர் 22. கடலூர் 23. மயிலாடுதுறை 24. தஞ்சாவூர் 25. சிவகங்கை 26.மதுரை 27. விருதுநகர் 28. தேனி 29. ராமநாதபுரம் 30. தூத்துக்குடி 31. திருநெல்வேலி 32. கன்னியாகுமரி 33.திருவள்ளூர் (SC) 34. காஞ்சிபுரம் (SC) 35. விழுப்புரம் (SC)36. நீலகிரி (SC) 37. நாகப்பட்டினம் (SC) 38. தென் காசி (SC) 39. சிதம்பரம் (SC)
Q6. சட்ட மன்ற தொகுதிகள்:
234
பொது General - 188;
பிற்படுத்தப்பட்டோர் - SC 44;
பழங்குடியினர் - ST 2
பொது தொகுதிகள்: 188:

1.கும்மிடிபூண்டி 2. திருவள்ளூர் 3. ஆவடி 4. மாதவரம் 5. திருவொற்றியூர் 6. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 7.பெரம்பூர் 8. கொளத்தூர் 9. ராயபுரம் 10. விருகம்பாக்கம் 11. சைதாப்பேட்டை 12. தி.நகர் 13.மைலாப்பூர் 14. வேளச்சேரி 15.ஷோளிங்கநல்லூர் 16. வில்லிவாக்கம் 17.துறைமுகம் 18. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி 19. ஆயிரம் விளக்கு 20. அண்ணாநகர் 21. மதுரவாயல் 22.அம்பத்தூர் 23.ஆலந்தூர் 24. பல்லாவரம் 25. தாம்பரம் 26.செங்கல்பட்டு 27.திருப்போரூர் 28.உத்திரமேரூர் 29.காஞ்சிபுரம் 30.திருத்தணி 31.ஷோலிங்கர் 32.காட்பாடி 33. ராணிப்பேட்டை 34.ஆற்காடு 35.வேலூர் 36. அணைக்கட்டு 37.வாணியம்பாடி 38.ஆம்பூர் 39. பர்கூர் 40.கிருஷ்ணகிரி 41. வேப்பணஹல்லி 42. ஹோசூர் 43.தல்லி 44. பாலக்கோடு 45. பென்னாகரம் 46. தர்மபுரி 47.பாப்பிரெட்டிபட்டி 48. மேட்டூர் 49. ஜோலார்பேட்டை 50.திருப்பத்தூர் 51. திருவண்ணாமலை 52. கலசப்பாக்கம் 53. கீழ்பென்னாத்தூர் 54. போளூர் 55. ஆரணி 56.செய்யார் 57.ஜிஞ்சி 58.மைலம் 59. விழுப்புரம் 60.விக்ரவாண்டி 61.திருக்கோயிலூர் 62. உளுந்தூர்பேட்டை 63. ரிஷிவாந்தியம் 64.சங்கராபுரம் 65. ஓமலூர் 66. எடப்பாடி 67. மேற்கு சேலம் 68. தெற்கு சேலம் 69. வடக்கு சேலம் 70. வீரபாண்டி 71. சங்கரி 72.நாமக்கல் 73. பரமாத்தி வேலூர் 74.திருச்செங்கோடு 75. கொமரப்பாளையம் 76. கிழக்கு ஈரோடு 77. மேற்கு ஈரோடு 78. மொடக்குறிச்சி 79. காங்கேயம் 80.பெருந்துறை 81. பவானி 82. அந்தியூர் 83.கோபிச்செட்டிப் பாளையம் 84. வடக்கு திருப்பூர் 85. தெற்கு திருப்பூர் 86. உதகமண்டலம் 87. கூனூர் 88. மேட்டுப்பாளையம் 89. பல்லடம் 90. சூளூர் 91. கவுண்டப்பாளையம் 92. வடக்கு கோயம்புத்தூர் 93. தெற்கு கோயம்புத்தூர் 94.சிங்கநல்லூர் 95. தொண்ட முத்தூர் 96. கிணத்துக்கடவு 97. பொள்ளாச்சி 98.உடுமலைப்பேட்டை 99. மடத்துக்குளம் 100. பழனி 101. ஒட்டன்சத்திரம் 102. ஆத்தூர் 103.நத்தம் 104.திண்டுக்கல் 105.வேடசந்தூர்106. அரவக்குறிச்சி 107.கரூர் 108. மணப்பாறை 109. விராலிமலை 110. ஸ்ரீரங்கம் 111. மேற்கு திருச்சிராப்பள்ளி 112. கிழக்கு திருச்சிராப்பள்ளி 113. திருவெறும்பூர் 114.புதுக்கோட்டை 115. குளித்தலை 116. லால்குடி 117.மணச்சநல்லூர் 118. முசிறி 119. விருத்தாச்சலம் 120. நெய்வேலி 121. பன்ருட்டி 122.கடலூர் 123. குறிஞ்சிப்பாடி 124.குன்னம் 125. அரியலூர் 126. ஜெயங்கொண்டான் 127. புவனகிரி 128. சிதம்பரம் 129. பூம்புகார் 130. மயிலாடுதுறை 131. கும்பகோணம் 132. பாபநாசம் 133. நாகப்பட்டினம் 134. வேதாரண்யம் 135. நன்னிலம் 136.திருவாரூர் 137. மன்னார்குடி 138. திருவையாறு 139. தஞ்சாவூர் 140. ஒரத்தநாடு 141. பட்டுக்கோட்டை 142. பேராவூரணி 143. திருமயம் 144. ஆலங்குடி 145. காரைக்குடி 146. திருப்பத்தூர் 147. சிவகங்கை 148. மேலூர் 149. கிழக்கு மதுரை 150. வடக்கு மதுரை 151. தெற்கு மதுரை 152. மத்திய மதுரை 153.மேற்கு மதுரை 154.உசிலம்பட்டி 155. ஆண்டிப்பட்டி 156. போடிநாயக்கனூர் 157. கம்பம் 158. திருப்பரங்குன்றம் 159. திருமங்கலம் 160. சாத்தூர் 161.சிவகாசி 162.விருதுநகர் 163. அருப்புக்கோட்டை 164.அறந்தாங்கி 165. திருச்சுழி 166.திருவாடனை 167.இராமநாதபுரம் 168. முதுகளத்தூர் 169. விளாத்திக்குளம் 170. தூத்துக்குடி 171. திருச்செந்தூர் 172. ஸ்ரீவைகுண்டம் 173. கோவில்பட்டி 174. இராஜபாளையம் 175. கடயநல்லூர் 176. தென்காசி 177.ஆலங்குளம் 178. திருநெல்வேலி 179. அம்பாசமுத்திரம் 180. பாளையங்-கோட்டை 181.நாங்குநேரி 182. ராதாபுரம் 183.கன்னியாகுமரி 184. நாகர்கோவில் 185. கொளச்சேல் 186. பத்மநாபபுரம் 187. விளவங்கோடு 188.கிள்ளியூர்
SC தொகுதிகள் 44:
1. பொன்னேரி (SC) 2. பூந்தமல்லி (SC) 3. எழும்பூர் (SC) 4.திரு.வி.க. நகர் 5. ஸ்ரீபெரும்புதூர் (SC) 6.செய்யூர் (SC) 7. மதுராந்தகம் (SC) 8. அரக்கோணம் (SC) 9. கே.வி.குப்பம் (SC) 10.குடியாத்தம் (SC) 11. ஹரூர் (SC) 12. ஊத்தாங்கரை (SC) 13. செங்கம் (SC) 14. வந்தவாசி (SC) 15. வனூர் (SC) 16. திண்டிவனம் (SC) 17.கள்ளக்குறிச்சி (SC) 18. கங்காவள்ளி (SC) 19. ஆத்தூர் (SC) 20.ராசிபுரம் (SC) 21. தாராபுரம் (SC) 22. பவானிசாகர் (SC) 23. கூடலூர் (SC) 24. அவினாசி (SC) 25. வால்பாறை (SC) 26. நிலக்கோட்டை (SC) 27. கிருஷ்ணராயபுரம் (SC) 28. கந்தர்வக்கோட்டை (SC) 29.துறையூர் (SC) 30. பெரம்பலூர் (SC) 31. திட்டக்குடி (SC) 32. காட்டுமன்னார் கோவில் (SC) 33. சீர்காழி (SC) 34.திருவிடைமருதூர் (SC) 35.கீழ்வேலூர் (SC) 36. திருத்துறைப்பூண்டி (SC) 37. மானாமதுரை (SC) 38. சோழவந்தான் (SC) 39. பெரியகுளம் (SC) 40.பரமக்குடி (SC) 41. ஒட்டப்பிடாரம் (SC) 42. ஸ்ரீவில்லிப்புத்தூர் (SC) 43. சங்கரன் கோவில் (SC) 44. வாசுதேவநல்லூர்(SC)
ST தொகுதிகள்: 2
1.சேந்தமங்கலம் (ST) 2. ஏற்காடு (ST)
Q7. தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி நன்மைகள்:
1.   சம்பளம் (8000); இழப்பீட்டுப் படி (7000); தொலைபேசிப் படி (5000) தொகுதிப்படி (10000); அஞ்சல் படி (2000); வாகனப்படி (20000) == மொத்தம் ரூ.55000/-
2.   சட்டசபை அலுவல் நடக்கும் நாட்களில் ---- ரூ.500/- தினமும்.
3.   இரு படுக்கை குளிர் சாதன ரயில் பயணம்.
4.   தமிழ்நாடு அரசுப் போக்குவரத்தில் இலவச பயணம்.
5.   வருடத்திற்கு ரூ.20000 -- வெளி மாநில ரயில் பயண படி.
6.   சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் ரூ.250 மாத வாடகையில் தங்கும் வசதி.
7.   தொலைபேசி.
8.   குடும்பத்தாருடன் இலவச மருத்துவ வசதி
9.   அரசாங்க முத்திரையுடன் கூடிய எழுது காகிதங்கள், உறைகள், மற்றும் சில அலுவல் சாதனங்கள்
10. பதவிக்காலம் முடியும் முன் உறுப்பினர் மறைவுக்கு, குடும்பத்தாருக்கு 2 லட்சம் இழப்பீடு
11. ஓய்வூதியம் - மாதம்/வாழ்நாள் ரூ.12000/-
12. ஓய்வு காலத்தில் அரசுப் போக்குவரத்தில் மனைவிக்கும் சேர்த்து இலவச பயணம்.
13. ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு வருடந்தோறும் ரூ.12000/- மருத்துவ படி."
Q8. தமிழகத்திலிருந்து பாரத ரத்னா விருது பெற்ற தலைவர்கள்:
1. 1954 சி. ராஜகோபாலாச்சாரி - சுதந்திர போராட்ட தியாகி, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரல்.
2. 1954 சி.வி.ராமன் -- இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930) பெற்றவர்.
3. 1976 காமராசர் -- சுதந்திர போராட்ட வீரர் - தமிழக முதல்வர் (1954-1963)
4. 1988 புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் - தமிழக முதல்வர் (1977-1987)
5. 1997 ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - ஏவுகணை விஞ்ஞானி - குடியரசுத்தலைவர் (2002-2007)
6. 1998 எம்.எஸ்.சுப்புலட்சுமி -- கர்நாடக இசை மேதை
7. 1998 சி. சுப்ரமணியம் - சுதந்திர போராட்ட வீரர் - மத்திய அமைச்சர் - ராமன் மகாசெசெ விருது (1965)
Q9. தமிழகத்திலிருந்து ராமன் மகசெசெ விருது பெற்றவர்கள்:
1. 1971 எம்.எஸ்.ஸ்வாமிநாதன் -- வேளாண் விஞ்ஞானி
2. 1974 எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி -- கர்நாடக இசை மேதை
3. 1984 ஆர்.கே. லக்ஷ்மண் - எழுத்தாளர், கேலி சித்திர நிபுணர்
4. 1996 டி.என்.சேஷன் -- இந்திய அரசாங்க உயர் அதிகாரி
5. 2000 ஜோக்கிம் அற்புதம் -- பொது சேவகர்
6. 2005 டாக்டர் வி. சாந்தா -- புற்றுநோய் மருத்துவர்
7. 2007 பி.சாய்நாத் -- பத்திரிகை எழுத்தாளர்.
8. 2012 குழந்தை ஃப்ரான்சிஸ் -- பொது சேவகர்
Q10. தமிழகத்திலிருந்து பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள்:
1.   1960 நாராயண ராகவன் பிள்ளை -- அரசாங்க பணி
2.   1962 HVR அய்யங்கார் -- அரசாங்க பணி
3.   1963 A லக்ஷ்மணசாமி முதலியார் - மருத்துவம்
4.   1970 P ப்ரபாகர் குமாரமங்கலம் -- அரசாங்க பணி
5.   1971 பலராம் சிவராமன் -- அரசாங்க பணி
6.   1972 சாம் மானேக்ஷா -- அரசாங்க பணி
7.   1973 திருமால்ராய ஸ்வாமிநாதன் -- அரசாங்க பணி
8.   1975 மேரி க்ளப்வாலா ஜாதவ் -- பொது சேவை
9.   1975 எம்.எஸ். சுப்புலக்ஷ்மி -- கலை
10. 1977 டி. பாலசரஸ்வதி -- கலை
11. 1985 சி.என்.ஆர்.ராவ் -- அறிவியல்
12. 1989 எம்.எஸ்.ஸ்வாமிநாதன் -- அறிவியல்
13. 1990 வி.எஸ்.ஆர்.அருணாசலம் -- இலக்கியம்
14. 1990 ஏ.பி.ஜே.அப்துல் கலாம் -- அறிவியல்
15. 1990 செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் -- கலை
16. 1991 எம். பாலமுரளி கிருஷ்ணா -- கலை
17. 1999 சர்வபள்ளி கோபால் -- இலக்கியம்
18. 1999 டி.கே. பட்டம்மாள் -- கலை
19. 2000 ஆர்.கே. நாராயண் -- இலக்கியம்
20. 2001 சக்ரவர்த்தி வி. நரசிம்மன் -- அரசாங்க பணி
21. 2006 சி.ஆர். கிருஷ்ணசாமி ராவ் - அரசாங்க பணி
22. 2007 ராஜா செல்லைய்யா -- அரசாங்க பணி
23. 2008 விஸ்வநாதன் ஆனந்த் -- விளையாட்டு
24. 2010 உமையாள்புரம் கே. சிவராமன் -- கலை
25. 2015 எம்.ஆர்.ஸ்ரீநிவாசன் -- அறிவியல்
26. 2016 ரஜினிகாந்த் -- கலை
27. 2016 வி. சாந்தா -- மருத்துவம்.
Q11. தமிழகத்திலிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்:
(2011 முதல்) தமிழகத்திலிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் நிறைய பேர்கள் உள்ளனர். ஆகவே 2011 முதல் கொடுக்கப்பட்டுள்ளது:
1.   2011: எம்.கே. சரோஜா -- கலை -- பரதநாட்டியம்
2.   2011: எஸ்.ஆர். ஜானகிராமன் -- கலை -- கர்நாடக இசை
3.   2011: மெக்கா ரஃபீக் அஹமது -- வணிகம்
4.   2011: கைலாசம் ராகவேந்திர ராவ் -- வணிகம்
5.   2011: என்.ஆர். ராகவேந்திரன் - அறிவியல்
6.   2011: எஸ். விட்டல் -- மருத்துவம்
7.   2011: அஹமது அலி -- மருத்துவம்
8.   2011: அவ்வை நடராஜன் -- இலக்கியம்
9.   2012: என். முத்துசாமி -- கலை
10. 2012: பி.கே. கோபால் -- பொது சேவை
11. 2012: டாக்டர் வி. மோகன் -- மருத்துவம்
12. 2013: ஸ்ரீதேவி கபூர் -- கலை
13. 2013: லக்ஷ்மி நாராயண சத்தியராஜூ -- கலை
14. 2013: எஸ்.கே.எம். மயில்நாதன் -- பொது சேவை
15. 2013: ராஜஸ்ரீபதி -- வணிகம்
16. 2013: டாக்டர் டி.வி.தேவராஜன்
17. 2014: சந்தோஷ் சிவன் -- கலை
18. 2014: அஜய்குமார் பரிதா -- அறிவியல்
19. 2014: மல்லிகா ஸ்ரீநிவாசன் -- வணிகம்
20. 2014: டி.பி.ஜேக்கப் -- மருத்துவம்
21. 2014: ஹகீம் சையத் கலீஃபத்துல்லா -- மருத்துவம்
22. 2015: கன்னியாகுமரி - கலை
23. 2015: பி.வி.ராஜாராமன் -- அரசாங்க பணி
24. 2015: ஆர். வாசுதேவன் -- அரசாங்க பணி (மறைவுக்கு பிறகு)
25. 2016: சி.எஸ். தொகுலுவா -- மருத்துவம்
26. 2016: ஸ்ரீநிவாசன் தாமல் கண்டளை -- பொது சேவை
27. 2016: ஏ. முருகானந்தம் -- பொது சேவை
Q12. தமிழகத்திலிருந்து தாதா சாகேப் ஃபால்கே விருது பெற்றவர்கள்:
1. 1982 எல்.வி.ப்ரசாத்
2. 1996 சிவாஜி கணேசன்
3. 2010 கே. பாலச்சந்தர்.
Q13. தமிழ்த்தொண்டு விருதுகள்:
(ஒரு லட்சம் ரொக்கம் + 1 சவரன் தங்கப்பதக்கம் + சான்றிதழ்)
1. திருவள்ளுவர் விருது
2. தந்தை பெரியார் விருது
3. அண்ணல் அம்பேத்கர் விருது
4. பேரறிஞர் அண்ணா விருது
5. பெருந்தலைவர் காமராசர் விருது
6. மகாகவி பாரதியார் விருது
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது
8. தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது
9. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது
தமிழ் புத்தாண்டு விருதுகள் :    பொதுவாக, ஒரு  லட்சம் + 1 சவரன் தங்கப் பதக்கம் + தகுதி சான்றிதழ். 
10. தமிழ்த்தாய் விருது -- (ரூ.5 லட்சம் + கேடயம் + தகுதி சான்றிதழ்)
11. கபிலர் விருது 
12. கம்பர் விருது
13. உ.வே.ச.விருது
14. உமறுப்புலவர் விருது 
15. சொல்லின் செல்வர் விருது 
16. ஜி.யு. போப் விருது 
17. இளங்கோவன் விருது
18. கணினித் தமிழ் விருது
மத்திய அரசால் வழங்கப்படும் செம்மொழி விருதுகள்: 
1. தொல் காப்பியர் விருது 
2. குறள் பீடம் விருது 
3. இளம் அறிஞர் விருது.
Q14. தமிழக புலவர்கள்/எழுத்தாளர்கள்/தலைவர்கள்/பிரபலங்கள் --அடைமொழிகள்/சிறப்பு பெயர்கள்:
1.   திருவள்ளுவர் -- தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெரு புலவர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபாங்கி, முதற் புலவர்.
2.   பாரதியார் -- மகா கவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், விடுதலைக்கவி, மக்கள் கவி, சிந்துக்கு தந்தை, ஷெல்லி தாசன், தமிழிலக்கியத்தின் விடி வெள்ளி, நீடுதுயில் நீக்கப்பாடிவந்த நிலா, எட்டயப்புரத்துக்கவி, புதுக்கவிதையின் தந்தை
3.   பாரதி தாசன் -- புரட்சிக்கவிஞர், பாவேந்தர், புதுமைக்கவிஞர்.
4.   உ.வே. சாமிநாதய்யர் -- தமிழ்த்தாத்தா, மகா மகோபாத்தியாய
5.   தேவநேயப் பாவாணர் - மொழி ஞாயிறு, செந்தமிழ்ச்செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ் பெருங்காவலர் மற்றும் பல.
6.   திருஞான சம்பந்தர் -- தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணுபுரத்தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை.
7.   திருநாவுக்கரசர் -- அப்பர், தாண்டக வேந்தர், வாகீசர், மருள் நீக்கியார், தேசம் உய்ய வந்தவர்.
8.   சுந்தரர் -- வந்தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார்.
9.   மாணிக்க வாசகர் -- அழுது அடியடைந்த அன்பர்.
10. சேக்கிழார் -- அருண்மொழித்தேவர், உத்தம சோழ பல்லவராயன், தெய்வச்சேக்கிழார், தொண்டர் சீர் பரவுவார்.
11. பெரியாழ்வார் -- பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர்.
12. ஆண்டாள் -- சூடிக்கொடுத்த நாச்சியார், வைணவம் தந்த செல்வி, கோதை.
13. திருமங்கையாழ்வார் -- பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப்பொருமால், வேதம் தமிழ் செய்த மாறன், ஆலி நாடன்.
14. நம்மாழ்வார் -- சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன்.
15. குலசேகராழ்வார் -- கூடலர்கோன், கொல்லிகூவலன்
16. திருமழிசையாழ்வார் -- திராவிட ஆச்சாரியார்
17. தொண்டரடிபொடியாழ்வார் -- விப்பிநாராயணன்
18. நம்பியாண்டார் நம்பி -- தமிழ் வியாசர்
19. திரு மூலர் -- முதல் சித்தர்
20. சீத்தலை சாத்தனார் -- தண்டமிழாசான், சாத்தன் நன்னூற் புலவன்
21. திருத்தக்கத் தேவர் - தமிழ் புலவர்களுள் இளவரசன்
22. பிள்ளை பெருமாள் ஐயங்கார் -- அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர்
23. ராமலிங்க அடிகளார் -- வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாதுணர்ந்த பெருமான், சன்மார்க்க்க்கவி, வடலூரார், இறையருள் பெற்ற திருக்குழந்தை
24. இளஞ்சூரியர், முது சூரியர் -- இரட்டைப் புலவர்கள்
25. சிவப்பிரகாசர் - கற்பனைக் களஞ்சியம்
26. வெ. ராமலிங்கம் பிள்ளை -- நாமக்கல் கவிஞர்
27. பெருஞ்சித்தரனார் -- பாவலரேறு
28. அழ.வள்ளியப்பா -- குழந்தை கவிஞர்
29. திரு.வி.கல்யாணசுந்தரனார் -- திரு.வி.க., தமிழ்த்தென்றல், தமிழ் உரைநடையின் தந்தை.
30. புதுமைப் பித்தன் -- சிறுகதை மன்னன்
31. சோமசுந்தர பாரதியார் -- நாவலர்
32. இராபர்ட்-டி-நொபிலி -- தத்துவ போதகர்
33. சூரிய நாராயண சாஸ்திரி -- பரிதிமாற் கலைஞர்
34. இரா. அண்ணாமலைச்செட்டியார் -- தனித்தமிழ் இசைக் காவலர்.
35. டி.கே.சி -- ரசிகமணி
36. உடுமலை நாராயண கவி -- பகுத்தறிவு கவிராயர்
37. கந்தசாமி -- நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை
38. சங்கரதாசு சுவாமிகள் -- நாடகத் தமிழ் உலகின் இமயமலை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
39. வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் -- பிற்கால உரையாசிரியர் சக்கரவர்த்தி
40. பரிதிமாற் கலைஞர் -- திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர்
41. பம்மல் சம்பந்தனார் -- தமிழ்நாடகத் தந்தை
42. ஜெயகாந்தன் -- தமிழ் நாட்டின் மாப்பஸான்
43. வாணி தாசன் -- தமிழ் நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞ்சோறு, பாவலர் மணி
44. அநுத்தமா -- தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்
45. கி.ஆ.பெ.விஸ்வநாதம் -- முத்தமிழ் காவலர்.
46. நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் -- காந்தியக் கவிஞர்
47. அருணகிரிநாதர் - சந்தக்கவி
48. பொ.வே.சோமசுந்தரனார் -- பெருமழிப்புலவர்
49. மு.கதிரேசச் செட்டியார் -- பண்டிதமணி
50. கருமுத்து தியாகராசச் செட்டியார் - கலைத்தந்தை
51. ஆறுமுக நாவலர் -- பதிப்புச் செம்மல்
52. கா. அப்பாதுரையார் -- பன்மொழிப்புலவர்
53. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் - பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர்
54. மா.பொ.சிவஞானம் -- சிலம்புச் செல்வர்
55. சுந்தர ராமசாமி -- பசுவய்யா
56. மாதவய்யர் -- கோணக்கோபாலன்
57. வேங்கடரமணி -- தென்னாட்டு தாகூர்
58. சுரதா -- உவமைக் கவிஞர்
59. கண்ண தாசன் - காரைமுத்துப்புலவர்,வணங்காமுடி, பார்வதி நாதன், கமகப்பிரியன், ஆரோக்கியசாமி
60. கல்கி -- தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
61. சுஜாதா -- தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ்
62. பாலசுப்ரமணியன் - சிற்பி
63. நா. காமராசன் -- வானம்பாடி கவிஞர்.
64. அண்ணாமலை ரெட்டியார் -- காவடிச்சிந்து, கவிராஜன்
65. வா.செ.குழநதைசாமி -- குலோத்துங்கன்
66. ஆ. மாதவன் -- சின்ன ஜானகிராமன்
67. அஞ்சலையம்மாள் -- தென் நாட்டின் ஜான்சிராணி
68. அம்புஜத்தம்மாள் -- காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகள்
69. வ.உ.சிதம்பரனார் -- கப்பலோட்டிய தமிழன்
70. ஈ.வெ.ராமசாமி -- பெரியார், பகுத்தறிவு பகலவன், சுயமரியாதைச்சுடர், வெண்தாடி வேந்தர்
71. அண்ணாதுரை -- அறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா
72. காமராசர் -- பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி
73. ராஜகோபாலச்சாரி -- சி.ஆர், சேலத்து மாம்பழம்
74. மு. கருணாநிதி -- கலைஞர்
75. எம்.ஜி.ராமச்சந்திரன் - புரட்சித்தலைவர்
76. ஜெ. ஜெயலலிதா -- அம்மா, புரட்சித்தலைவி
77. மு.க. ஸ்டாலின் -- தளபதி
78. சிவாஜி கணேசன் -- நடிகர் திலகம்
79. என்.எஸ்.கிருஷ்ணன் -- கலைவாணர்
80. கமலஹாசன் -- உலக நாயகன்
81. ரஜினி காந்த் -- சூப்பர் ஸ்டார்.
82. சாவித்திரி -- நடிகையர் திலகம்.
83. நாகேஷ் -- இந்திய ஜெர்ரி லூயிஸ்
84. வடிவேலு -- வைகைப்புயல்
85. அர்ஜூன் - ஆக்ஷன் கிங்
86. விஜய் -- இளைய தளபதி
87. அஜித் -- அல்டிமேட் ஸ்டார்
88. மனோரமா -- ஆச்சி
Q15. மாவட்டங்கள்: 32
[1] சென்னை: மேலே வரலாற்று சுருக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரலாறு இதற்கும் பொருந்தும். தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் மிகவும் சிறிய மாவட்டம். ஆனால் மக்கள் நெருக்கத்தில் அடர்த்தி அதிகமானது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் வங்காள விரிகுடா இதன் எல்லை. இது, 3 மக்களவை தொகுதிகள், 19 சட்டசபை தொகுதிகள், ஒரு மாநகராட்சியையும், 10 தாலுக்காக்களையும், 10 வருவாய் கோட்டங்களையும் உள்ளடக்கியது.
எல்லைகள்: வங்காள விரிகுடா (கிழக்கு), திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு, வடக்கு), காஞ்சிபுரம் (தெற்கு)
சட்டமன்ற தொகுதிகள்: (16) ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதகிருஷ்ணன் நகர், பெரம்பூர், எழும்பூர் (தனி), அண்ணாநகர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, மைலாப்பூர், சைதாப்பேட்டை, கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), விருகம்பாக்கம், வேளச்சேரி, சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி.
நாடாளுமன்ற தொகுதிகள்: (3): வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை.
ஆறுகள்/கால்வாய்கள்: கூவம், அடையாறு/பக்கிங்ஹாம், ஓட்டேரி. தொழில் வளம்: துறைமுகம், ரயில் பெட்டி தொழிற்சாலை, மோட்டார் வாகனம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சைக்கிள் மற்றும் அதை சார்ந்த தொழிற்சாலைகள், உரத் தொழிற்சாலை, பாதுகாப்பு துறை கனரக டேங்க் தொழிற்சாலையும் மற்றும், எஞ்சின், சீருடை போன்ற இதர தொழிற்சாலைகள், Tata, Infosys, Cognizant, மற்றும் இதர முன்னணி கணினி மென்பொருள் நிறுவனங்கள், தோல் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள், அம்பத்தூர், கிண்டி மற்றும் ஒரகடம் போன்ற தொழிற் பூங்காக்கள்.
சுற்றுலா தலங்கள்: மெரீனா கடற்கரை, கபாலீஸ்வர் கோவில், பார்த்தசாரதி கோவில், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, செயிண்ட் தாமஸ் தேவாலயம், அருங்காட்சியகம், வன விலங்கு பூங்கா, மகாபலிபுரம் சிற்பங்கள். "

{2} கோயம்புத்தூர்: 4850 ச.கி.மீ - 10 சட்டசபை தொகுதிகள் - திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கேரளா இதன் எல்லை. முன் காலத்தில் கோனியமுத்தூர் என அழைக்கப்பட்டது. 1804ல் உருவாக்கப்பட்ட மாவட்டம். நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள, ஒரு தொழில்துறையில் வளர்ந்த மாவட்டம். ஜவுளி நெசவாலைகள் மற்றும் நீர் இறைப்பு மோட்டார் பம்ப்புகள் தயாரிப்பு முக்கிய தொழிலாக உள்ளது. நெசவு ஆலைகள் அதிகமாக இருப்பதால், ""தென் இந்திய மான்செஸ்டர்"" என்றழைக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம், PSG, CIT தொழில்நுட்பகல்லூரிகள்,மருத்துவ கல்லூரி, SAINIK SCHOOL , பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களும் இதர தனியார் கல்வி நிலயங்களும் நிறைந்துள்ளன. விமானப்படை நிர்வாக பயிற்சி கல்லூரி, விமானப்படைத் தளம் உள்ளது.
புகழ் பெற்ற கோடைவாசத்தலம் உதகமண்டலம் செல்ல கோவை நகரமே நுழைவாயில். மருதமலை முருகன் கோவில், ஈஷா தியான மையம் மற்றும் பல கோவில்களும் உள்ளன.

{3} கடலூர்: 30.9.1993 - 9 சட்டசபை தொகுதிகள் - விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் இதன் எல்லை. அன்று உருவாக்கப்பட்ட ஒரு கடலோர மாவட்டம். 2004 ல் சுனாமி, மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம். நெய்வேலி நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் மற்றும் விவசாயமே முக்கிய தொழில் நடவடிக்கைகள். சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் சில் கோவில்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்த மாவட்டத்தில் உள்ளது. கடலூரில் ஒரு துறைமுகம் கட்டுமான நிலையில் உள்ளது.

{4} தர்மபுரி: 10.10.1965 - 5 சட்டசபை தொகுதிகள் - கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், ஈரோடு மாவட்டங்களும் கர்நாடகாவும் இதன் எல்லை. அன்று உருவாக்கப்பட்ட மாவட்டம். சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம். சற்றே பின் தங்கிய மாவட்டம். விவசாயமே முக்கிய தொழில். மாம்பழம் விளைச்சலுக்கு புகழ் பெற்றது.கோழிப்பண்ணை மற்றும் கரும்பளிங்கு கல் தயாரிப்பு இதர தொழில்கள். புகழ் பெற்ற ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி முக்கிய சுற்றுலா தலம்.

{5} திண்டுக்கல்: 1985 -- 6266.64 ச.கி.மீ. - 6 சட்டசபை தொகுதிகள் - தேனி, திருப்பூர், கரூர், மதுரை மாவட்டங்களும், கேரளாவும் இதன் எல்லை. பொதுவாக விவசாயமே முக்கிய தொழில். பூட்டு தயாரிப்புக்கு புகழ் பெற்ற நகரம். பழனி முருகன் கோவில் மற்றும் கொடைக்கானல் கோடை வாசத்தலம் புகழ் பெற்ற இடங்கள்.

{6} ஈரோடு: 17.9.1979 -- 5692 ச.கி.மீ -- 8 சட்டசபை தொகுதிகள் - தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களும், கர்நாடகாவும் இதன் எல்லை. சமூக சீர்திருத்த தந்தை என அழைக்கப்படும் ஈ.வெ.ரா. - பெரியார் - அவர்களின் ஞாபகமாக ""பெரியார் மாவட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயமே முக்கிய தொழில். காவேரி, பவானி,அமராவதி மற்றும் நொய்யல் நதிகளால் விவசாயம் செழித்த மாவட்டம். கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம். கைத்தறி நெசவுக்கு புகழ்பெற்ற மாவட்டம். மஞ்சள் உற்பத்தியில் இந்தியாவில் முன்னணி மாவட்டம்.

{7} காஞ்சிபுரம்: 1.7.1997 -- 4393 ச.கி.மீ -- 11 சட்டசபை தொகுதிகள் - சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் வங்காள விரிகுடா இதன் எல்லை. பல்லவ சாம்ராஜ்ய தலைநகரம். காஞ்சி சங்கர மடம், வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் மற்றும் அநேக கோவில்கள் உள்ள ஒரு முக்கிய சுற்றுலா தலம். விவசாயமே முக்கிய தொழில். பட்டு சேலைகளுக்கு உலகப் புகழ் பெற்றது. மகாபலிபுரம் சிற்பக் கோவில்கள் இதன் எல்லைக்குட்பட்டது.

{8} கன்னியாகுமரி: 1.11.1956 -- 1684 ச.கி.மீ -- 6 சட்டசபை தொகுதிகள் - திருநெல்வேலி மாவட்டமும், கேரளாவும், இந்திய பெருங்கடலும் இதன் எல்லை. ஒரு கடலோர மாவட்டம் - இந்தியாவின் தென் கோடி மாவட்டம் - வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல்,அரபிக்கடல்கள் சந்திக்குமிடம். கன்னியாகுமரி கோவில், கடலில் உள்ள ஒரு தீவுப்பாறையின் மீது அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகான்ந்தர் நினைவு மண்டபம், கடற்கரை சூரிய உதயம்/மறைவு ஆகியவை முக்கிய சுற்றுலா முக்கியத்துவங்கள்.

{9} கரூர்: 30.10.1995 - 2856 ச.கி.மீ -- 4 சட்டசபை தொகுதிகள் - திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்கள் இதன் எல்லை. காவிரி நீர் பாசனத்தால் விவசாயமே முக்கிய தொழில் - கைத்தறி நெசவு முக்கிய தொழில் மற்றும் உலகப் புகழ் பெற்று வெளி நாடு வர்த்தகம் செய்யும் முக்கிய மாவட்டம்.

{10} கிருஷ்ணகிரி: 9.2.2004 -- 6 சட்டசபை தொகுதிகள் - வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களும், கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசமும் இதன் எல்லைகள். விவசாயமே முக்கிய தொழில். இம்மாவட்டத்தின் ஹோசூர் ஒரு மிகப் பெரிய தொழில் நகரமாக வளர்ந்து வருகிறது. ஹோசூர், இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல், மறைந்த சி.ராஜகோபாலாச்சாரி அவர்களின் பிறந்த ஊர். இந்த மாவட்ட்த்தில் விளையும் மாம்பழம் உலகில் புகழ் பெற்றது.

{11} மதுரை: 3741 ச.கி.மீ -- 10 சட்டசபை தொகுதிகள் - தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் இதன் எல்லை. பாண்டிய, நாயக்க மன்னர்களால் ஆளப்பட்ட பகுதி. வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மாவட்டம். விவசாயமே முக்கிய தொழில் - அதில், மல்லிகைப்பூ உற்பத்தியில் உலகப் புகழ் பெற்றது. கைத்தறி நெசவு, குறிப்பாக ""சுங்குடி"" சேலைகள், மற்றொரு முக்கிய தொழில். மீனாட்சியம்மன் கோவில்,திருப்பரங்குன்றம், அழகர் கோவில், திருமலைநாயக்கர் மஹால் போன்றவை கொண்ட முக்கிய சுற்றுலா தலம்.

{12} நாகப்பட்டினம்: 18.10.1991 - 2715 ச.கி.மீ - 6 சட்ட சபை தொகுதிகள் - கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் வங்காளவிரிகுடா இதன் எல்லை. இதன் எல்லைக்குள் அடங்கிய யூனியன் பிரதேசம் புதுச்சேரி. ஒரு கடலோர மாவட்டம் - 2004 சுனாமியின் போது மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம். பொதுவாக விவசாயமே முக்கிய தொழில் - மீன் பிடி தொழிலும் ஒரு பெரிய தொழில் - நாகூர் பள்ளிவாசம் இஸ்லாமியர்களுக்கும், வேளாங்கண்ணி மாதா தேவாலயம் கிறித்துவர்களுக்கும் ஒரு முக்கியமான புனித தலமாக விளங்குகிறது.

{13} நாமக்கல்: 25. 7.1996 - 6 சட்ட சபை தொகுதிகள் -- சேலம், பெரம்பலூர், திருச்சி, கருர், ஈரோடு மாவட்டங்கள் இதன் எல்லை - கோழிப்பண்ணை, முட்டை உற்பத்தி, லாரி போக்குவரத்து, மற்றும் பெருமளவில் விவசாயமே முக்கிய தொழில்கள் -- திருச்செங்கோடு லாரி கட்டுமான தொழிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம்.

{14} நீலகிரி : பிப்ரவ்ரி 1882 - 3 சட்டசபை தொகுதிகள் - கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகம் இதன் எல்லை. மலைப்பகுதி - கோடை வாசத்தலம் - இந்தப் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக முன்னேற்றம் செய்தவர் ஜான் சுல்லிவன் - கோயம்புத்தூர் ஆளுநகராக இருந்தவர். ஆங்கிலேயர்கள் காலத்தில் கோடை கால தலை நகராக விளங்கிய மாவட்டம் - உலகப் புராதனச் சின்னமாகக் கருதப்படும் நீலகிரி மலை ரயில் பாதை, உதகமண்டலம், கூனூர், கோட்டகிரி ஆகியவை முகப் புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள். வருடாந்திர மலர் கண்காட்சி மிகவும் புகழ் பெற்றது. ராணுவத்தின் முப்படை அதிகாரிகளின் உயர் பயிற்சிப்பள்ளி மற்றும் சில ராணுவ மையங்களும் உள்ளன. பில்லியார்ட்ஸ் (Billiards) எனப்படும் மேஜைப்பந்து விளையாட்டு இங்கு தான் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டது.

{15} பெரம்பலூர்: 1.11.1995 - 1752 ச.கி.மீ - 2 சட்டசபை தொகுதிகள் - திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்கள் இதன் எல்லை.விவசாயமே முக்கிய தொழில்.

{16} புதுக்கோட்டை: 14.1.1974 - 4663 ச.கி.மீ - 6 சட்டமன்ற தொகுதிகள் - சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் வங்காள விரிகுடா இதன் எல்லை. தொண்டைமான் மன்னர்களால் ஆளப்பட்டு வந்த குறுநில மன்னர் பகுதியாக இயங்கிய ஒரு பகுதி. விவசாயமே முக்கிய தொழில்.

{17} ராமநாதபுரம்: 4123 ச.கி.மீ -- சிவகங்கை, புதுக்கோட்டை, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் இதன் எல்லை. சேதுபதி மன்னர்களால் ஆளப்பட்டு வந்த குறுநில மன்னர் பகுதி - இந்துக்களின் புனித தலமான ராமநாதசாமி கோவில், ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில் உள்ளது. ராமேஸ்வரம் மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் சொந்த ஊர் ஆகும். உலகப்புகழ் பெற்ற நடிகர் கமல ஹாசன் இந்த மாவட்டத்தைச் (பரமக்குடி) சேர்ந்தவர். விவசாயம், கடல்சார் தொழில் மட்டுமே பொருளதார நடவடிக்கை.

{18} சேலம்: 5237 ச.கி.மீ -- 11 சட்டமன்ற தொகுதிகள் -- தர்மபுரி, விழுப்புரம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் இதன் எல்லை. சேலம் நகரைத் தவிர்த்து, முழுமையாக விவசாயமே முக்கிய தொழில். ஏற்காடு கோடை வாசத்தலம், பிரத்தியேக இரும்பு உருக்காலை, மேட்டூர் அணை, நீர் மின் சக்தி நிலையம், ஜவ்வரிசி தயாரிப்பு, கைத்தறி நெசவு, பழப்பயிர்கள், மரங்கள் அறுவைத் தொழில் மற்றும் விவசாயம் போன்றவை முக்கிய தொழில் நடவடிக்கைகளாகும்.

{19} சிவகங்கை: 15.3.1985 -- 4189 ச.கி.மீ -- சற்றே பின் தங்கிய மாவட்டம் -- புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்கள் இதன் எல்லை. இந்த மாவட்டத்தின் காரைக்குடி பகுதி செட்டியார்கள் பூர்வீக பகுதி. தமிழ்நாட்டின் தொழிற்துறை முன்னேற்றத்தில் இவர்களது பங்க்கு மிகப்பெரியது.காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதியிலுள்ள செட்டியார்களின் இல்லங்கள், மாளிகைகளைப் போல மிக அழகான வேலைப்பாடுடன் கூடியவை. உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவை. காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கல்விக்கழகம் நம் நாட்டிலேயே ஒரே நிறுவனம். பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தமான கோவில். விவசாயமே முக்கிய தொழில்.

{20} தஞ்சாவூர்: 3396.57 ச.கி.மீ -- 8 சட்ட மன்ற தொகுதிகள் -- திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம், முக்கியமாக நெற்பயிர், முக்கிய தொழில். அதனால், இந்தியாவின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. சோழ மன்னர்களால் ஆளப்பட்டு, ஆங்கிலேயர் காலத்தில் கடைசியில் போன்ஸ்லே மன்னர்களால் ஆளப்பட்டு, சுதந்திரத்திற்கு பின் மாவட்டமாக இயங்கிய பகுதி. உலகப் புராதன சின்னங்களான தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரம் அய்ராவதீஸ்வரர் ஆலயம் மற்றும் பல புராதன கோவில்கள் உள்ளன. கர்நாடக சங்கீத இசைக்கு புகழ் பெற்ற மாவட்டம். வீணை தயாரிப்பில் முன்னணி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள திருவையாற, கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் நினைவாக நடத்தப்படும் வருடாந்திர கர்நாடக இசை விழா மிகவும் முக்கியமான நிகழ்ச்சி. சாஸ்த்ரா பல்கலைக்கழகம், மருத்துவ கல்லூரி மற்றும் பல கல்வி நிலயங்கள் உள்ளன.

{21} தேனி: 7.7.1996 -- 2889 ச.கி.மீ -- 4 சட்ட மன்ற தொகுதிகள் -- திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் கேரளா இதன் எல்லை. மிக அழகான இயற்கை சூழ்நிலை கொண்ட மாவட்டம் -- விவசாயமே முக்கிய தொழில் -- முக்கியமாக, ஏலக்காய், திராட்சை, காஃபி.

{22}. தூத்துக்குடி: 20.10.1986 - 4745 ச.கி.மீ -- 6 சட்ட மன்ற தொகுதிகள் - ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் இதன் எல்லை. 1528ல் டச்சு நாட்டவர்களால் நிறுவப்பட்ட நகரம். விவசாயத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகம், ஸ்பிக் நிறுவனம், சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் தொழில் மற்றும் பல தொழிற்சாலைகள் இந்த மாவட்டத்தில் அமைந்து உள்ளது. சுதந்திர போராட்டத்தில் இந்த மாவட்டத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது -- வ.உ.சிதம்பரனார் மற்றும் பலர் - கடற்கரை திருச்செந்தூர் முருகன் கோவில், ஸ்ரீவைகுண்டம்கோவில் ஆகியவை முக்கியமான ஆன்மீக சுற்றுலா மையம். ""எட்டப்பன்"" என்ற சொல் உருவாவதற்கு காரணமான எட்டயபுரம் (வீரபாண்டிய கட்டபொம்மன் எட்டப்பன் என்பவரால் ஆங்கிலேயர் வசம் காட்டிக்கொடுக்கப்பட்டார்) இந்த மாவட்டத்தில் உள்ளது.,

 {23} திருச்சிராப்பள்ளி: 4404 ச.கி.மீ -- 9 சட்ட மன்ற தொகுதிகள் -- புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் இதன் எல்லை. காவிரிக் கரையில் அமைந்துள்ள திருச்சி நகரைத் தவிர்த்து, விவசாயமே முக்கிய தொழில். திருச்சி நகரம் சற்றே தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்த நகரம் -- BHEL, பொன்மலை ரயில்வே தொழிற்சாலை, ராணுவ தளவாட தொழிற்சாலை, ரயில்வே மண்டல அலுவலகம் மற்றும் பல தொழிற்சாலைகள் உள்ளன -- 100 ஆண்டுகளுக்கும் மேலான, அப்துல் கலாம் அவர்கள் மேற்கல்வி பயின்ற, செயிண்ட் ஜோசஃப் கல்லூரி, தேசிய தொழிற்நுட்பக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைகழகம் மற்றும் பல தலைசிறந்த கல்வி நிலயங்கள் உள்ளன. மலைக்கோட்டை விநாயகர் கோவில், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், வயலூர் போன்ற புனித தலங்கள் இங்கு அமைந்துள்ளன.

{24} திருநெல்வேலி: 1.9.1790 - 6823 ச.கி.மீ - 10 சட்ட மன்ற தொகுதிகள் -- விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கேரளா இதன் எல்லை. தாமிரபரணி, மணிமுத்தார் மற்றும் சில சிறு நதிகளால் விவசாயமே முக்கிய தொழில் - திருநெல்வேலி, பாளையங்கோட்டை நகர்களே தொழில் மற்றும் கல்விக்கு முக்கிய இடங்களாகும். பாளையங்கோட்டை செயிண்ட் ஜான் கல்லூரி, சிறைச்சாலை குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், குற்றாலம் மற்றும் மணிமுத்தார் நீர்வீச்சிகள்,75 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கொண்ட தெய்வச்செயல்புரம், 1581ல் கட்டப்பட்ட மணப்பாடு தேவாலயம் ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்கள்.

{25} திருப்பூர்: பிப்ரவரி 2009 - 5186 ச.கி.மீ -- 8 சட்டசபை தொகுதிகள் -- கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்கள் இதன் எல்லை. பின்னலாடை மற்றும் ஜவுளி நெசவு மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலே முக்கிய தொழில். விவசாயம் அதிக அளவில் இல்லை -- அமராவதி அணை, முதலைப் பூங்கா, திருமூர்த்தி அணை, இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம், சில இந்து கோவில்கள் இந்த மாவட்டத்தின் சுற்றுலா மையங்கள்.

{26} திருவள்ளூர்: 1991 - 3422 ச.கி.மீ -- 10 சட்ட மன்ற தொகுதிகள் - வேலூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரப்பிரதேசம் இதன் எல்லை. சென்னை மாநகரத்தின் ஒரு விரிவுப் பகுதி என்றேகூறலாம். ஓரளவுக்கு தொழில் துறையில் முன்னேற்றமடைந்த மாவட்டம். விவசாயமும் சிறிதளவில் நடந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் பெரிய தொழிற்பேட்டை மற்றும் பல் பெரிய, நடுத்தர மற்றும்சிறிய தொழிற்சாலைகள் உள்ளன. திருவள்ளூரைச் சுற்றியும் பல தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. இந்த மாவட்டத்தின் திருத்தணி புகழ் பெற்ற முருகன் தலம்.

{27} திருவண்ணாமலை: அக்டோபர் 1989 -- 6191 ச.கி.மீ -- வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் இதன் எல்லை. சட்டமன்ற தொகுதிகள் -- விவசாயம் சார்ந்த மாவட்டம்.திருவண்ணாமலை நகரம் அருணாச்சலேஸ்வரர் கோவில், ரமணாஸ்ரமம் புகழ் பெற்றது. கார்த்திகை தீபம் மிகப் பெரிய ஆன்மீக நடவடிக்கை -- இம்மாவட்டத்தின், ஆரணி பட்டு புடவைகளுக்கும், வந்தவாசி இந்திய சரித்திரத்தில் முக்கிய இடமாகவும், செய்யார் தோல் தொழிலில் புகழ் பெற்ற இடங்கள். அரிசி ஆலைகள் நிறைந்த மாவட்டம். பெண்ணையார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலம்.

{28} திருவாரூர்: 1.1.1997 -- 22374 ச.கி.மீ -- 4 சட்டமன்ற தொகுதிகள் -- நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் சார்ந்த மாவட்டம் -- தியாகராஜர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி (DMK) இந்த மாவட்டத்தை சேர்ந்தவர். கர்நாடக இசைக்கும் புகழ் பெற்ற மாவட்டம். திருவாரூர் தேர்த் திருவிழா (மார்ச் - ஏப்ரல்) உலகப் புகழ் பெற்றது.

{29} வேலூர்: 30.9.1989 - 6077 ச.கி.மீ -- 13 சட்டமன்ற தொகுதிகள் -- திருவள்ளுவர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரப்பிரதேசம் இதன் எல்லை. விவசாயமே முக்கிய தொழில் - இந்திய சரித்திரத்தில் ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. வேலூர் நகரில் உள்ள கோட்டையில், மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஜலகண்டேஸ்வரர் கோவில், ஒரு மசூதி மற்றும் ஒரு தேவாலயம் உள்ளது. இந்த கோட்டையில் தான் 1806ல் இந்திய சுதந்திரத்தின் போராட்டத் தொடக்கம் துவங்கியது. கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி, வேலூர் தொழிற்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பல கல்வி நிலையங்கள் உள்ளன. குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் தோல் பதனிடும் தொழில் பெருமளவில் உள்ளது. ஏலகிரி மலை, ஷோலிங்கர் நரசிம்மசாமி கோவில், வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் பொற்கோவில், வள்ளிமலை, அமிர்தி காடுகள் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

{30} விழுப்புரம்: 30.9.1993 -- 7194 ச.கி.மீ -- 11 சட்டமன்ற தொகுதிகள் -- காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் வங்காள விரிகுடா இதன் எல்லை. விவசாயமே முக்கிய தொழில். ஜிஞ்சி கோட்டைஒர் சுற்றுலா தலம்.

{31} விருதுநகர்: 4243 ச.கி.மீ -- 7 சட்டமன்ற தொகுதிகள் -- சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களும், கேரளாவும் இதன் எல்லை. விவசாயமே முக்கிய தொழில் -- விருதுநகரைச் சுற்றி பருத்தி நூற்பாலைகள், சமையல் எண்ணெய் ஆலைகள் ஆகியவையும், மாவட்டத்தில் மிளகாய், பருப்பு வகை மற்றும் பருத்தி உற்பத்தி ஆகியவை முக்கிய விளைச்சல் பொருட்கள். சுதந்திர வீரர், ஏழைகளின் காப்பாளன், கருப்பு காந்தி, அரசியலில் முக்கியமானவர் எனப்போற்றப்படும் தலைவர் காமராஜர் பிறந்த ஊர். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் தயாரிப்பிலும், ராஜபாளையம் சுண்ணாம்பு தயாரிப்பு மற்றும் வேட்டைக்கு மிகப் பயன்படும் ஒரு சிறப்பு வகை நாய்களுக்கும் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில் புனித சுற்றுலாத்தலம். இக்கோவிலின் கோபுரம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அரசு முத்திரையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

{32} அரியலூர்: 1.1.2001/23.11.2007 -- 1949 ச.கி.மீ -- 2 சட்டமன்ற தொகுதிகள் -- கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயமே முக்கிய தொழில் - இதனுடன்சிமெண்ட் தொழிற்சாலைகள், பீங்கான் தொழிலும் முக்கிய பொருளாதார நடவடிக்கை. பூமிக்கடியில் நிறைய லிக்னைட் - பழுப்பு நிலக்கரி - கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனால் (ராஜ ராஜ சோழனின் மைந்தன்) கட்டப்பட்ட உலகப் புராதனச் சின்னமான கங்கைக்கொண்ட சோழபுரம் கோவில் இந்த மாவட்டத்தில் உள்ளது. "
Q16. சுதந்திரத்திற்கு பிறகு புதிய மாவட்டங்கள் உருவான காலக்கட்டம்:
02.10.1965: தர்மபுரி - சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது
14.01.1974: புதுக்கோட்டை - திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது
17.09.1979: ஈரோடு - கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது
15.03.1985: விருதுநகர் மற்றும் சிவகங்கை -- மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்த்திலிருந்து பிரிக்கப்பட்டது
15.09.1985: திண்டுக்கல் - மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
20.10.1986: தூத்துக்குடி -- திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
30.09.1989: திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்கள் - வட ஆற்காடு மாவட்டம் பிரிக்கப்பட்டது
18.10.1991: நாகப்பட்டினம் -- தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது
30.09.1993: கடலூர் மற்றும் விழுப்புரம் -- தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
01.11.1995: கரூர் மற்றும் பெரம்பலூர் - திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.
25.07. 1996: தேனி - மதுரை மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.
01.01.1997: திருவாரூர் - தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
01.01.1997: நாமக்கல் -- சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.
01.07.1997: காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் -- செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.
09.02.2004: கிருஷ்ணகிரி -- தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.
23.11.2007: அரியலூர் -- பெரம்பலூர் மாவட்ட்த்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது
22.02.2009: திருப்பூர் - கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது."
Q17. தமிழ்நாட்டு அரசாங்க முக்கிய நிறுவனங்கள்/அமைப்புகள் :
"1. தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் -- Tamilnadu State Agricultural Marketing Board -- TNSAMB -- 1970 -- சென்னை -- வேளாண் பொருட்கள் விற்பனை மேம்பாடு."
"2. தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை --Tamilnadu Horticulture Development Agency -- TANHODA -- சென்னை -- 2004 --தேசிய தோட்டக்கலை திட்டம் (National Horticulture Mission) செயல்பாடு, சொட்டு நீர் பாசனம் மேம்பாடு போன்றவை."
"3. தமிழ்நாடு தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் -- Tamilnadu Horticultural Producers' Cooperative Enterprises Ltd., TANHOPE -- சென்னை."
4. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் - Tamilnadu Cooperative Milk Producers' Federation Ltd., -- AAVIN -- (ஆவின்) -- சென்னை 1958 -- அம்பத்தூர், மாதவர, ஷோளிங்கர் ஆகிய இடங்களில் தொழிற்கூடங்கள் உள்ளன.
"5. தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி குழு --Tamilnadu Livestock Development Agency -- TNLDA -- 2008 சென்னை "
"6. தமிழ்நாடு மீன் வளர்ப்பு மேம்பாட்டுக் கழகம் -- Tamilnadu Fisheries Development Corporation Ltd., -- TNFDC -- 2012 -- நாகப்பட்டினம் -- தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்துடன் இணைந்தது."
7. தமிழ்நாடு மீன்வள கூட்டுறவு கூட்டமைப்பு -- Tamilnadu State Apex Fisheries Cooperative Federation Ltd., -- TAFCOFED -- 2012 - நாகப்பட்டினம் -- தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துடன் இணைந்தது.
"8. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் --Tamilnadu Public Service Commission -- TNPSC -- 1929/1970 -- சென்னை -- 1929ல் தொடங்கப்பட்டு, 1970 முதல் இப்பெயர் கொண்டு இயங்குகிறது. இதில் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். "
9. தமிழ்நாடு மின்சார வாரியம் --Tamilnadu Electricity Board Ltd., -- TNEB -- 1957 -- சென்னை.
10. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் --Tamilnadu Generation and Distribution Co.Ltd -- TANGEDCO -- 2010 -- சென்னை
11. தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் -- Tamilnadu Transmission Corporation Ltd., -- 2010 -- சென்னை.
12. தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை --Tamilnadu Energy Development Agency -- 1985 -- சென்னை
13. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் --Tamilnadu Industrial Investment Corporation Ltd., -- TIIC -- 1949 -- சென்னை
14. தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி லிட்., -- Tamilnadu State Apex Cooperative Bank., -- 26.11.1905 -- சென்னை -- சென்னையில் மட்டும் சுமார் 44 கிளைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
15. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் -- Tamilnadu Civil Supplies Corporation -- TNCSC -- 1956/1972 -- சென்னை.
16. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் -- State Industries Promotion Corporation of Tamilnadu Ltd., -- SIPCOT -- 1972 -- சென்னை
17. தமிழ்நாடு தொழிற்துறை முன்னேற்ற குழுமம் -- Tamilnadu Industrial Development Corporation Ltd., --- TIDCO -- 1965 -- சென்னை
18. தமிழ்நாடு சிறுதொழில் முன்னேற்றக் குழுமம் --Tamilnadu Small Industries Development Corporation Ltd, -- SIDCO -- 1970 -- சென்னை
19. தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் -- Electronics Corporation of Tamilnadu Ltd., -- ELCOT -- 1997 -- சென்னை
20. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் லிட்.,--Tamilnadu Newsprint & Papers Ltd., -- TNPL -- 1979 -- சென்னை -- இதன் தொழிற்சாலை கரூரில் உள்ளது.,
21. தமிழ்நாடு சீமைக்காரை கழகம் -- Tamilnadu Cement Corporation Ltd., -- TANCEM -- 1978 -- Chennai
22. தமிழ்நாடு வெள்ளைக்கல் நிறுவனம் -- Tamilnadu Magnesite Ltd., -- TANMAG -- -- 1979 -- சேலம்
23. தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் --Tamilnadu Industrial Explosives Ltd., -- TEL -- 1983 -- சென்னை -- இதன் தயாரிப்பு மையம் காட்பாடியின் (வேலூர்) அருகில் உள்ளது
24. தமிழ்நாடு கனிம நிறுவனம் --Tamilnadu Minerals Ltd., -- TAMIN -- 1978 -- சென்னை
25. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சி) -- Tamilnadu Small Industries Corporation Ltd., -- TANSI -- 1963 -- சென்னை.
26. தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் -- Tamilnadu Sugar Corporation Ltd., -- TASCO -- 1974 -- சென்னை
27. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் -- Tamilnadu Housing Board -- TNHB -- 1961 -- சென்னை
28. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் -- Tamilnadu Water Supply & Drainage Board -- TWAD - 1971 -- சென்னை
29. சென்னை பெருநகர் வளர்ச்சி நிறுவனம் -- Chennai Metropolitan Development Authority -- CMDA -- 1974 -- சென்னை
30. சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் -- Chennai Metropolitan Water Supply & Sewage Board., -- CMWSSB -- 1978 -- சென்னை.
31. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் -- Tamilnadu Slum Clearance Board -- TNSCB -- 1970 -- சென்னை,
32. தமிழ்நாடு மருத்துவ சேவை கார்ப்பொரேஷன் லிட் -- Tamilnadu Medical Services Corporation Ltd., -- TNMSC -- 1994 -- சென்னை
33. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ ஆப் டெக்ஸ்) -- Tamilnadu Handloom Weavers' Cooperative Society Ltd., -- COOPTEX -- 1935 -- சென்னை.
34. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் --State Express Transport Corporation (Tamilnadu) Ltd., -- (SETC) 1996 -- சென்னை ,
35. பெருநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிட்., -- Metropolitan Transport Corporation (Chennai) Ltd., -- 1996 -- சென்னை
36. சென்னை மெட்ரோ ரயில் லிட் -- Chennai Metro Rail Ltd., -- CMRL -- - 2007 -- சென்னை
37. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்-- Poompuhar Shipping Corporation Ltd., -- 1974 -- சென்னை
38. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் -- Tamilnadu State Transport Corporation Ltd., -- TNSTC -- 1972 -- சென்னை -- மண்டலங்கள்: வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், ஸ்ரீரங்கம், மடுரை, திருநெல்வெலி.
39. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் -- Tamilnadu Pollution Control Board -- TNPCB -- 1982 -- சென்னை
40. தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் -- (டாஸ்மாக்) -- Tamilnadu State Marketing Corporation Ltd., -- 1983 -- சென்னை
41. தமிழ்நாடு சுற்றுலா கழகம் --Tamilnadu Tourism Development Corporation -- TTDC -- 1971 -- சென்னை
42. தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகம் -- Tamilnadu Arasu Cable TV Corporation Ltd., -- 2007 -- சென்னை
43. தமிழ்நாடு திட்டக் குழு -- Tamilnadu Planning Commission -- சென்னை.
"இவை தவிர்த்து, காவலர் வீட்டு வசதிக் கழகம், இஸ்லாமியர்களுக்காக WAKF BOARD மற்றும் Tamilnadu Haj Committee, Tamilnadu Minorities Economic Development Corpn. Ltd., போன்று பல வகை மக்கள் மற்றும் தொழில் சார்ந்த, நல மற்றும் மேம்பாட்டு கழகங்கள் பல உள்ளன. "
Q18. தமிழ்நாட்டின் தலை சிறந்த நூலகங்கள்:
1. அண்ணா நூற்றாண்டு நூலகம்: 15-9-2010 - சென்னை -- சுமார் 3.75 லட்சம் சதுர அடி இடம் கொண்டு, பல லட்சம் புத்தகங்கள், தலை சிறந்த பத்திரிகைகள், மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் கொண்ட ஒரு தலைசிறந்த மற்றும் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய ஒரு நூலகம்.
2. கன்னிமாரா பொது நூலகம் : 5.12.1896 - இந்த நூலகம் ராபர்ட் பர்க் கன்னிமாரா என்ற சென்னை மாகாண ஆளுநர் - 1886 - 1890 - பெயர் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான புத்தகங்களும் சகல வசதிகளும் கொண்ட நாட்டின் முன்னணி நூலகம். ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டக (depository)நூலகம்.
3. சரஸ்வதி மஹால் நூலகம்: 19வது நூற்றாண்டில்-(1820) மராத்திய மன்னர்களால் தொடங்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட நூலகம். 17வது நூற்றாண்டிலிருந்து பல லட்சம் கையெழுத்து பிரதிகளும், அரசாங்க ஆவணங்களும் பல லட்சம் புத்தகங்களும் அடங்கிய பெரிய நூலகம்.
4. அரசினர் கீழத்திசைச் சுவடி நூலகம், சென்னை.
5. சென்னை பல்கலைக்கழக நூலகம் - சென்னை - 1907ல் தொடங்கப்பட்டது.
6. அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம் -- 1929ல் தொடங்கப்பட்டது.
7. டாக்டர். உ.வே.ச நூலகம், சென்னை - 1947ல் தொடங்கப்பட்டது.
8. மறைமலை அடிகளார் நூலகம், சென்ன்னை -- 1958ல் தொடங்கப்பட்டது.
9. மதுரை காமராசர் பல்கலைக் கழக நூலகம், சென்னை -- 1966ல் தொடங்கப்பட்டது.
10.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம், சென்னை -- 1970ல் தொடங்கப்பட்டது.
11.தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நூலகம் -- 1981ல் தொடங்கப்பட்டது.
Q19. தமிழ்நாட்டின் முன்னாள்/இந்நாள் நாளிதழ்கள்/இதழ்கள்/பத்திரிகைகள்:
முன்னாள்:
1.   இந்தியா, விஜயா, கர்மயோகி, பால பாரதம் (ஆங்கிலம்) -- பாரதியார்
2.   சுதேசமித்திரன் - ஜி.சுப்ரமணிய அய்யர்
3.   குயில், பொன்னி -- பாரதிதாசன்
4.   காவியம் - சுரதா
5.   திராவிடநாடு -- அண்ணா
6. குடியரசு, விடுதலை, ரிவோல்ட் (ஆங்கிலம்) - பெரியார்
7. லோக மித்ரன் -- நாமக்கல் கவிஞர்
8. தென்றல், முல்லை -- கண்ணதாசன்
9. எழுத்து, சுதந்திரச்சங்கு -- சி.சு. செல்லப்பா
10. பாலபாரதி -- வா.வே.சு.அய்யர்
11. தமிழ்நாடு -- வரதராசுலு நாயுடு
12. விமோசனம், சுயராஜ்யம் - ராஜாஜி
13. லோகமித்ரன் -- நாமக்கல் கவிஞர்
14. மணிக்கொடி -- பி.எஸ்.ராமைய்யா
15. பிரபஞ்சமித்ரன், இந்திய தேசாந்திரி, ஞானபானு -- சுப்ரமணிய சிவா
16. ஞானசாகரம் - மறைமலையடிகள்
17. செங்கோல் -- மா.பொ.சி
18. பாரதி - வ.உ.சி
19. சங்க இலக்கியம், இலக்கியம் - சி. இலகுவனார்
20. மனித வீறு -- சாலினி இளந்திரையன்
21. சாவி -- சா. விஸ்வநாதன்
22. சூர்யோதயம் - நீலகண்ட பிரம்மச்சாரி
23. ஜனசக்தி -- ப. ஜீவாநந்தம்
இந்நாள்
1.   கல்கி -- ரா. கிருஷ்ணமூர்த்தி
2.   ஆனந்த விகடன் -- எஸ்.எஸ்.வாசன் - 1928 - இன்றைய நிலையில், ஜூனியர் விகடன், சுட்டி விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், சக்தி விகடன், மோட்டார் விகடன், பசுமை விகடன், டாக்டர் விகடன், டைம் பாஸ், அவள் மணமகள், அவள் கிச்சன் மற்றும் ஆன்ந்த விகடன் தீபாவளி மலர் ஆகியவை இந்த குழுமத்தின் இதர பிரசுரங்கள்.
3.   குமுதம் -- பி.வி.பார்த்தசாரதி, எஸ்.ஏ.பி அண்ணாமலை ஆகியோரால் 1947ல் தொடங்கப்பட்டது. குமுதம் ரிப்போர்டர், குமுதம் சிநேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம் ஆகியவை இதன் இதர பிரசுரங்கள்.
4.   குங்குமம் -- 1977ல் கலாநிதி மாறன் குழுமத்தால் தொடங்கப்பட்ட வார இதழ் .
5.   துக்ளக் -- சோ. ராமசாமி அவர்களால் 1970ல் தொடங்கப்பட்ட ஒரு அரசியல், சமுதாயம் சார்ந்த வார பத்திரிகை.
6.   நக்கீரன் -- ரா. கோபால் அவர்களால் தொடங்கப்பட்ட அரசியல், சமுதாய நிகழ்வுகள் சார்ந்த வார பத்திரிகை.
7.   மங்கையர் மலர் - பெண்களுக்காகவே நடத்தப்படும் ஒரு வார இதழ்.
8.   புதிய தலைமுறை -- நியூ ஜெனெரேஷன் மீடியா நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. கல்வி மற்றும் அரசியல் சார்ந்த வார இதழ்.
9.   தினமணி -- 1933ல் தொடங்கப்பட்ட இந்த நாளிதழை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்துகிறது.
10. தினத்தந்தி -- 1942 ல் எஸ்.பி.ஆதித்தனார் அவர்களால் தொடங்கப்பட்ட நாளிதழ்.
11. தினகரன் -- 1977ல் கே.பி.கந்தசாமி அவர்களால் தொடங்கப்பட்ட நாளிதழ்.
12. தினமலர் -- 1951ல் டி.வி.ராமசுப்பைய்யர் அவர்களால் தொடங்கப்பட்ட நாளிதழ்.
13. தி இந்து -- இந்து குழுமத்தால் நடத்தப்படும் தமிழ் நாளிதழ்.
14. தி இந்து (ஆங்கிலம்) -- 1878ல், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், கேசவராவ் பந்துலு, சுப்பராவ் பந்துலு, ஜி.சுப்ரமணிய அய்யர், எம். வீர்ராகவாச்சாரியார் ஆகியோர்களால் தொடங்கப்பட்டது. நம்நாட்டின் மிக பழமையான, மதிப்பிற்குரிய மற்றும் அதிகமாக சுழற்சியில் இருக்கும் ஒரு ஆங்கில நாளிதழ்.
15. தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் -- 1932ல் பி.வரதராஜூலு நாயுடு அவர்களால் இந்தியன் எக்ஸ்பிரஸ் என தொடங்கப்பட்ட ஆங்கில நாளிதழ். பிற்காலத்தில் கோயங்கா குழுமத்தால் நடத்தப்படுகிறது.
16. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா : 1838ல் தொடங்கப்பட்ட ஆங்கில நாளிதழ்.
இவை தவிர இன்னும் பல தமிழ், ஆங்கில நாளிதழ்கள், வார/மாத இதழ்களும் உள்ளன. "
Q20. தமிழ்நாட்டு அணைகள்:
1.   ஆத்துப்பாளையம் -- கரூர் -- நொய்யல் ஆறு
2.   ஆழியார் ---பொள்ளாச்சி -- ஆழியாறு
3.   அமராவதி -- உடுமலைப்பேட்டை (திருப்பூர்) -- அமராவதி
4.   பவானிசாகர் -- ஈரோடு -- பவானி ஆறு
5.   கல்லணை -- திருச்சி -- காவேரி -- 2ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பழமையான அணை.
6.   காமராஜ் சாகர் -- நீலகிரி
7.   கொடிவெறி -- கோபிச்செட்டிப்பாளையம் - ஈரோடு -- பவானி
8.   கிருஷ்ணகிரி -- தென்பெண்ணை ஆறு
9.   குப்பநத்தம் -- திருவண்ணாமலை -- சோலையாறு
10. கீழணை -- கும்பகோணம் அருகில் -- கொள்ளிட ஆறு
11. மஞ்சளார் -- திண்டுக்கல் -- மஞ்சளாறு
12. மேட்டூர் -- சேலம் -- காவேரி
13. முக்கடல் -- நாகர்கோவில் -- வம்பாறு
14. நல்லதங்காள் -- தாராபுரம் -- திருப்பூர்
15. ஒரத்துப்பாளையம் -- திருப்பூர் -- நொய்யல்
16. பாபநாசம் -- திருநெல்வேலி
17. பேச்சிப்பாறை -- நாகர்கோவில் -- கொடயாறு
18. பெரும்பள்ளம் -- சத்தியமங்கலம் -- பவானி.
19. பெருஞ்சாணி -- கன்னியாகுமரி
20. சாத்தனூர் -- திருவண்ணாமலை -- பெண்ணையார்
21. சண்முகனாத்தி -- தேனி -- சண்முகா
22. சோலையார் -- கோயம்புத்தூர் -- சாலக்குடி
23. சோத்துப்பாறை -- தேனி -- வராக ஆறு.
24. மேலணை -- முக்கொம்பு - திருச்சி -- காவேரி
25. வைகை -- தேனி -- வைகை
26. வரட்டுப்பள்ளம் -- ஈரோடு
Q21. தமிழ்நாட்டின் நீர்வீழ்ச்சிகள்:
1.   அகஸ்தியர் -- பாபநாசம் -- திருநெல்வேலி
2.   ஆகாய கங்கை -- கொள்ளிமலை -- நாமக்கல்
3.   அய்யனார் -- ராஜபாளையம், விருதுநகர் -- மேற்கு தொடர்சி மலை
4.   கேத்தரின் -- கோத்தகிரி - நீலகிரி.
5.   குற்றாலம் -- தென்காசி , திருநெல்வேலி -- சிட்டாறு, மேற்கு தொடர்ச்சி மலை.
6.   ஹோகேனக்கல் -- தர்மபுரி -- காவேரி.
7.   காட்டாறி -- கூனூர், நீலகிரி.
8.   கிளியூர் -- ஏற்காடு, சேலம் -- கிழக்கு தொடர்ச்சி மலை.
9.   கோரையார் -- பெரம்பலூர் -- கிழக்கு தொடர்ச்சி மலை
10. கும்பக்கரை -- பெரியகுளம், தேனி -- கொடைமலையில் உள்ளது.
11. குட்லாடம்பட்டி -- வாடிப்பட்டி, மதுரை
12. லா -- கூனூர், நீலகிரி
13. மங்கி (குரங்கு) -- வால்பாறை
14. பைக்காரா -- ஊட்டி, நீலகிரி
15. செங்குப்பட்டி -- கோயம்புத்தூர்
16. சிறுவாணி -- கோயம்புத்தூர் - மேற்கு தொடர்ச்சி மலை.
17. சுருளி -- கம்பம், தேனி -- மேகமலை
18. தலையார் -- பழநி மலை -- திண்டுக்கல் -- தமிழ் நாட்டில் உயரமான நீர்வீழ்ச்சி - 975 அடி உயரம்.
19. தீர்ப்பரப்பு -- கன்னியாகுமரி -- கொடையாறு
20. உள்ளகார்வி -- நாகர்கோவில் -- மேற்கு தொடர்ச்சி மலையில்.
21. வைதேகி -- கோயம்புத்தூர்
22. வட்டப்பாறை -- கன்னியாகுமரி -- பழயாறு.
Q22. தமிழ்நாட்டின் முக்கிய பெரிய துறைமுகங்கள்:
1.சென்னை துறைமுகம்: 1881 - இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகம் (நவசேவா முதல்) -- மூன்றாவது பழமையான துறைமுகம்.
2. எண்ணூர் துறைமுகம்: 2001 -- காமராஜர் போர்ட் லிமிடெட் என்ற பொதுத்துறை நிர்வாகமாக செயல்படுகிறது.
3. தூத்துக்குடி துறைமுகம்: ஜூலை 1974.
இவைத் தவிர்த்து, கொலச்சேல் (கன்னியாகுமரி) (கட்டுமான நிலையில்), காட்டுப்பள்ளி (எண்ணூர் அருகில்), மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் துறைமுகங்கள் பல மேம்பாட்டு நிலைகளில் உள்ளன.
Q23. விமான நிலையங்கள்:
1.சென்னை சர்வதேச விமான நிலையம்: 1910 ல் தொடங்கப்பட்டது. இங்கு உள்நாட்டு விமான நிலையம் காமராஜர் பெயரிலும், வெளிநாட்டு விமான நிலையம் அறிஞர் அண்ணா பெயரிலும் இயங்குகிறது.
2.கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம்: 1940 ல் தொடங்கப்பட்டது. 1987லிருந்து சர்வதேச விமான நிலையமாக உயர்த்தப்பட்டது.
3.திருச்சி சர்வதேச விமான நிலையம்: 
4.மதுரை
Q24. கல்வி நிலையங்கள்:
Q25. மாநில பல்கலை கழகங்கள்:
1.   அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
2.  அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
3.  அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
4.   பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்ப்த்தூர்
5.   பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
6.  மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை
7.  மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
8.  அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்
9.  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம், சென்னை
10. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
11. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்
12. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை
13. தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
14. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்
15. மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை
16. தமிழ்நாடு ஆசிரியர்கள் பயிற்சி பல்கலைக்கழகம், சென்னை
17. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், சென்னை
18. தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், சென்னை
19. தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
20.தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்
Q26. மத்திய அரசு பல்கலைக்கழகங்கள்:
1.  இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (IIT), சென்னை
2.   இந்தியன் தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி நிலையம், காஞ்சிபுரம் (IIIT)
3.   தேசிய தொழிற்நுட்பக் கல்விக்கழகம், திருச்சி (NIT)
4.   இந்திய மேலாண்மை கல்விக்கழகம், திருச்சி (IIM)
5.   மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்
6.   சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி தொழிற்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரி, கோயம்புத்தூர்
7.   இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் க்ராப் ப்ராஸ்ஸிங் தொழிற்நுட்பக்கல்லூரி, தஞ்சாவூர்
8.  காந்திகிராம் கிராமப்புற பல்கலைக்கழகம், காந்திகிராமம்
9.   பாரதிதாசன் மேலாண்மை கல்விக்கழகம், திருச்சி
10.தேசிய ஜவுளி வடிவமைப்பு கல்விக்கழகம், சென்னை
11.இந்திய கைத்தறி கல்விக்கழகம், சேலம்
12. மத்திய உவர்நீர் மீன்வளர் கல்விக்கழகம், சென்னை"
Q27. மத்திய மற்றும் மாநில இணை பல்கலைக்கழகங்கள்:
1. இந்தியன் கணித அறிவியல் கல்விக்கழகம், சென்னை Indian Institutute of Mathematical Sciences.
2. இந்திய கடல்சார் கல்விக்கழகம், சென்னை - Indian Maritime University
3. மத்திய நெகிழி தொழிற்நுட்ப கல்விக்கழகம், சென்னை -- Central Institute of Plastics Engineering & Technology.
4. சென்னை கணிதவியல் கல்விக்கழகம், சென்னை - Chennai Mathematical Institute.
5. அண்ணா மேலாண்மை கல்வி கழகம், சென்னை -- Anna Institute of Management Studies
6. மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி கல்விக்கழகம், காரைக்குடி -- Central Electro Chemical Research Institute
7. தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை -- Tamil Virtual Academy
Q28. மருத்துவ கல்லூரிகள்:
1. மெட்ராஸ் மருத்துவ கல்லூரி - சென்னை - 1835 - நம் நாட்டின் இரண்டாவது
பழமையான மருத்துவ கல்லூரி (கொல்கத்தா - 1835 - முதல்).
2. ஸ்டான்லி மருத்துவ கல்லூரி - 1938 -- சென்னை
3. கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி - 1960 - சென்னை
4. மதுரை மருத்துவ கல்லூரி - 1954 - மதுரை.
5. இவை தவிர்த்து கீழ்க்கண்ட இடங்களில் அரசாங்க மருத்துவ கல்லூரிகள் உள்ளன: செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, வேலூர், கன்னியாகுமரி, தேனி, விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை, பெருந்துறை.
அரசாங்க பல்மருத்துவமனை/கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரி சென்னையிலுள்ளது.
6. இதைத் தொடர்ந்து தனியார் துறையில் கீழ்கண்ட மருத்துவ கல்லூரிகள் இயங்குகின்றன:
1. கிறித்துவ மருத்துவ கல்லூரி,வேலூர்
2. ராஜா முத்தைய்யா மருத்துவ கல்லூரி, சிதம்பரம்
3. சவீதா மருத்துவக்கல்லூரி, சென்னை
4. ஸ்ரீ சத்ய சாய் மருத்துவ கல்லூரி, நெல்லிக்குப்பம்
5. ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரி, சென்னை
6. ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி, கன்னியாகுமரி
7. ஸ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரி, சென்னை
8. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி, சென்னை
9. விநாயகா மிஷன் கிருபானாந்தா வாரியார் மருத்துவ கல்லூரி, சேலம்
மற்றும் சில தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த பல துறையில் பல கல்லூரிகள் உள்ளன.
Q29. தொழிற்நுட்பக்கல்லூரிகள்:
"தமிழ்நாட்டில் சுமார் 552 தொழிற்நுட்பக்கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தனியாரால் அண்ணா பல் கலை கழகத்தின் ஓர் பதிவு அங்கமாக இயங்குகின்றன. இவற்றுள் புகழ்பெற்ற சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைகழகத்தின் கீழ், மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கிண்டி தொழிற்நுட்பக்கல்லூரி, PSG/கோயம்புத்தூர், CIT/கோயம்புத்தூர், தியாகராஜர்/மதுரை, அழகப்பா/காரைக்குடி ஆகியவை. இவைத் தவிர்த்து அரசாங்க தொழிற்நுட்பக்கல்லூரிகள் பர்கூர், சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், போடி, தர்மபுரி ஆகிய இடங்களிலும் உள்ளன. தனியார் துறையில் மிகவும் புகழ்பெற்றவை - VIT/வேலூர், SASTRA/தஞ்சாவூர், Dr.MGR/VEL/SRM /சென்னை, AMRITA/ கோயம்புத்தூர் மற்றும் பல தொழிற்நுட்பக்கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன. "
Q30. கலங்கரை விளக்கங்கள்:
விஞ்ஞான முன்னேற்றத்தினால் இவை தற்காலத்தில் அதிக பயனிழந்து விட்டன. கீழ்க்கண்ட இடங்களில் அவை உள்ளன: அம்மாபட்டினம்(புதுக்கோட்டை), கன்னியாகுமரி, சென்னை, கீழக்கரை, மகாபலிபுரம், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, கோடியக்கரை, பரங்கிப்பேட்டை, பழவேற்காடு, ராமேஸ்வரம்.
Q31. மாநில சுற்றுலா மையங்கள்:
1. ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி -- கோடைவாசஸ்தலம்.
2. கோவில்கள்:
     சுசீந்திரம் - கன்னியாகுமரி -- தானுமலையான் கோவில்;
      ராமேஸ்வரம் - ராமநாதசாமி கோவில்;
      திருச்செந்தூர் - கடற்கரை முருகன் கோவில்;
     திருத்தணி - முருகன் மலைக்கோவில்;
      ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் திருக்கோவில்;
      தஞ்சாவூர் - பிருகதீஸ்வரர் கோவில்;
     திருநல்லார் - சனீஸ்வரர் கோவில்;
      சிதம்பரம் - நடராஜர் கோவில்;
      வைதீஸ்வரன் கோவில் - வைத்யநாதசுவாமி கோவில்;
     திருவண்ணாமலை-அண்ணாமலையார் கோவில்;
     காஞ்சிபுரம் - சங்கரமடம், வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் பல;
     கன்னியாகுமரி - கன்னியாகுமரி அம்மன் கோவில் மற்றும் கடற்கரை;
     வேலூர் - ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீபுரம் பொற்கோவில்;
     நாகூர் - மசூதி; வேளங்கண்ணி - அன்னை மாதா தேவாலயம் மற்றும் பல ஆன்மீகம் சம்பந்த கோவில்களும் உள்ளன.
3.  மகாபலிபுரம், பூம்புகார், பிச்சாவரம், குற்றாலம், ஹொகேனக்கல் -- சுற்றுலா மையங்கள்
4.  முதுமலை, அனைமலை, வேடந்தாங்கல் -- வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம்.
Q32. தமிழ் நாட்டு உலகப் புராதனச்சின்னங்கள்:
1. ப்ரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்
2. ப்ரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம்
3. ஐராவதீஸ்வரர் கோவில், தாராசுரம்
4. கடற்கரை சிற்பங்கள், மகாபலிபுரம்
5. நீலகிரி மலைவழி ரயில் தடம், ஊட்டி.
Q33. சென்னை சுற்றுலா மையங்கள்:
1.   செனட்ரல் ஸ்டேஷன் -- 1873 ல் ஹென்றி இர்வின் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
2.   ரிப்பன் மாளிகை - மாநகராட்சி அலுவலகம்.,
3.   புனித ஜார்ஜ் கோட்டை - 1644ல் கட்டப்பட்டது -- தமிழ்நாடு அரசாங்க காரியாலயம்
4.   கபாலீஸ்வரர் கோவில்--7வது நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட்து
5.   மரீனா கடற்கரை - உலகின் இரண்டாவது நீளமான இயற்கை கடற்கரை
6.   புனித தாமஸ் தேவாலயம் - 1523ல் கட்டப்பட்டது
7.   அரசாங்க அருங்காட்சியகம் -- 1857ல் அமைக்கப்பட்ட்து
8.   வனவிலங்கு பூங்கா -1855ல் ரிப்பன் மாளிகை அருகில் நிறுவப்பட்டு 1985 முதல் வண்டலூரில் பல நூறு ஏக்கரில் அமைந்துள்ளது.
9.   பாம்பு பூங்கா - 1972 ல் ரொமலஸ் விட்டேக்கர் என்பவரால் நிறுவப்பட்டது
10. முதலை பூங்கா -- 1976 - ரொமலஸ் விட்டேக்கர் அவர்களால் நிறுவப்பட்டது
Q34. தமிழ் நாட்டு வன விலங்கு/பறவைகள் சரணாலயங்கள்/தேசிய பூங்காக்கள்:
1.   இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, ஆனைமலை, தமிழ்நாடு-கேரளா.
2.   கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம், புதுச்சேரி அருகில்
3.   களக்காடு வனவிலங்கு சரணாலயம், திருநெல்வேலி
4.   முண்டன்துரை வனவிலங்கு சரணாலயம், திருநெல்வேலி.
5.   முதுமலை வனவிலங்கு சரணாலயம், நீலகிரி
6.   ஸ்ரீவில்லிப்புத்தூர் வனவிலங்கு சரணாலயம், விருதுநகர்
7.   வல்லநாடு வனவிலங்கு சரணாலயம், தூத்துக்குடி
8.   வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், காஞ்சிபுரம்
9.   அகஸ்த்யமலை பறவைகள் சரணாலயம், திருநெல்வேலி/கன்னியாகுமரி
10. கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம்
11. மேகமலை வனவிலங்கு சரணாலயம், தேனி
12. பழநி மலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, திண்டுக்கல்
13. பழவேற்காடு பறவைகள் சரணாலயம், திருவள்ளூர்
14. சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், ஈரோடு
15. சுசீந்திரம் பறவைகள் சரணாலயம், கன்னியாகுமரி
16. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், திருவாரூர்
17. வடுவூர் பறவைகள் சரணாலயம், திருவாரூர்
18. முக்குருத்தி தேசிய பூங்கா, நீலகிரி
19. மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா, ராமநாதபுரம்
20. கிண்டி தேசிய பூங்கா, சென்னை
Q35. தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள்:
அணுசக்தி மின்:
1. இந்திராகாந்தி அணுமின் நிலையம், கல்பாக்கம், சென்னை
2. கூடங்குளம் அணுமின் நிலையம், திருநெல்வேலி.
அனல் மின்:
1. நெய்வேலி 2. வடசென்னை 3. மேட்டூர் 4. எண்ணூர் 5. தூத்துக்குடி 6. வள்ளூர் 7. திருவள்ளுர்
எரிவாயு அனல் மின்:
1. பேசின்ப்ரிட்ஜ் 2. வளத்தூர் 3. திருமாக்கோட்டை 4. மருதூர் 5. நாகப்பட்டினம்.
நீர்மின்:
1. மேட்டூர் 2. கடம்பாறை (கோயம்புத்தூர்) 3. அமராவதி 4. காட்டேரி 5. குந்தா 6. மறவன்கண்டி 7. மோயார் (நீலகிரி) 8. பாபநாசம் (திருநெல்வேலி) 9. வைகை (தேனி)
காற்றாலை மின்:
1. முப்பந்தல் (கன்னியாகுமரி) 2. கயத்தார் (தூத்துக்குடி).    காற்றாலைகள் முலம் மின்சாரம் தயாரிப்பதில், இந்தியாவில் தமிழ் நாடே முன்னோடி மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Q36. தமிழ் நூல்களும் அவற்றின் அடைமொழிகளும்:
1.   திருக்குறள் -- தமிழ் மறை, பொய்யா மொழி, வாயுரை வாழ்த்து, பொது மறை, உத்திரவேதம், திருவள்ளுவப்பயன், ஈரடி வெண்பா, தெய்வ நூல், இயற்கை வாழ்வில்லம்.
2.   சிலப்பதிகாரம் -- தமிழின் முதல் காப்பியம், முதல் நூல், முத்தமிழ்க் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், சமுதாயக் காப்பியம், தமிழரின் தேசியக்காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக்          காப்பியம், வழிநூல் என்னும் நூல், வகையுள் முதல் நூல்.
3.   சீவக சிந்தாமணி -- மணநூல், இயற்கை தவம்
4.   நாலடியார் - வேளாண் வேதம்
5.   நாலயிரத் திவ்ய பிரபந்தம் -- திராவிட வேதம், வைணவர்களின் தமிழ் வேதம்
6.   பெரிய புராணம் -- திருத்தொண்டர் புராணம், இயற்கை அன்பு
7.   இலக்கண விளக்கம் -- குட்டித் தொல்காப்பியம்
8.   திருக்கருவைப் பதிற்று பத்தந்தாதி -- குட்டி திருவாசகம்
9.   திருவாய் மொழி -- திராவிட வேதம்
10. திருப்பாவை -- பாவைப்பாட்டு
11. திருமந்திரம் -- தமிழ் மூவாயிரம்
12. தாயுமானவர் பாடல்கள் -- தமிழ் மொழியின் உபநிடதம்
13. வெற்றி வேற்கை -- நறுத்தொகை
14. நேமிநாதம் -- சின்னூல்
15. ஏலாதி - குட்டித் திருக்குறள்
16. திருக்கயிலாய ஞான உலா -- ஆதியுலா, ஞான உலா
17. பெருங்கதை -- கொங்கு வேளிர் மாக்கதை
18. தேவாரம், திருவாசகம் -- இயற்கை இறையருள்
19. பத்துப்பாட்டு -- இயற்கை ஓவியம்
20. கலித்தொகை -- இயற்கை இன்பக்கலம்
21. கம்ப ராமாயணம் -- இயற்கை பரிணாமம்
22. கூத்தராற்றுப் படை -- மலைபடுகடாம்
23. திருமுருகாற்றுப்படை -- முருகு, புலவராற்றுப்படை
24. முல்லைப்பாட்டு -- நெஞ்சாற்றுப்படை.
Q37. தமிழ்நாட்டு பிரபலங்கள்:
1.   சி.ராஜகோபாலாச்சாரி -- நம்நாட்டின் மூத்த சுதந்திர போராட்ட வீரர் - நாட்டின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்.
2.   ரா.வெங்கட்ராமன் - முன்னாள் குடியரசுத்தலைவர்
3.   APJ அப்துல் கலாம் - உலகப் புகழ் பெற்ற ஏவுகணை விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத்தலைவர்
4.   எஸ்.ஆர். நாதன் - இந்திய வம்சாவளி சிங்கப்பூர் தலைவர்
5.   தீரன் சின்னமலை, கட்டபொம்மன், பாரதியார், சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, சத்யமூர்த்தி, முத்துராமலிங்க தேவர், கொடிகாத்த குமரன், வாஞ்சிநாதன் மற்றும் பல சுதந்திர போராட்ட தியாகிகள்.
6.   தில்லையாடி வள்ளியம்மை, தம்பி நாயுடு, நாராயணசாமி ராய் நாயுடு, அம்மா நாயுடு, ஜார்ஜ் நாயக்கர், சாந்தி நாயுடு -- நிற வெறியை எதிர்த்து போராடிய இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்க   போராளிகள்.
7.   காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன், கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, ஜி.கே. மூப்பனார், ப.சிதம்பரம், சி.சுப்ரமணியம், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஷண்முகம் செட்டி, முரசொலி மாறன், தயாநிதி மாறன், மணி சங்கர் அய்யர், மோகன் குமாரமங்கலம், டி.ஆர். பாலு, ஜி.கே.வாசன் மற்றும் பல அரசியல் வாதிகள்.
8.   ஈ.வெ.ரா. பெரியார் - புகழ் பெற்ற சமூக சீர்திருத்த தந்தை.
9.  ஜெனரல் குமாரமங்கலம், ஜெனரல் சுந்தர்ராஜன், மார்ஷல் கிருஷ்ணசாமி - நம்நாட்டு ராணுவ தளபதிகள்.
10. எம்.எஸ்.ஸ்வாமிநாதன் - உலகப்புகழ் பெற்ற வேளாண் விஞ்ஞானி
11. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, டி.கே.பட்டம்மாள், செம்பை வைத்யநாத பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன், ஜி.என்.பாலசுப்ரமணியம், மேண்டலின் ஸ்ரீநிவாஸ், டி.என்.கிருஷ்ணன், டாக்டர் என்.ரமணி, நித்யஸ்ரீ, சௌம்யா, காயத்ரி மற்றும் பல கர்நாடக இசை மேதைகள்.
12. கே.வி.மகா தேவன், எம்.எஸ். விஸ்வநாதன், ராம்மூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் -- புகழ்பெற்ற சினிமா துறை இசை அமைப்பாளர்கள்.
13. சர்.சி.வி.ராமன், ராமன் சந்திரசேகர் -- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்.
14. வி.சாந்தா - சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவ மனை இயக்குநர்.
15. விஸ்வநாதன் ஆனந்த் - சதுரங்க விளையாட்டு உலகின் தலைசிறந்த வீரர் - சாம்பியன் -- இவருடன், மேனுவல் ஆரொன், கே.சசிகிரண், எஸ்.விஜயலக்ஷ்மி, ஆரத்தி ராமசாமி -- உலகப் புகழ் பெற்ற சதுரங்க விளையாட்டு வீரர்கள்.
16. தன்ராஜ் பிள்ளை, வி.ஜே.ஜேம்ஸ், வி.ஜே.பிலிப்ஸ், வி.பாஸ்கரன் சகோதரர்கள், முனீர் சேட் -- புகழ் பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர்கள்.
17. ஸ்ரீநிவாச ராமானுஜம் -- உலகம் போற்றும் கணித மேதை.
18. சி.ரங்கராஜன் - பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கி கவர்னர், மாநிலங்களவை உறுப்பினர், மாநில கவர்னர்.
19. எஸ்.வெங்கிடரமணன் -- ரிசர்வ் வங்கி கவர்னர்.
20. டாக்டர்.கஸ்தூரி ரங்கன் - இந்தி விண்வெளிக் கழக தலைவர்.
21. டாக்டர் சிவதாணு பிள்ளை - விண்வெளி விஞ்ஞானி
22. ஜி.டி.நாயுடு - விஞ்ஞானி மற்றும் கொடை வள்ளல்
23. பத்மா சுப்ரமணியம், சித்ரா விஸ்வேஸ்வரன், ருக்மணி தேவி அருண்டேல், ஹேமா மாலினி - புகழ் பெற்ற பர நாட்டிய கலைஞர்கள்.
24. ஏ.பி. நாகராஜன், கே.பாலச்சந்தர், சி.வி.ஸ்ரீதர், மணி ரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, சங்கர், ரவிகுமார், எஸ்.பி.முத்துராமன் -- புகழ் பெற்ற சினிமா இயக்குனர்கள்.
25. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமசந்திரன், கமல ஹாசன், ரஜினி காந்த், சாவித்திரி, சௌகார் ஜானகி, சரோஜா தேவி, ஸ்ரீ தேவி, ஸ்ரீ வித்யா, லக்ஷ்மி, மனோரமா, நம்பியார், நாகேஷ், கவுண்ட மணி, செந்தில், வடிவேலு மற்றும் பல சினிமா நட்சத்திர நடிகர்கள்
26. மரிய இருதயம் -- உலக கேரம் சாம்பியன்
27. எம்.ஜே.கோபாலன் (கிரிக்கெட் மற்றும் ஹாக்கியில் இந்திய வீரர்), சி.ஆர்.ரங்காச்சாரி, சி.டி.கோவிநாத், எஸ். வெங்கடராகவன், எல்.சிவராம கிருஷ்ணன், கே.ஸ்ரீகாந்த், முரளி கார்த்திக், தினேஷ் கார்த்திக், எஸ்.ரமேஷ், எல். பாலாஜி, விஜய், அஷ்வின் -- புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள்.
28. நாராயண் கார்த்திகேயன் - இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் கார் ரேஸ் ட்ரைவர்.
29. ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ் சகோதரர்கள் -- புகழ் பெற்ற டென்னிஸ் வீரர்கள்.
30. சிவ நாடார், ராஜா அண்ணாமலை செட்டியார் குடும்பம், ராமசாமி மற்றும் அழகப்பா செட்டியார் குடும்பம், சிதம்பரம் செட்டியார் குடும்பம், மகாலிங்கம், ராமசாமி ராஜா குடும்பம், சுந்தரம் அய்யங்கார் குடும்பம் மற்றும் பல தொழிலதிபர்கள்.
31. வி.சந்திரசேகர், அமல்ராஜ், ராமன் -- புகழ்பெற்ற இந்திய மேசைப்பந்து வீரர்கள்
32. ஜோக்கிம் அற்புதம், குழந்தை ஃப்ரான்சிஸ் -- ராமன் மகாசசே விருது பெற்றவர்கள்.
Q38. ஞான பீட விருது பெற்ற தமிழர்கள்:
1. 1975 -- அகிலன் -- ""சித்திரப்பாவை""
2. 2002 -- ஜெய காந்தன் -- ""ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்கள் மற்றும் ஒரு இலக்கிய வாதியின் ஆன்மீக அனுபவங்கள். "
Q39. இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்:
1.   ரா. பி. சேதுப்பிள்ளை (1955) ·
2.   கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) ·
3.   சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) ·
4.   மு. வரதராசனார் (1961) ·
5.   மீ. ப. சோமு (1962) ·
6.   அகிலன் (1963) ·
7.   பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) ·
8.   ம. பொ. சிவஞானம் (1966) ·
9.   கி. வா. ஜகந்நாதன் (1967) ·
10.அ. சீனிவாச ராகவன் (1968) ·
11.பாரதிதாசன் (1969) ·
12.கு. அழகிரிசாமி (1970) ·
13.நா. பார்த்தசாரதி (1971) ·
14.ஜெயகாந்தன் (1972) ·
15.ராஜம் கிருஷ்ணன் (1973) ·
16.க. த. திருநாவுக்கரசு (1974) ·
17.ஆர். தண்டாயுதம் (1975) ·
18.இந்திரா பார்த்தசாரதி (1977) ·
19.வல்லிக்கண்ணன் (1978) ·
20.தி. ஜானகிராமன் (1979) ·
21.கண்ணதாசன் (1980) ·
22.மா. ராமலிங்கம் (1981) ·
23.பி. எஸ். ராமையா (1982) ·
24.தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) ·
25.லட்சுமி திரிபுரசுந்தரி (1984) ·
26.அ. ச. ஞானசம்பந்தன் (1985) ·
27.க. நா. சுப்பிரமணியம் (1986) ·
28.ஆதவன் (1987) ·
29.வா. செ. குழந்தைசாமி (1988) ·
30.லா. ச. ராமாமிர்தம் (1989) ·
31.சு. சமுத்திரம் (1990) ·
32.கி. ராஜநாராயணன் (1991) ·
33.கோவி. மணிசேகரன் (1992) ·
34.எம். வி. வெங்கட்ராம் (1993) ·
35.பொன்னீலன் (1994) ·
36.பிரபஞ்சன் (1995) ·
37.அசோகமித்ரன் (1996) ·
38.தோப்பில் முகமது மீரான் (1997) ·
39.சா. கந்தசாமி (1998) ·
40.அப்துல் ரகுமான் (1999) ·
41.தி. க. சிவசங்கரன் (2000)
42.சி. சு. செல்லப்பா (2001) ·
43.சிற்பி பாலசுப்ரமணியம் (2002) ·
44.வைரமுத்து (2003) ·
45.ஈரோடு தமிழன்பன் (2004) ·
46.ஜி. திலகவதி (2005) ·
47.மு.மேத்தா (2006) ·
48.நீல. பத்மநாபன் (2007)
49.மேலாண்மை பொன்னுசாமி (2008) ·
50.புவியரசு (2009) ·
51.நாஞ்சில் நாடன் (2010) ·
52.சு. வெங்கடேசன் (2011) ·
53.டி. செல்வராஜ் (2012) ·
54.ஜோ டி குரூஸ் (2013) ·
55.பூமணி (2014) ·
56.ஆ. மாதவன் (2015) ·
Q40. எண்களும் தமிழ் பெயர்களும்:
தமிழ் எண்கள்:
1 = க;   2 = உ;   3 = ங;   4 = ச;   5 = ரு;   6 = சு;   7 = எ;   8 = அ;   9 = கூ;   0 = 0.   இந்த அடிப்படையில், உயர் எண்கள் -- உதாரணமாக 36 = ஙசு; 70 = எ0; 111 = ககக ; 155 = கருரு,  என எழுதலாம். 
பெயர்கள்
1 -- ஒன்று
10 -- பத்து
100 -- நூறு
1,000 -- ஆயிரம்
10,000 -- பத்தாயிரம்
1,00,000 -- ஒரு லட்சம்
10,00,000 -- பத்து லட்சம்
1,00,00,000 -- கோடி
10,00,00,000 -- பத்து கோடி
1,00,00,00,000 -- அற்புதம்
10,00,00,00,000 -- பத்து அற்புதம்
1,00,00,00,00,000 -- நிகற்புதம்
10,00,00,00,00,000 -- பத்து நிகற்புதம்
1,00,00,00,00,00,000 -- கும்பம்
10,00,00,00,00,00,000 -- பத்து கும்பம் (கணிகம்)
1,00,00,00,00,00,00,000 -- கணம் 
10,00,00,00,00,00,00,000 -- பத்து கணம் (தாமரை -- கோடானுகோடி)
1,00,00,00,00,00,00,00,000 -- கற்பம்  (சங்கம் -- பத்து கோடானுகோடி)
10,00,00,00,00,00,00,00,000 -- பத்து கற்பம் (வாரணம் -- நூறு கோடானுகோடி) 
1,00,00,00,00,00,00,00,00,000 -- நிகற்பம்
10,00,00,00,00,00,00,00,00,000 -- பத்து நிகற்பம் 
1,00,00,00,00,00,00,00,00,00,000 -- பதுமம் (பரதம் - லட்சம் கோடானுகோடி) 
10,00,00,00,00,00,00,00,00,00,000 -- பத்து பதுமம்
1,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- சங்கம்
10,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- பத்து சங்கம்
1,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- வெள்ளம்
10,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- பத்து வெள்ளம்
1,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- அன்னியம்
10,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- பத்து அன்னியம்
1,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- அர்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- பத்து அர்த்தம்
1,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- பரட்டம்
10,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- பத்து பரட்டம்
1,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- பூரியம்
10,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- பத்து பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- முக்கொடி
10,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- பத்து முக்கொடி
1,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 -- மகாயுகம்.
Q41. தமிழ் நாட்கள், மாதங்கள், வருடங்கள், நட்சத்திரங்கள்: 
தமிழ் நாட்கள்: 7
திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு
தமிழ் மாதங்கள்: 12
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி.
தமிழ் வருடங்கள்: 60
(அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளவை தமிழ்ப் பெயர்கள்)

1.   பிரபவ (நற்றோன்றல்)
2.   விபவ (உயர்தோன்றல்)
3.   சுக்ல (வெள்ளொளி)  
4.   பிரமோதூத (பேருவகை)
5.   பிரசோற்பத்தி (மக்கட்செல்வம்)  
6.   ஆங்கிரஸ (அயல்முனி)  
7.   ஸ்ரீமுக (திருமுகம்)  
8.   பவ (தோற்றம்)  
9.   யுவ (இளமை)  
10. தாது  (மாழை)  
11. ஈஸ்வர (ஈச்சுரம்)  
12. வெகுதானிய (கூலவளம்)  
13. பிரமோதி (முன்மை)  
14. விக்கிரம (நேர்நிரல்)  
15. விஷூ (விளைபயன்)  
16. சித்திரபானு (ஓவியக்கதிர்)  
17. சுபானு (நற்கதிர்)  
18. தாரண (தாங்கெழில்)  
19. பார்த்திப (நிலவரையன்)  
20. விய (விரிமாண்பு)  
21. சர்வசித்து (முற்றறிவு)  
22. சர்வதாரி (முழு நிறைவு)  
23. விரோதி  (தீர்பகை)  
24. விக்ரோதி (வள மாற்றம்)  
25. கர (செய் நேர்த்தி)  
26. நந்தன (நற்குழவி)  
27. விஜய (உயர்வாகை)  
28, ஜய (வாகை)  
29. மன்மத (காதன்மை)  
30. து(ர்)ன்முகி (வெம்முகம்)  
31. ஹேவிளம்பி (பொற்றடை)  
32. விளம்பி (அட்டி)
33. விகாரி (எழில் மாறல்)  
34. சார்வரி (வீறியெழில்)  
35. பிலவ (கீழறை)  
36. சுபகிருது (நற்செய்கை)  
37. சோபகிருது (மங்கலம்)  
38. குரோதி (பகைக்கேடு)  
39. விசுவாசுவ (உலக நிறைவு)  
40. பரபாவ (அருட்டோற்றம்)
41. பிலவங்க (நச்சுப்புழை)  
42. கீலக (பிணைவிரகு)  
43. சௌமிய (அழகு)  
44. சாதாரண (பொதுநிலை)  
45. விரோதகிருது (இகல்வீறு)  
46. பரிதாபி (கழிவிரக்கம்)  
47. பிரமாதீச (நற்றலைமை)  
48. ஆனந்த (பெருமகிழ்ச்சி)  
49. ராட்சச (பெருமறம்)  
50. நள (தாமரை)  
51. பிங்கள (பொன்மை)  
52. காளயுக்தி (கருமை வீச்சு)  
53. சித்தார்த்தி (முன்னிய முடிதல்)  
54. ரௌத்ரி (அழலி)  
55. துன்மதி  (கொடுமதி)  
56. துந்துபி (பேரிகை)  
57. ருத்ரோத்காரி (ஒடுங்கி)  
58. ரக்தாட்சி (செம்மை)  
59. குரோதன (எதிரேற்றம்)  
60. அட்சய (வளங்கலன்).
தமிழ் நட்சத்திரங்கள்: 27
1. அஸ்வினி,  2. பரணி,  3. கார்த்திகை,  4. ரோகிணி,  5. மிருகசீரிடம்,  6. திருவாதிரை,  7. புனர்பூசம்,  8. பூசம்,  9. ஆயில்யம்,  10. மகம்,  11. பூரம்,  12. உத்திரம்,  13. ஹஸ்தம்,  14. சித்திரை, 15. ஸ்வாதி, 16. விசாகம்,  17. அனுஷம்,  18. கேட்டை,  19. மூலம்,  20. பூராடம்,  21. உத்திராடம்,  22. திருவோணம்,  23. அவிட்டம்,  24. சதயம்,  25. பூரட்டாதி,  26. உத்திரட்டாதி,  27. ரேவதி.
Q42. பெருமைக்குரிய தமிழக முதன்மைகள்:
1.   முதல் முதலமைச்சர் (1947க்கு முன்) -- சுப்பராயலு செட்டியார் -- 1920-1921
2.   முதல் முதலமைச்சர் (1947க்கு பின்) -- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் -- 1947-1949
3.   முதல் பெண் முதலமைச்சர் -- ஜானகி ராமச்சந்திரன் -- 1988
4.   முதல் பெண் அமைச்சர் -- ஜோதி வெங்கடாச்சலம் -- 1953-1954
5.   முதல் ஆளுநர் -- லெஃப். ஜென். சர் ஆர்ச்சிபால்டு நை -- 1946 -- 1948
6.   முதல் இந்தியர் தமிழ் நாடு ஆளுநர் -- மகாராஜா சர் கிருஷ்ண குமார்சிங்ஜி பாவ்சிங்ஜி -- 1948-1952
7.   முதல் பெண் தமிழ்நாடு ஆளுநர் -- ஃபாத்தீமா பீவி -- 1997-2001.
8.   முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் -- முத்துலட்சுமி ரெட்டி
9.   முதல் பெண் தலைமைச் செயலர் -- லட்சுமி ப்ரானேஷ்
10. முதல் பெண் மருத்துவர் -- முத்துலட்சுமி ரெட்டி
11. முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி -- பத்மினி ஜேசுதுரை.
12. முதல் பெண் வழக்கறிஞர் -- ஆனந்த பாய் 1928
13. முதல் செய்தித் தாள் -- மெட்ராஸ் மெயில் 1873
14. முதல் தமிழ் செய்தித்தாள் -- சுதேசமித்ரன் 1882
15. முதல் பெண் தமிழ் ஐ.பி.எஸ் (IPS) அதிகாரி -- திலகவதி
16. முதல் பெண் டைரக்டர் ஜெனரல், போலீஸ் -- லேத்திகா சரண்
17. முதல் மகளிர் காவல் நிலையம் -- ஆயிரம் விளக்கு, சென்னை
18. முதல் திருநங்கை துணை காவல் துறை ஆய்வாளர் -- ப்ரீத்திகா யாஷினி
19. முதல் பெண் மாவட்ட தீயணைப்புப் படை அதிகாரி -- மீனாட்சி விஜயகுமார்
20. முதல் பல்கலைக்கழகம் -- சென்னைப் பல்கலைக்கழகம்
21. முதல் தமிழ்நாடு மாநகராட்சி -- சென்னை -- 1688.
22. முதல் சென்னை மாநகராட்சி கௌரவ தலைவர் -- சர். பி.டி. தியாகராயர்.
23. முதல் மாநகராட்சி (சென்னை) மேயர் -- முத்தையா செட்டியார்
24. முதல் பெண் மேயர் -- தாரா செரியன் (சென்னை)
28. முதல் சமத்துவ புரம் -- மேலக்கோட்டை, மதுரை
29. முதல் நீர்மின் திட்டம் -- பைக்காரா, நீலகிரி.
30. முதல் ராஜீவ் காந்தி கேல் விருது பெற்றவர் -- ஆனந்த் விஸ்வநாதன் -- சதுரங்கம்.
31. முதல் தமிழ் (பேச்சற்ற) திரைப்படம் -- கீசகவதம் 1916
32. முதல் பேசும் தமிழ் படம் -- காளிதாஸ் 1931
33. முதல் இருப்புப்பாதை -- ராயபுரம் - வாலாஜாப்பேட்டை.
34. முதல் பாரத ரத்னா விருது பெற்ற தமிழர் -- சி. இராஜகோபாலச்சாரி 1954
35. முதல் பாரத ரத்னா விருது பெற்ற தமிழ் பெண்மணி -- எம்.எஸ். சுப்புலக்ஷ்மி. 1998
36. முதல் இந்திய கவர்னர் ஜெனரல் தமிழர் -- சி. ராஜகோபாலச்சாரி (இவர் மட்டுமே இந்த பதவி வகித்தார்)
37. முதல் நோபல் பரிசு பெற்ற தமிழர் -- சர். சி. வி. ராமன் -- 1930
38. முதல் சதுரங்க உலக சாம்பியன் தமிழர் -- ஆனந்த் விஸ்வநாதன்
39. முதல் ஞானபீட விருது பெற்ற தமிழர் -- அகிலன் -- 1975.
40. முதல் சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழர் -- ரா.பி.சேதுப்பிள்ளை -- 1955
41. முதல் தாதா சாகேப் ஃபால்கே விருது பெற்ற தமிழர் -- சிவாஜி கணேசன் -- 1996
42. முதல் ராமன் மகசெசெ விருது பெற்ற தமிழர் -- எம்.எஸ்.ஸ்வாமிநாதன் -- 1971
43. முதல் பத்ம விபூஷன் பெற்ற தமிழர் -- நாராயண ராகவன் பிள்ளை -- 1960
44. முதல் தமிழ் பெண் கமாண்டோ -- காளியம்மாள்
45. முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் -- வசந்தகுமாரி
46. முதல் தமிழ் பெண் சதுரங்க க்ராண்ட் மாஸ்டர் -- எஸ். விஜயலட்சுமி
47. முதல் தமிழ் நாவல் -- பிரதாப முதலியார் சரித்திரம் -- 1857/1879 -- சாமுவேல் வேதநாயகம் பிள்ளை
48. முதல் வானொலி நிலையம் -- சென்னை -- 1930
49. முதல் இந்திய தேசிய காங்கிரஸ் முதல் தமிழ் தலைவர் (1947க்கு முன்) -- விஜயராகவாச்சாரி - 1920
50. முதல் இந்திய தேசிய காங்கிரஸ் முதல் தமிழ் தலைவர் (1947க்கு பின்) -- காமராஜர் -- 1964
51. முதல் மாவட்டம் -- சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்டது -- தர்மபுரி -- 1965
Q43. நீர் நிலைகளின் பெயர்கள்:
1.   அகழி -- (Moat) -- கோட்டையின் வெளியில் அமைந்துள்ள நீர்வழி அரண்
2.   அருவி -- (Waterfall) -- மலை உச்சியிலிருந்து செங்குத்தாக விழும் நீர் வழி.
3.   ஆழிக்கிணறு -- (Seashore Well) -- கடலுக்கருகில் கட்டப்பட்டுள்ள கிணறு.
4.   ஆறு (நதி) -- (River) -- பெரியளவிலான நீரோட்டம்.
5.   இலஞ்சி -- (Reservoir) -- நீர்த்தேக்கம்.
6.   உறைக் கிணறு -- (Ring Well) -- மணற்பகுதியில் தோண்டப்பட்டு, சுடுமண் வளையமிட்ட கிணறு.
7.   ஊருணி -- (Drinking Water Tank) -- குடிநீராக பயன்படுத்தப்படும் ஊர் நீர்த்தேக்கங்கள்.
8.   ஊற்று -- (Spring) -- பூமிக்கடியிலிருந்து நீர் தானாகவே வெளிவருவது.
9.   ஏரி -- (Irrigation Tank) -- விவசாய நீர்த்தேக்கம்
10. ஓடை -- (Brook) -- மிகச் சிறியளவிலான நீரோட்டம்
11. கட்டுங்கிணக் கிணறு -- (Built in Well) -- சரளை மண் பகுதிகளில் தோண்டி கட்டுமானக் கிணறு.
12. கடல் -- (Sea) -- சமுத்திரம்.
13. கம்மாய் -- (Irrigation Tank) -- பாண்டியர்கள் காலத்தில் ஏரிக்கு வழங்கப்பட்டப் பெயர்.
14. கலிங்கு -- (Sluice with many ventures) -- ஏரி போன்ற பாசன நீர் தேக்கத்திலிருந்து, உடைப்புகள் ஏற்படாமல் இருக்க, கற்களால் உறுதியாக்கப்பட்டு, பலகைகளால் அடைக்கப்பட்டு, திறக்கக்கூடிய, நீர்           செல்லும் அமைப்பு.
15. கால் -- (Channel) -- நீரோட்ட வழி.
16. கால்வாய் -- (Supply Channel) -- நீர்த்தேக்கங்களுக்கு நீர் ஊட்டும் வழி.
17. குட்டம் -- (Large Pond) -- பெரியளவிலான குட்டை.
18. குட்டை -- (Small Pond) -- சிறிய குட்டம் -- விலங்குகளை குளிப்பாட்டும் நீர் நிலைகள்.
19. குண்டு -- (Pool) -- குளிப்பதற்கான ஒரு சிறிய குளம்.
20. குண்டம் -- (Small Pool) -- குளியலுக்கான ஒரு சிறிய குளம்.
21. குமிழி -- (Pool) -- நிலத்திலுள்ள பாறையைக் குடைந்து அடி நீரை மேலெழுப்பி தேக்கப்பட்ட கிணறு.
22. குமிழி ஊற்று -- (Artesian Foundain) -- அடி நிலத்து நீர், நில மட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
23. குளம் -- (Bathing Tank) -- குளிப்பதற்காகவே உள்ள நீர்த்தேக்கம்.
24. கூவம் -- (Abnormal Well) -- வடிவமைப்பில் ஒழுங்கில்லாத ஒரு கிணறு.
25. கூவல் -- (Hollow) -- ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
26. வாளி -- (Strea/m) -- ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரம்பி, மறுகால் வழி அதிக நீர் வெளிச்செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர் நிலை.
27. கேணி -- (large Well) -- அகலமும் ஆழமும் அதிகமுள்ள ஒரு கிணறு.
28. சிறை -- (Reservoir) -- தேக்கப்பட்ட ஒரு பெரிய நீர் நிலை.
29. சுனை -- (Mountain Pool) -- மலையின் சில இயற்கையான பள்ளங்களில் அமைந்த நீர்த் தேக்கம்.
30. சேங்கை -- (Tank With Duck weed) -- பாசிக்கொடி மண்டிய குளம்.
31. தடம் -- (Beautifully constructed bathing Tank) -- நாற்புறமும் அழகாகக் கட்டப்பட்டுள்ள ஒரு குளம்.
32. தளிக்குளம் -- (tank surrounding a temple) -- ஒரு கோவிலைச் சுற்றி அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கம்.
33. தாங்கல் -- (Irrigation Tank) -- தொண்டமண்டலம் பகுதியில் ஏரியின் பெயர்.
34. திருக்குளம் -- (Temple Tank) -- கோவிலின் முன் அமைக்கப்பட்ட குளம் -- புட்கரணி எனப்படும். பிற எந்த பயனுக்கும் அனுமதியில்லை.
35. தெப்பக்குளம் -- (Temple Tank with inside pathway along the parapet well) -- குளத்தின் உள்வாக்கில் ஆள் நடைபாதையுடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடு கிணறு -- (Dig Well) -- ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத் தோண்டி நீர் எடுக்கும் அமைப்பு.
37. நடை கேணி -- (Large Well with steps on one side) -- கிணற்றுக்குள் இறங்க படி வசதி கொண்ட கிணறு.
38. நீராவி -- (Bigger Tank at the center of Building hall) -- மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம், ஆவி என்று அழைக்கப்படுகிறது.
39. பிள்ளைக்கிணறு -- (Well in the middle of a Tank) -- ஏரி/குளங்களின் நடுவே அமைந்துள்ள கிணறு.
40. பொங்கு கிணறு -- (Well with bubbling Spring) -- ஊற்றுக்கால் கொப்பளித்துக்கோண்டை இருக்கும் கிணறு.
41. பொய்கை -- (lake) -- தாமரை மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
42. மடு -- (deep place in a river) -- ஆற்றில் ஆழம் அதிகமுள்ள அபாயகரமான பகுதி.
43. மடை -- (small sluice with single venturi) -- ஒரு கண்ணே உள்ள ஒரு சிறு மதகு.
44. மதகு -- (Sluice with many ventures) -- பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள அமைப்பு.
45. மறு கால் -- (surplus water channel) -- அதிக நீரை வெளியேற்றும் ஒரு வாய்க்கால்.
46. வலயம் -- (round tank) -- வட்டமாய் அமைந்த குளம்.
Q44. பழங்கால தமிழர்கள் நேரம் கணிக்கும் முறைகள்.
1.   10 குழிகள் = 66.6666 Millisecond- கண் இமைக்கும் நேரம்.
2.   2 (கண்ணிமைகள்) = 1 (கைநொடி) = 0.125 second
3.   2 கைநொடி Kainodi = 1 Maatthirai (மாத்திரை) = 0.25 second
4.   1 சிற்றுழி (நொடி) Sitruzhi (nodi) = 0.40 second ஒரு காற்றுக் குமிழி ஒரு சாண் தூரம்
5.   2 மாத்திரைகள் MaatthiraigaL = 1 kuru (குறு) = 0.50 second
6.   2 நொடிகள் NodigaL = 1 vinaadi வினாடி = 0.80 second- ஒரு மனிதனின் இதய துடிப்புக்காக எடுக்கும் நேரம்.
7.   2 1⁄2 நொடிகள் NodigaL = 2 குறு kuru = 1 uyir உயிர் = 1 second
8.   5 நொடிகள் NodigaL = 2 உயிர் uyir = 1 Saanigam சாணிகம் = 1/2 aNu அணு = 2 seconds
9.  10 NodigaL = 1 அணு anu = 4 seconds
10. 6 அணுக்கள் Anukkal = 12 சாணிகம் Saanigam = 1 Thuli துளி = 1 naazhigai-vinaadi நாழிகை வினாடி = 24 seconds
11. 10 துளிகள் ThuLigaL = 1 Kanam கணம் = 4 நிமிடங்கள் Minutes
12. 6 கணங்கள் Kanangal = 1 நாழிகை Naazhigai= 24 minutes
13. 10 நாழிகை NaazhigaigaL = 4 Saamam சாமம் = 1 Sirupozhuthu சிறுபொழுது = 240 minutes = 4 hours
14. 6 சிறுபொழுதுகள் SirupozhuthugaL = 1 Naal நாள் (1 day) = 24 hours
15. 7 நாட்கள் NaatkaL = 1 Kizhamai கிழமை = (1 week)
16. 15 நாட்கள் NaatkaL = 1 Azhuvam அழுவம் (1 இரண்டு வாரங்கள் fortnight)
17. 29.5 நாட்கள் NaaTkaL = 1 ThingaL திங்கள் (1 நிலவு மாதம் Lunar month)
18. 2 திங்கள் ThingaL = 1 Perumpozhuthu பெரும்பொழுது (1 season)
19. 6 பெரும் பொழுதுகள் Perumpozhuthugal = 1 Aandu ஆண்டு (1 year)
20. 64 ஆண்டுகள் AandugaL = 1 Vattam வட்டம் (1 cycle)
21. 4096 (=8^4) ஆண்டுகள் Aandugal = 1 Oozhi ஊழி (1 யுகம் epoch)
Q45. பொதுக் கேள்விகள்:
Q46. சென்னை மாகாணம், என்று முதல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
14.1.1969
Q47. தமிழ் நாட்டின் முதல் ஆளுநர் யார்?
லெப்.ஜென்.சர் ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை -- 1946-1948
Q48. தமிழ்நாட்டின் தலைநகரம் "மெட்ராஸ்" எந்த வருடம் "சென்னை" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
1996
Q49. தமிழ்நாட்டின் முதல் பெண் முதல் மந்திரி யார்?
ஜானகி ராமச்சந்திரன் - 7 - 30.1.1988
Q50. தமிழ் நாட்டின் முதல் முதன் மந்திரி யார்? (சுதந்திரத்திற்கு பிறகு/முன்பு)
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947-1949 -- ஏ. சுப்பராயலு ரெட்டியார் - 1920-1921
Q51. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
முத்து லட்சுமி ரெட்டி
Q52. தமிழ் நாட்டில் எத்தனை அணு மின்சக்தி நிலையங்கள் உள்ளன?
இரண்டு - கல்பாக்கம், கூடங்குளம்
Q53. தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?
12 - சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி
Q54. தமிழ் நாட்டின் முதல் பெண் வழக்கறிஞர் யார்?
பி.ஆனந்தா பாய் (1928)
Q55. தமிழ் நாட்டில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் எங்கு துவங்கப்பட்டது?
ஆயிரம் விளக்கு, சென்னை
Q56. தமிழ் நாட்டில் மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நடத்தும் பல்கலைகழகங்கள் எத்தனை உள்ளன?
9
Q57. தமிழ் நாட்டில் மத்திய அரசு மேற்பார்வையில் உள்ள பல்கலைகழகங்கள் எத்தனை உள்ளன?
14
Q58. தமிழ் நாட்டில் எத்தனை தமிழக அரசின் மேற்பார்வை பல்கலை கழகங்கள் உள்ளன?
21
Q59. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன?
25
Q60. தமிழ்நாட்டின் முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி யார்?
பத்மினி ஜேசுதுரை
Q61. தமிழக அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை .....................முறையின் மூலம் செய்து வருகிறது.
தலைக்கீழ் சவ்வூடு பரவல் முறை
Q62. தமிழ் நாட்டில் எந்த ஆண்டு பெண்களை கேலி செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட்டது?
1997
Q63. தமிழ்நாட்டில் காடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மாவட்டம் ....
கோயம்புத்தூர்
Q64. தமிழ்நாட்டில் பழைய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் [1] வட மதுரை [2] அத்திரம்பாக்கம் [3] பல்லாவரம்
அனைத்து இடங்களிலும்
Q65. தமிழக கல்லூரிகளில், தமிழ் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1970
Q66. தமிழ்நாட்டின் மணி முத்தாறு தோன்றுமிடம்
கல்வராயன் மலை
Q67. தமிழ்நாட்டின் "அண்ணா விருது" எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
சிறந்த வசனகர்த்தா
Q68. தமிழ் நாட்டையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய கணவாய் எது?
பாலக்காடு
Q69. தமிழ்நாட்டில் மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் எது?
திருநெல்வேலி
Q70. தமிழகத்தில் எத்தனை புலிகள் காப்பகம் உள்ளன?
3
Q71. கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் பிறந்த ஊர் எது?
ஈரோடு
Q72. தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
விருது நகர்
Q73. தமிழ் நாட்டின் முதல் செய்தித்தாள் எது?
மெட்ராஸ் மெயில்
Q74. தமிழ்நாட்டின் முதல் பெண் மாவட்ட தீயணைப்பு படை அதிகாரி யார்?
மீனாட்சி விஜயகுமார்
Q75. தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1857
Q76. தமிழ் நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம் எது?
தஞ்சாவூர் காவிரி படுகை (நரிமணம்)
Q77. தமிழ் நாட்டில் மும்மொழித் திட்டம் எந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டது?
1965
Q78. தமிழ் நாட்டில் அமைந்துள்ள மிகச் சிறிய விலங்குகள் சரணாலயம்
வல்ல நாடு
Q79. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்.......
அரிக்கமேடு
Q80. தமிழ் நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
39
Q81. ஜல் புயல் தமிழகத்தைத் தாக்கிய நாள் எது?
8.11.2010
Q82. தமிழ்நாட்டின் பருத்தி நகரம் எனப்படுவது
கோயம்புத்தூர்
Q83. மேட்டூர் அணையின் மற்றொரு பெயர் என்ன?
ஸ்டான்லி அணை
Q84. தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
32
Q85. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டின் கல்வியறிவுத் திறன் சதவிகிதம் எவ்வளவு?
80.33%
Q86. தமிழகத்தில் குறிஞ்சி எங்கு மலர்கிறது?
நீலகிரி மலை
Q87. தமிழகத்தின் ஹாலந்து என அழைக்கப்படும் மாவட்டம்
திண்டுக்கல்
Q88. தமிழ்நாட்டின் கவிஞர் கண்ணதாசன் விருது எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
சிறந்த பாடலாசிரியர்
Q89. தமிழநாட்டில் சட்டமேலவை ஒழிக்கப்பட்ட ஆண்டு
1986
Q90. வெண்ணாறு கால்வாயைக் கட்டியவர்
கரிகாலச் சோழன்
Q91. தமிழ் நாட்டின் முதல் பெண் D G P [Director General of Police) யார்?
லேத்திகா சரண்
Q92. தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது?
தஞ்சாவூர்
Q93. "கோன சாஸ்த்ரா" என்ற தெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் எங்கு பின்பற்றப்படுகிறது?
உதகமண்டல பழங்குடியினரால்
Q94. "சிறு மலை வாழைப்பழம்" தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் கிடைக்கிறது?
திண்டுக்கல்
Q95. தமிழ் நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
வ.உ.சி
Q96. பூண்டி நீர்த்தேக்கம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
காமராசர்
Q97. தமிழ்நாட்டில் அதிகம் மழை பெய்யும் இடம் எது?
ஆனைமலை
Q98. கீழ்க்கண்ட எந்த இடம் பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது?
மாமல்லபுரம்
Q99. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியின் பருவகாலம் எது?
ஜூன் முதல் ஜூலை
Q100. தமிழ்நாட்டில் வனவிலங்கு சரணாலயங்கள் எத்தனை உள்ளன?
8
Q101. தமிழ் நாட்டில் காட்டுப் பகுதியின் விகிதாச்சாரம் ..........
17%
Q102. தமிழ் நாட்டில் அதிக பாறைகள் காணப்படும் இடம்
கன்னியாகுமரி
Q103. தமிழ்நாட்டில் காற்று சக்தி வளம் மிகுந்த மாவட்டங்கள் எவை?
கோயம்புத்தூர்,திருநெல்வேலி, கன்னியாகுமரி
Q104. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனை மரம்
Q105. தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
1951
Q106. சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது எது?
உத்தமர் காந்தி விருது
Q107. நம்நாடு விடுதலை அடைந்த போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் யார்?
ஓ.பி.ராமசாமி ரெட்டியார்
Q108. தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ......
1992
Q109. தமிழ்நாட்டில் "கோவில்களின் நகரம்" என அழைக்கப்படுவது.........
காஞ்சிபுரம்
Q110. தமிழகத்தில் எத்தனை பறவைகள் சரணாலயம் உள்ளன?
12
Q111. ஊட்டி,ஏற்காடு,போன்ற மலை வாசஸ்தலங்கள் எந்த மாவட்டங்களில் உள்ளன?
நீலகிரி,சேலம்
Q112. தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
கோயம்புத்தூர்
Q113. தமிழ்நாட்டில் யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
தூத்துக்குடி
Q114. தமிழ்நாட்டில் யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
தூத்துக்குடி
Q115. தமிழ்நாட்டில் கனநீர் தயாரிக்கும் இடம்
தூத்துக்குடி
Q116. தமிழகத்தில் ஓடும் மிகப் பெரிய நதி எது?
காவேரி
Q117. தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித் திட்டம் எது?
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்
Q118. எந்த நீர்வீழ்ச்சி "தி ஸ்பா ஆஃப் தி சவுத்" (the spa of the south)என அழைக்கப்படுகிறது?
குற்றாலம்
Q119. தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவில் வனப்பகுதி சுமார் எத்தனை சதவிகிதம் உள்ளது?
15%
Q120. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
பாபநாசம்
Q121. தமிழ்நாட்டில் கூந்தன் குளம் எதற்கு குறிப்பிடத்தக்கது?
பறவைகள்
Q122. தமிழ் நாட்டின் முதல் மேயர் யார்?
முத்தையா செட்டியார்
Q123. தமிழ்நாட்டின் திட்டக்குழுவின் தலைவர் யார்?
முதலமைச்சர்
Q124. வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
தேனி
Q125. ரப்பர் தோட்டங்கள் மிகுதியாக உள்ள தமிழக மாவட்டம்
கன்னியாகுமரி
Q126. .........தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கபடுகிறது
சிவகாசி
Q127. தமிழ்நாட்டில் 10+2+3 கல்வி முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1978
Q128. தமிழ்நாட்டில் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுவது
தஞ்சாவூர்
Q129. தமிழகத்தில் கட்டாயக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு .......
1949
Q130. தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக மழைபெறும் பருவம்
வடகிழக்கு பருவக்காற்று காலம்
Q131. ஏரிப் பாசன மாவட்டம் என்று அழைக்கப்படுவது
காஞ்சிபுரம் மாவட்டம்
Q132. தமிழ் நாட்டின் முதல் பெண் மேயர் யார்?
தாரா செரியன்
Q133. ஏற்காடு மலைவாழிடம் எந்த மலை மீது உள்ளது?
சேர்வராயான் மலை
Q134. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள மாவட்டம்
வேலூர் மாவட்டம்
Q135. காமராஜருக்குப் பிறகு தமிழக முதலமைச்சராக அமர்ந்தவர் ........
பக்தவத்சலம்
Q136. தமிழ்நாட்டில் பெரும்பான்மை மழை பெய்யும் மாதங்கள்
அக்டோபர் - நவம்பர்
Q137. தமிழ்நாட்டின் எந்த இரு மாவட்டங்களில் தங்கம் கிடைக்கிறது (இருப்பதாக அறியப்பட்டுள்ளது)?
நீலகிரி, கோவை
Q138. தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் (பெட்ரோல்) உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்
திருவாரூர்
Q139. தமிழ்நாட்டில் சுண்ணாம்பு பாறைகள் மிகுதியாகக் காணப்படும் மாவட்டம் எது?
பெரம்பலூர்
Q140. நடராஜர் ஆலயம் எங்கு உள்ளது?
சிதம்பரம்
Q141. வடக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தையும் , மேற்கிலும் , வடக்கிலும் ஆந்திர மாநிலத்தையும் , தெற்கில் திருவண்ணாமலை மாவட்டத்தையும் எல்லையாக கொண்ட மாவட்டம்.
வேலூர்
Q142. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு எது?
1977
Q143. தில்லைவனம் என்ற பெயரால் முன்பு அழைக்கப்பட்ட பகுதி
சிதம்பரம்
Q144. தமிழ்நாட்டில் கிராபைட் தொழிற்சாலை எங்குள்ளது?
சிவகங்கை
Q145. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்.
காஞ்சிபுரம்
Q146. கஞச மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம்
Q147. தமிழ்நாட்டின் கலைவாணர் விருது எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
சிறந்த நகைச்சுவை நடிகர்
Q148. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு கொண்டுவரப்பட்ட நாள் .......
14.11.1980
Q149. தமிழ்நாட்டில் செங்கோட்டைக் கணவாய் எந்த மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது?
வருஷநாடு மற்றும் மகேந்திரகிரி
Q150. தமிழ்நாட்டில் செய்தித்தாள் உற்பத்தி தொழிற்சாலை உள்ள இடம்
புகளூர்
Q151. 133 அடி உயரமான திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ள இடம்
கன்னியாகுமாரி
Q152. தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார்?
ஜோதி வெங்கடாசலம் -- 1953-54 -- ராஜாஜியின் தலைமையின் கீழ்.
(இவருக்கு பிறகு வந்த பெண் அமைச்சர் -- லூர்தம்மாள் சைமன் -- 1957-1962 - காமராஜ் தலைமையின் கீழ்) "
Q153. தமிழ் நாட்டின் முதல் தமிழ் செய்தித்தாள் எது?
சுதேசமித்ரன்
Q154. தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரதநாட்டியம்.
Q155. தமிழ் நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வு தொடங்கப்பட்ட வருடம் எது?
1979
Q156. தமிழகத்தில் எத்தனை உலக புராதனச் சின்ன்ங்கள் உள்ளன?
5 -- தஞ்சாவூர், கங்கைக் கொண்ட சோழபுரம், தாராசுரம், மகாபலிபுரம், ஊட்டி.
Q157. தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்குமிடம் எது?
சேலம்
Q158. தமிழகத்தின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
555 பேர் - ஒரு சதுர கி.மீ க்கு.
Q159. தமிழ் எப்போது தமிழ்நாட்டின் ஆட்சி மொழியானது?
ஜனவரி 1958
Q160. தமிழகத்தில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை -- மேலக்கோட்டை -- 1997
Q161. பெரியார் நீர்த்திட்டம் எந்த மாவட்டத்திற்குப் பாசன வசதி அளிக்கிறது?
தேனி மாவட்டம்
Q162. 2011 கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் பாலின விகிதம் என்ன?
999:1000
Q163. தமிழகத்தில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள மாவட்டம் எது?
நீலகிரி
Q164. தமிழகத்தில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமுள்ள மாவட்டம் எது?
சென்னை
Q165. "தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றம்" சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
1948
Q166. தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர்
Q167. தமிழ்நாட்டில் நிலப்பரப்பின் அடிப்படையில் காணப்படும் சிறிய மாவட்டம்
சென்னை
Q168. தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு உள்ள மாவட்டம் எது?
தர்மபுரி -- 64.71%
Q169. தமிழகத்தின் சட்ட மேலவையின் கடைசி தலைவராக இருந்தவர் யார்?
மா.பொ.சி
Q170. தமிழகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
மக்களவை -- 39; மாநிலங்களவை -- 18.
Q171. தமிழ்நாட்டில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன?
5
Q172. தமிழகத்தில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?
"12 -- சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல்."
Q173. சேலம் ரயில்வே கோட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
நவம்பர் 1, 2007
Q174. தமிழ் நாட்டின் எந்த தலைவர் "வைக்கம் வீரர்" என அழைக்கப்படுகிறார்?
தந்தைப் பெரியார்
Q175. தமிழகத்தின் மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
Q176. தவத்திரு குன்றக்குடி அடிகளார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
சிவகங்கை
Q177. தமிழகத்தின் மொத்த நகர பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?
561
Q178. தமிழ்நாட்டில் முதல் நீர்மின் திட்டம் நிறுவப்பட்ட இடம் எது?
பைக்காரா
Q179. தமிழகத்தின் மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
Q180. தமிழ்நாட்டில் மலைகளே இல்லாத மாவட்டம் எது?
தஞ்சாவூர்
Q181. தமிழக சட்டமன்ற நியமன உறுப்பினர் எத்தனை பேர் ?
ஒன்று
Q182. தமிழ்நாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின் சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்?
செட்டிகுளம்
Q183. தமிழகத்தின் எந்த மாவட்டம் இரண்டு பிரிவுகளாக உள்ளது?
நாகப்பட்டினம் -- இடையில் திருவாரூர் மாவட்டம் உள்ளது.
Q184. தமிழ்நாட்டில் கடல் அனல் மின் மாற்று நிலையம் அமைந்துள்ள இடம் எது?
குலசேகரப்பட்டினம்
Q185. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 -- திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி. "
Q186. தமிழ்நாட்டில் சர்ச்சைக்குள்ளாகி நிலுவையில் இருக்கும் சேது சமுத்திரம் திட்டத்தின் நீளம் எவ்வளவு?
150 கி.மீ
Q187. தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ளது?
சென்னை
Q188. "சென்னை நாள்" கொண்டாடப்படும் நாள்
22 ஆகஸ்ட்
Q189. தமிழ்நாட்டில் "வாட்வரி" அமல்படுத்தப்பட்ட ஆண்டு
ஜனவரி 2007
Q190. தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது?
சென்னை
Q191. "மெட்ராஸ்" நகரம் " சென்னை" யாக எப்போது மாற்றப்பட்டது?
1996
Q192. தமிழகத்தில் "தென் இந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு" என்று அழைக்கப்படுவது
கன்னியாகுமரி
Q193. தமிழகத்தின் முதல் கூட்டுத்துறை அனல் மின் நிலையம் எங்குத் தொடங்கப்பட்டது?
ஜெயங்கொண்டம்
Q194. தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் எவ்வளவு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது?
3305 ச.கி.மீ
Q195. தமிழ்நாட்டின் 32வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு
2008
Q196. தூத்துக்குடியில் உள்ள முக்கியமான தொழிற்சாலை/கள்?
இராசயனம், உரம், அனல் மின்
Q197. தரங்கம்பாடி எந்த மாவட்டத்தில் உள்ளது?
நாகப்பட்டினம்
Q198. தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் முக்கியமான நதி வைகை எங்கு தோன்றுகிறது?
அகஸ்தியர் குன்றுகள்
Q199. தமிழகத்தின் எந்த மாவட்டம் கல்வியறிவில் முதன்மையாக உள்ளது?
கன்னியாகுமரி. 92.14%
Q200. தமிழ்நாடு பரவி காணப்படும் அட்சரேகைகளின் அளவு?
8° N' 4 -- 13° 35' N
Q201. கல்வியறிவில் தமிழகத்தின் நிலை என்ன?
நான்காவது -- 80.33%
Q202. தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றால் அதிக அளவு மழை பெறும் மாவட்டங்கள்:
கிழக்கு மாவட்டங்கள் -- திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர்.
Q203. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
24.7.2004
Q204. தமிழ் நாட்டில் மதிய உணவுத் திட்டம் எந்த முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
காமராஜர்
Q205. இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
இருபத்தி மூன்றாவது இடம்.
Q206. தமிழகத்தில் எந்த நீர்மின் நிலையத்தின் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது?
மேட்டூர்
Q207. தமிழகத்தில் சட்ட மேலவை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1935
Q208. இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
ஆறாவது இடம் -- 2011 கணக்கெடுப்பின் படி தமிழக மக்கள்தொகை -- 7,21,38,958
Q209. தமிழ்நாட்டிலிருந்து ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற ஒரே விளையாட்டு வீரர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த் - 1991-92 -- சதுரங்க உலக சாம்பியன்
Q210. தமிழகத்தில் அதிக அளவு எந்த மலைச்சரிவில் மண் அரிப்பினால் பாதிப்பு ஏற்படுகிறது?
கம்பம் மற்றும் போடி பகுதி
Q211. தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவு
1,30,058 ச.கி.மீ
Q212. கூடங்குளம் எதற்குப் புகழ் பெற்றது?
அணுமின் நிலையம்.
Q213. தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
Q214. தானே புயல் தமிழ்நாட்டை எப்போது தாக்கியது, அதனால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது?
28.12.2011 - கடலூர்.
Q215. 1944ல் எந்த மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக உருமாறியது?
சேலம்
Q216. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மற்றும் சிறிய மாவட்டம் எது?
பெரியது - விழுப்புரம் - 7217 ச.கி.மீ; சிறியது - சென்னை - 178 ச.கி.மீ.
Q217. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தள்
Q218. தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் யார்?
கே. ப்ரீத்திகா யாஷினி
Q219. தமிழ்நாட்டின் கீழ்கண்ட எந்த இடத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது?
களக்காடு
Q220. தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர் விருது எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
சிறந்த நடிகர்
Q221. தமிழகத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?
1. முத்து லட்சுமி ரெட்டி - சுதந்திரத்திற்கு முன்பு - இவர் தான் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், மேலும் இவர் தான் உலகத்தின் முதல் பெண் சட்டமன்ற அவைத்தலைவர் (உதவி). 2.அஞ்சலை அம்மாள் சுதந்திரத்திற்கு பின்.
Q222. தமிழகத்தில் உள்ளாட்சி தினமாகக் கொண்டாடப்படும் நாள்
நவம்பர் 1
Q223. தமிழக அரசால் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக்குபவரை ஊக்குவிக்க எந்த விருது வழங்கப்படுகிறது?
முதலமைச்சர் விருது.
Q224. தமிழகத்தில் முதல் மற்றும் நூறாவது "உழவர் சந்தை" தொடங்கப்பட்ட இடம்
மதுரை
Q225. தமிழக அரசால் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவரும் தமிழ் அறிஞருக்கு எந்த விருது வழங்கப்படுகிறது?
உமறுப்புலவர் விருது
Q226. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் தமிழ் படம்
காளிதாஸ்
Q227. "நான்மாடக் கூடல்" என அழைக்கப்படும் தமிழ்நாட்டு நகரம்
மதுரை
Q228. தமிழக அரசால், அயல் மொழியில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் மொழி பெயர்ப்பாளருக்கு எந்த விருது வழங்கப்படுகிறது?
ஜி.யு.போப் வருது.
Q229. தமிழ்நாட்டில் உள்ள மொத்த காடுகளில் அதிக அளவு கொண்ட மாவட்டம்
ஈரோடு
Q230. தென் இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் நகரம் எது?
சென்னை
Q231. தமிழகத்தின் அமைவிடைத்தை சரியாக தேர்ந்தெடுக்கவும். கிழக்கே ...........
70°15' தீர்க்கத்திலிருந்து 80°20' தீர்க்கம் வரை
Q232. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கை திட்டம் மூலம் குடிநீர் எந்த ஆண்டு முதல் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது?
1997
Q233. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் எப்போது துவங்கப்பட்டது?
1978
Q234. சென்னை மாவட்டத்தில் எத்தனை தாலுக்காக்கள் அடங்கியுள்ளது?
10
Q235. சென்னை மாவட்டத்தில் எத்தனை சட்ட மன்ற தொகுதிகளும், நாடாளுமன்ற தொகுதிகளும் அடங்கியுள்ளன?
16, 3
Q236. தமிழ்நாட்டில் (இந்தியாவிலும் மற்றும் காமன்வெல்த் நாடுகளிலும்) அமைக்கப்பட்ட முதல் மாநகராட்சி எது?
சென்னை - 29.9.1688
Q237. தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை
31

Q238. கிராம நிர்வாக அதிகாரி (அலுவலர் எனவும் அழைக்கப்படுபவர்) என்பவர் யார்?
கிராம நிர்வாக அதிகாரி என்பவர், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு, கிராமங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய ஒரு அரசாங்க பிரதிநிதி.
Q239. கிராம நிர்வாக அதிகாரி எந்த துறையின் கீழ் பணிபுரிகிறார்?
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக பணிபுரிகிறார். ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் (தாசில்தார்) தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறார். வருவாய்த்துறையின் அடித்தளமாக கிராம நிர்வாகம் அமைகிறது. கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அரசின் பிரதிநிதியாகவும் கிராம மக்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றும் பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
Q240. கிராம நிர்வாக அதிகாரியின் பணியின் எல்லை என்ன?
குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர். இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
Q241. கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முறையை கையாள்வது எந்த அமைப்பு?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
Q242. கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முறையை கையாள்வது எந்த அமைப்பு?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
Q243. கிராம நிர்வாக அதிகாரிகளை, தமிழ் நாடு தேர்வாணையம் மூலம் நேரடியாக தேர்வு/நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட முதல்வர் யார்?
மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன். இந்த ஆணைக்கு முன்பாக பகுதி நேர கிராம அலுவலர் பணியிடங்கள் இருந்தன. அவை 14.11.1980 முதல் தமிழ்நாடு பகுதி நேர கிராம அலுவலர் ஒழிப்புச் சட்டம் 3/81 ன் படி ஒழிக்கப்பட்டது. அரசாணை எண் 2747 வருவாய்த் துறை நாள் 12.12.1980ன் படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுமத்தின் வரையறைக்குள் கொண்டு வரப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பதவி நியமனம் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.
Q244. கிராம நிர்வாக அதிகாரி தேர்வு தகுதிகள் யாவை?
1. குறைந்த பட்ச 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. இந்த பதவிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
Q245. கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்த அரசு ஆணை எண் என்ன?
581
Q246. கிராம நிர்வாக அதிகாரிகளின் முக்கிய பணிகள் யாவை?
கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் மற்றும் கடமைகள் :
(அரசாணை எண் 581, 4.3.1987)
1. கிராம கணக்குகளைப் பராமரித்தல் ,மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல்.
2. சர்வே கற்களைப் (நில அளவீடு குறியீட்டுக் கல்) பராமரிப்பது , காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது .
3. நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது.
4. பிறப்பு , இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது , அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது.
5. தீ ,விபத்து, வெள்ளம் , புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது.
6. கொலை ,தற்கொலை , அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல்.
7. காலரா , பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் , தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல்.
8. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
9. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
10. அரசுக் கட்டிடங்கள் ,மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
11. புதையல், புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு பற்றி உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தல் .
12. முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது.
13. முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரித்தல் .
14. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல் .
15. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல்.
16. கிராம பணியாளர்களுடைய பணியினைக் கண்காணித்தல் .
17. சட்டம் ஒழுங்கு பேணுதல் ,உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல் ,சட்டம் ஒழுங்கு பேணுதற்காக கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் .
18. தேர்தல் பணிகள் மேற்கொள்வது .
19. கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரித்து வட்ட அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புதல்.
20. பொதுச் சுகாதாரம் பராமரித்தல் .
21. நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி உடனடி நடவடிக்கை எடுத்தல் .
22. கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்து அறிக்கை அனுப்பதல்.
23. வருவாய்த் துறை அலுவலர்களூக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் உரிய அறிக்கை அளித்தல். 24. குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் , சந்தேகத்திற்கிடமான அன்னியர்கள் வருகையையும் தெரிவித்தல்.
25. கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது, அவ்வகை நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல்.
26. அரசு அவ்வப்போது தொடங்கும் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல் .
27. மனுநீதி நாள் நிகழ்ச்சி நடத்த உரிய பணிகள் செய்தல்
28. பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல் , ஏரிகளிலும , நீர் வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது அவற்றை முறையாகப் பராமரிப்பது .
29. கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து ஒரு பதிவேடு பராமரித்தல் .
30. பதிவு மாற்றம் [Transfer Rigistry ]அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பராமரித்தல்.
31. நிலப் பதிவேடுகளை கணிணி மயமாக்குதலுக்கான பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
32. கிராம அளவில் கடன் பதிவேடு மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்தல்.
33. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.
34. பொது இடங்களில் வருடத்திற்கு ஐம்பது பயன் தரும் மரங்களை நடுவது.
35. ஒவ்வொரு பசலி ஆண்டின் முடிவிலும் கிராமத்தின் வருவாய் நிலவரி கேட்புத் தொகையை வசூல் செய்து வருவாய் தீர்வாயத்தில் இறுதித் தணிக்கையை முடிப்பது மிக மிக முக்கிய பணியாகும்.
Q247. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அரசாங்கத்தின் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது?
1969ம் ஆண்டு பிறப்புகள் மற்றும் இறப்புகள் சட்டம். (மத்தியச் சட்டம் 18/1969).
Q248. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு முறை எப்போது முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
2000 ம் ஆண்டு முதல்.
Q249. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு படிவம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
பிறப்பு - இறப்பு பதிவுகளுக்கான தகவல் தரும் படிவம் இரு பிரிவுகளைக் கொண்டது.
அ. சட்டப்பகுதி (Legal Part)
ஆ. புள்ளிவிவரப் பகுதி (Statiscal Part).
Q250. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சம்பந்தமாக, கிராம நிர்வாக அதிகாரியின் பங்களிப்பு என்ன?
கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் படி பதிவாளர் தகவலாளரிடம் பெற்ற தகவலை, ஒவ்வொரு மாதம் முடிந்தவுடன் அடுத்த மாதம் முதல் 5 - தேதிக்குள் வட்டாட்சியருக்கு தவறாது அனுப்ப வேண்டும்.
Q251. பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய அரசாங்க விளக்கம் என்ன?
பிறப்பு/இறப்பு என்பதன் விளக்கம் : (சட்டம் பிரிவு 2)-ன் படி
1. பிறப்பு என்பது உயிருள்ள பிறப்பு அல்லது உயிரற்ற பிறப்பு என்று பொருள் படும்.
2. இறப்பு என்பது உயிருள்ள பிறப்பு நிகழ்பெற்ற பின்பு எப்போதாயினும் உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் நிலையாக மறைதல் ஆகும்.
3. கர்ப்ப முதிர் கரு இறப்பு ( ) : என்பது காலத்தின் கால அளவை பொருட்படுத்தாமல் தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவதற்கு அல்லது பிரித்தெடுப்பதற்கு முன்பாக உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் இல்லாதிருத்தல் என்று பொருள்படும்.
4. உயிருள்ள பிறப்பு ( ) என்பது கர்ப்பத்தின் கால அளவைப் பொருட்படுத்தாமல், தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவது அல்லது பிரித்தெடுப்பது என்று பொருள் படும்.
ஆனால் அது அவ்வாறு வெளியேற்றப்பட்ட அல்லது பிரித்தெடுக்கப்பட்ட பின்பு மூச்சு விடுதல் அல்லது உயிரியக்கத்தின் பிற அறிகுறி எதனையும் காட்டுதல் வேண்டும். மற்றும் அத்தகைய பிறப்பில் உண்டான ஒவ்வொன்றும் உயிருடன் பிறந்ததாக கருதப்படும். உயிரற்ற பிறப்பு ( ) என்பது கருவில் உண்டாவது. குறைந்தபட்சமாக வகுத்துரைக்கப்பட்டுள்ள கர்ப்ப கால அளவை நிறைவேற்றியுள்ளவிடத்து கர்ப்ப முதிர்கரு இறப்பு ""உயிரற்ற பிறப்பு"" என்று பொருள்படும்.
5. கர்ப்ப கால அளவு (விதி-3) (பிரிவு-2)ன் படி 28 வாரங்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
Q252. பிறப்பு மற்றும் இறப்பு விதிகளின் படி, கர்ப்ப கால அளவு எவ்வளவு?
28 வாரங்கள்.
Q253. பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய அறிக்கை படிவங்கள் யாவை?
பிறப்பு - இறப்பு பற்றி அறிக்கைகளை மேற்கொள்ளும் படிவங்கள் :
படிவம் - 1 : பிறப்பு அறிக்கை செய்யும் படிவம் (Birth Reporting Form)
படிவம் - 2 : இறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Death Reporting Form)
படிவம் - 3 : உயிரற்ற பிறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Still Birth Reporting Forms)
படிவம் - 4 : மருத்துவமனையில் நேரிட்ட இறப்புக்கான காரணத்திற்குரிய மருத்துவச் சான்று (Medical Certificate)
படிவம் - 5 : பிறப்புச் சான்று (Birth Certificate)
படிவம் - 6 : இறப்புச் சான்று (Death Certificate)
படிவம் - 7 : பிறப்புப் பதிவேடு (Birth Register)
படிவம் - 8 : இறப்புப் பதிவேடு (Death Register)
படிவம் - 9 : உயிரற்ற பிறப்புப் பதிவேடு (Still Birth Register)
படிவம் - 10 : கிடைக்கப்பெறாமை சான்று (Non-availability Certificate)
படிவம் - 11 : பிறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on birth)
படிவம் - 12 : இறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on death)
படிவம் - 13 : உயிரற்றப் பிறப்புகள் பற்றிய மாதந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on still birth)
படிவம் - 14A : அறிக்கைகள் பெறும் கட்டுப்பாடுப் பதிவேடு (Control Register for receipts).
படிவம் - 14B : ஆண்டு புள்ளி விவர அறிக்கை (Statistical Report for the year).
Q254. பிறப்பு / இறப்பு சான்றுகளுக்கு தகவலாளர் தர வேண்டிய விவரங்கள் அடங்கிய படிவங்கள் யாவை?
(விதி - 5) ன் படி --
படிவம் - 1 : பிறப்பு அறிக்கை செய்யும் படிவம் (Birth Reporting Form)
படிவம் - 2 : இறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Death Reporting Form)
படிவம் - 3 : உயிரற்ற பிறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Still Birth Reporting Forms)
Q255. பிறப்பு / இறப்பு சான்றுகளுக்கு தகவலாளர் தர வேண்டிய விவரங்கள் அடங்கிய படிவங்கள் யாவை?
(விதி - 5) ன் படி --
படிவம் - 1 : பிறப்பு அறிக்கை செய்யும் படிவம் (Birth Reporting Form)
படிவம் - 2 : இறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Death Reporting Form)
படிவம் - 3 : உயிரற்ற பிறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Still Birth Reporting Forms)
Q256. பிறப்பு - இறப்பு காலதாமத பதிவுகள், மேல் முறையீடு சம்பந்தப்பட்ட விதிகள் யாவை?
(விதி 9, பிரிவு - 13) ன் படி --
1. பிறப்பு - இறப்பு நிகழ்வு நடந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
2. இவை தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு விதி 5ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. 21 நாட்களுக்கு அதிகமானால் அதாவது நிகழ்வு நடந்த நாளிலிருந்து 30 நாள்களுக்குள் பதிவு செய்தால் பதிவாளர் விதி 9ல் கண்டுள்ளவாறு காலதாமதக் கட்டணம் ரூ. 2 னைச் செலுத்திய பின் பதிவு செய்யலாம்.
4. பிறப்பு அல்லது இறப்பு நடந்து 30 நாட்களுக்கு மேல் ஆனால் ஓராண்டு முடிவதற்கு முன்பாக தகவல் தரும் பட்சத்தில் ஊராட்சித் தலைவரின் எழுத்து மூலமான அனுமதி பெற்றும் காலதாமதக் கட்டணம்
ரூ. 5 செலுத்தப்பட்ட பின்பு பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என விதி (9(2)) கூறுகிறது.
5. ஓராண்டுக்குள் பதிய அனுமதி மறுக்கப்பட்டால் ஊராட்சித் தலைவரின் ஆணையை எதிர்த்து, வருவாய் கோட்டாட்சியருக்கு 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என விதி (9(4)) கூறுகிறது.
6. கோட்டாட்சியர் பதியாத பட்சத்தில் கோட்டாட்சியரின் ஆணைக்கு எதிராக மாவட்ட ஆட்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம்.
Q257. பிறப்பு குழந்தையின் பெயரை சான்றில் பதிவு செய்தல்/வரம்பு காலம் பற்றிய அறிவுறுத்தல்கள் யாவை?
விதி 10 -- பிரிவு 14 ன் படி :
1. குழந்தை பிறந்த விவரங்களைப் பதிவு செய்யும் போது குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாமல் பதிவு செய்யப்பட்டிருந்தால், 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெயரை கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும்.
2. 12 - மாதங்கள் கழித்து ஆனால் 15 ஆண்டுகளுக்குள் பெயர் பற்றிய விவரம் தெரிவிக்கும் பட்சத்தில் ரூபாய் 5 காலதாமதக் கட்டணம் செலுத்தப்பட்ட பின் பெயர் பதிவாளர் பதிவு செய்யலாம்.
3. 1-1-2000-த்திற்குப் பிறகு நிகழ்ந்த பிறப்புக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகள்.
4. 1-1-2000-த்திற்கு முன்பு நிகழ்ந்த பிறப்புக்கு திருத்தியமைக்கப்பட்ட விதிகள் செயலாக்கத்திற்கு வந்த நாளிலிருந்து (1-1-2000) 15 ஆண்டுகள்.
5. நிர்ணயிக்கப்பட்ட 15 ஆண்டுகள் காலக்கெடு முடிவுற்ற பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்ய விதிகளில் இடமில்லை.
6. ஓராண்டுக்குப் பின் மற்றும் 15 - ஆண்டுகளுக்குள் பெயர் பதிவை மேற்கொண்டால் தாமதக் கட்டணம்
ரூ. 5 வசூலித்து, பதிவு மேற்கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலருக்கு தகவல் அனுப்ப வேண்டும்.
7. ஒருமுறை பெயர் பதிவு மேற்கொள்ளப்பட்ட பின்பு பெயர் பதிவுகளை முழுவதும் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றலாகாது. ஆனால் எழுத்துப் பிழைகளை சரி செய்ய அதிகாரம் பெற்ற அலுவலர் அனுமதிக்கலாம்.
Q258. அயல்நாட்டிலுள்ள இந்திய குடிமக்களின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் யாவை?
(பிரிவு 20) :
• இந்திய தலைமைப் பதிவாளர் விதிக்கு உட்பட்டு அயல்நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களில் இந்தியாவுக்கு வெளியே வாழ்கின்ற இந்தியக் குடிமக்களைப் பதிவு செய்ய வேண்டும்.
• குடிமைச் சட்டம் 1955-ன் படி பிறப்பு - இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என பிரிவு 20 கூறுகிறது.
• வெளிநாட்டில் ""பிறந்து"" பிறப்பு பதியப்படாமல் இந்தியாவில் நிலையாக தங்கியிருக்கும் நோக்குடன் வந்து இந்தியாவில் தங்கிய நாளிலிருந்து 60 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
• இந்தியாவில் வந்து தங்கிய 60 நாள்களுக்கு மேல் பிறப்பினை பதிவு செய்யும்போது பிரிவு 13-ன் ஷரத்தின்படி பின்பற்ற வேண்டும்.
Q259. விபத்தினால் நிகழும் இறப்பின் பதிவுகள் எவ்வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
இறப்புகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. தற்கொலை, கொலை, விபத்துக்கள் அல்லது வன்முறை போன்றவற்றால் மருத்துவமனைகளில் சேர்த்த பின்பு ஏற்படும் இறப்புகள்.
2. பொது இடங்களில், சிறைச்சாலைகளில் ஏற்படும் இறப்புகள், தற்கொலை, கொலை, விபத்துக்கள் அல்லது வன்முறை போன்றவை மூலம் ஏற்படும் இறப்பை மருத்துவமனை பொறுப்பாளர்கள் பிரிவு 8(1) (பி)-ன் படி பதிவாளருக்கு பதிவு செய்ய தகவல் அளிக்க வேண்டும்.
கிராமக் கணக்குகள் பராமரிக்கப்படும் முறை பசலி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது.
ஒரு பசலி ஆண்டு என்பது ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடியும். (பொருளாதாரத்தில் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை கணக்கிடப்படுகிறது. அது போல் இது வேளாண் ஆண்டு)

கிராம நிர்வாகம் தொடர்பான சொற்கள் :

Q260. பசலி என்பது எதைக் குறிக்கிறது?
கிராமக் கணக்குகள் பராமரிக்கப்படும் முறை பசலி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. ஒரு பசலி ஆண்டு என்பது ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடியும். (பொருளாதாரத்தில் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை கணக்கிடப்படுகிறது. அது போல் இது வேளாண் ஆண்டு)
Q261. ஜமாபந்தி என்பது எதைக் குறிக்கிறது? :
அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய தீர்வை, வரி பாக்கி, நிலுவையில் உள்ள வரி பாக்கி, பாக்கி உள்ள வரித் தொகை, வசூல் செய்யப்பட்ட வரி கணக்கு பதிவு போன்றவற்றை புரிதல், சரி பார்த்தல், ஆய்வு செய்தல் ஆகிய பதிவேடுகளை தணிக்கை செய்யும் அதிகாரிகளால் செய்யப்படுவதே, இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆய்வுக்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசாங்க வருமான அதிகாரிகளுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
Q262. ரயத்துக்கள் என்பது எதைக் குறிக்கிறது?
விவசாயிகள்.
Q263. ராஜினாமாக்கள் என்பது எதைக் குறிக்கிறது?
சில நேரங்களில், கிராமத்திலுள்ள ரயத்துக்கள் (விவசாயிகள்) வெள்ளத்தினாலோ, தீயினாலோ பாதிக்கப்பட்ட நிலங்களைத் தங்களுக்குத் தேவையில்லை என்று சில சமயங்களில் அதன் நில உரிமையை அரசாங்கத்துக்கு விட்டு விடுவார்கள். இதன் மூலம் ராஜினாமா செய்த நிலங்களுக்கு அவர்கள் தீர்வை கட்ட வேண்டியது இல்லை. இவ்வாறு எழுத்து மூலம் எழுதிக் கொடுக்கும் மனுக்களுக்கு ராஜினாமாக்கள் என்று பெயர்.
Q264. பெஞ்ச் மார்க் என்பது எதைக் குறிக்கிறது?
நிலத்தில் வெவ்வேறு இடங்களில் நிலமட்ட உயரத்தைத் தொடர்ச்சியாகக் காட்டவும், சமுத்திர மட்டத்திற்குமேல் உள்ள உயரத்தைக் காட்டவும் சர்வே செய்யும் இந்திய சர்வே பார்ட்டியால் அமைக்கப்பட்ட அடையாளங்களில் ஒன்று பெஞ்ச் மார்க்.
Q265. வஜா (ரத்து) என்பது எதைக் குறிக்கிறது?
பருவகால கோளாறுகளின் காரணமாக மழை பெய்யாவிட்டாலும் அல்லது வெள்ளத்தின் காரணமாக பயிர் முழுவதும் சேதமாகிவிட்டாலும் அரசாங்கம் மேற்படி தீர்வையை வஜா செய்துவிடலாம். இவ்வாறு கோளாறு ஏற்படுவதற்கு நிலத்தின் சொந்தக்காரரின் அஜாக்கிரதை காரணமாக இருக்கக்கூடாது.
Q266. பவுண்டு என்பது எதைக் குறிக்கிறது?
கிராமத்தின் விளைச்சல் நிலங்களில் புகுந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் கால்நடைகளின் உரிமையாளர்களை தண்டிக்கும் பொருட்டுப் பிடித்து அடைக்கப் பயன்படுத்தும் இடம் தான் பவுண்டு.
Q267. இனாம்கள் என்பது எதைக் குறிக்கிறது?
ஒரு குறிப்பிட்ட காரியத்தைத் தொடர்ச்சியாகச் செய்வதற்காக, அதற்குப்பிரதிபலனாகக் கொடுக்கப்படும் நிலம் "இனாம் நிலம்" எனப்படும்.
Q268. கிவிட்ரெண்ட் என்பது என்ன?
ஊழியம் தேவைப்படாத கிராமங்களைப் பொறுத்தமட்டில் அவை உரிமை அளிக்கப்பட்ட இனாம்களாக் கருதப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தப்பட இனாம் நிலங்களை விற்கவோ, வாங்கவோ, மாற்றவோ உரிமையாக்கப்பட்டது. இதற்குண்டான தொகை ரயத்துவாரி (விவசாய) தீர்வைக்கு நிகராக விதிக்கப்பட்டது.
Q269. மனைத் தீர்வை என்பது எதைக் குறிக்கிறது?
நகராட்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டுமனைக்கு விதிக்கப்படும் மனைத்தீர்வை ஆகும்.
Q270. சொந்தம் என்பது எதைக் குறிக்கிறது?
முன்னாள் பாளையக்காரர்களுக்கு வழங்கப்பட்ட இனாம். பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். ஒரு பகுதி பல பாளையங்களாக பிரிக்கப்பட்டு, அந்த பாளையத்திற்கு ஒரு படைத் தலைவன் நியமிக்கப் பட்டார். அந்த படைத் தலைவனுக்கு "பாளையக்காரன்" எனப் பெயர். இந்தச் சொல் 16ம் நூற்றாண்டு காலத்திலிருந்து தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது. (பாளையம் என்ற துணைப்பெயர் கொண்ட பல ஊர்கள் தமிழ்நாடு, தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய இடங்களில் உள்ளது)
Q271. ஜோடி என்ற சொல் எதைக் குறிக்கிறது?
இனாம்தாரரால் இனாம் நிலங்களுக்காக ஜமீந்தாரருக்குச் செலுத்த வேண்டிய தொகை.
Q272. பேஷ்குஷ் என்பது எதைக் குறிக்கிறது?
ஜமீந்தாரர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை.
Q273. ஜமீன்தாரர் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
மன்னர் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல் செய்ய இடைத்தரகர்கள் ஏற்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு ஜமீந்தாரர் என்று பெயர்.
Q274. RSO - Revenue Standing Order (RSO 27/2) என்ற சொல் எதைக் குறிக்கிறது?
தனிநபருக்குச் சொந்தமான நிலங்களைக் காட்டக்கூடிய நிலங்களின் பட்டியலைக் கொண்ட அசல் பட்டா. இந்த ஆவணம் ஒவ்வொரு விவசாயிடமும் இருக்க வேண்டும்.
Q275. நி.ஆ.எண். 13/1 என்ற ஆணை எதைக் குறிக்கிறது?
இறந்துபோன கூட்டுப் பட்டாதாரர் நிலங்களுக்கு விசாரணை செய்து வாரிசு பட்டா வழங்குவது தொடர்பான ஆணை.
Q276. RSO 27/3 என்ற ஆவணம் எதைக் குறிக்கிறது?
விவசாயி வருவாய் தீர்வாயத்தின்போது திருத்தமான பட்டா வேண்டி மனு செய்தால் உடன் பட்டா தயார் செய்து அதனை ஜமாபந்தி அலுவலர் விவசாயிக்கு வழங்க வேண்டும்.
Q277. ஆயக்கட்டு என்ற சொல் எதைக் குறிக்கிறது?
ஒரு பாசன ஆதாரத்திலிருந்து (ஆறு, கால்வாய், குளம்) நீர் பெற பதிவு செய்யப்படும் நிலம்.
Q278. மகசூல் என்ற சொல் குறிப்பது ………………………...
விளைச்சல்.
Q279. நன்செய் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
பாசன வசதி கொண்ட நிலம்.
Q280. புன்செய் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
பாசன வசதி குறைந்த நிலம் அல்லது மழையை நம்பி விவசாயம் நடைபெறும் நிலம்.
Q281. குத்தகை என்ற சொல் குறிப்பது ……………………….
குறிப்பிட்ட ஒரு நிலத்தை அல்லது நிலத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தும் உரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மற்றொரு நபருக்கு அளிப்பது குத்தகையாகும்.
Q282. கிராம தானம் என்பது எதைக் குறிக்கிறது?
ஒரு கிராமத்தில் பொது பயன்பாட்டுக்காக (சத்திரங்கள், சுகாதார மையம் போன்றவற்றிற்கு) நிலத்தை ஒதுக்குவது கிராம தானமாகும்.
Q283. தானம் என்பது எதைக் குறிக்கிறது?
நிலத்தை இனாமாக அளிப்பது. இது ஒரு பொதுச் சொல்.
Q284. வில்லங்கச் சான்று என்பது எதைக் குறிக்கிறது?
ஒரு நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள அந்த நிலத்தை விலைக்கு வாங்குபவர் பெறும் ஆவணம். இது பதிவுத்துறையால் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மோசடி தடுக்கப்படுகிறது. வில்லங்கம் என்பது பொதுவாக "முறைகேடு" என்ற பொருள் படும்.
Q285. கிரயம் என்ற சொல் குறிப்பது …………….
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வது.
Q286. பட்டா என்பது எதைக் குறிக்கிறது?
குறிப்பிட்ட ஒரு நிலமோ அல்லது காலி மனையோ யாருடைய பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த்துறையால் வழங்கப்படும் ஆவணம். இது புத்தக வடிவிலோ அல்லது சான்றிதழ் வடிவிலோ இருக்கும்.
Q287. சிட்டா என்ற சொல் குறிப்பது?
ஒரு நிலத்தின் உரிமையாளரின் பயன்பாட்டில் உள்ள விவரங்கள் அடங்கிய ஆவணம் சிட்டா ஆகும். இது வருவாய்த்துறையினரால் வழங்கப்படும்.
Q288. அடங்கல் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பு சர்வே எண், பயன்பாடு, அந்த இடத்தின் அமைவிடம் போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணம் "அடங்கல்" எனப்படும்.
Q289. புல எண் என்ற சொல் குறிப்பது …………………...
நில அளவை எண்.
Q290. விஸ்தீரணம் என்ற சொல் குறிப்பது ………………...
நிலத்தின் பரப்பு. (பரப்பளவு)
Q291. சுவாதீனம் என்ற சொல் குறிப்பது …………..
நிலத்தின் மீதான உரிமை.
Q292. நத்தம் புறம்போக்கு என்பது எதைக் குறிக்கிறது?
அரசுக்கு சொந்தமான இடம் (தனி நபர் பயன்பாட்டில் இருந்த நிலம், குறிப்பிட்ட ஆண்டுகளாக வரி செலுத்தாவிடில் அந்த நிலம் புறம்போக்கு என அறிவிக்கப்பட்டு அரசு நிலமாக பதிவு செய்யப்படுவது).
Q293. கிராம நத்தம் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலம்.
Q294. தேவதானம் என்ற சொல் குறிப்பது …………………...
கோவிலுக்கு தானமாக (இனாமாக) அளிக்கப்பட்ட நிலம்
Q295. தேவதாசி இனாம் என்பது எதைக் குறிக்கிறது?
கோவில்களில் பணியாற்றும் பெண்களுக்காக வழங்கப்பட்ட நிலம்.
Q296. அனுபோகம் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
பாத்தியதை (உரிமை). அனுபவ ரீதியாக பெறும் உரிமை.
Q297. ஆகரமணங்கள் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
ஆக்கிரமிப்புகள்.
Q298. கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் சான்றுகள் யாவை?
பன்னிரெண்டு வகையான சான்றுகள் : 1. சாதிச் சான்று 2. பிறப்பிட / இருப்பிடச்சான்று 3. வருமானச் சான்று 4. நாட்டினச் சான்று 5. வாரிசுச் சான்று 6. சொத்து மதிப்புச் சான்று 7. பிறப்பு / இறப்புச் சான்று 8. ஆதரவற்ற குழந்தைச் சான்று 9. ஆதரவற்ற விதவைச் சான்று 10. கலப்புத் திருமணச் சான்று 11. பள்ளிச் சான்றுகள் தொலைந்ததற்காக வழங்கப்படும் சான்று 12. கணவனால் கைவிடப்பட்டவர் சான்று
Q299. சாதிச் சான்று (Community Certificate) என்பது என்ன, அதன் அவசியம் என்ன?
மனித குலத்தில் சாதி முறை என்பது பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு முறை. வேத காலங்களில் தொடங்கி, மன்னராட்சி காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு, இன்றும் தொடரும் ஒரு பழக்கம். இந்த முறையால் சில பகுதியினர் வாழ்க்கையின் உயிரோட்டத்தில் முன்னேற்றமடையாமல் பின் தங்கியவர்களாகவே வாழ்ந்து வந்தனர். வளரும் நவீன சமுதாயத்தில், இவ்வாறு பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல ஒதுக்கீடு, சலுகைகளை வழங்கியுள்ளது. இவற்றை அந்த சமூகத்தினர் சட்ட ரீதியாக பெறவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் சான்று. பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் சான்றுகள் வழங்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து முடிவு செய்ய அதிகபட்சமாக 15 தினங்களே கால அவகாசம் உண்டு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்புச் சான்று மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து முடிவு செய்ய அதிகபட்சம் ஒரு மாத காலமே அவகாசம் உண்டு.
Q300. பிறப்பிட / இருப்பிடச்சான்று (Nativity - Residential Certificate) களின் முக்கியத்துவம் என்ன?
பிறப்பிடம் என்பது ஒருவர் பிறந்த இடத்தினையும், இருப்பிடம் என்பது ஒருவர் தொடர்ந்து வசிக்கும் இடத்தினையும் குறிக்கும். இச்சான்றிதழ் கல்வி நிறுவனங்களில் சேரவும், வேலை வாய்ப்பில், முன்னுரிமை பெறவும் உதவுகின்றன.
Q301. வருமானச் சான்று (Income Certificate) ன் முக்கியத்துவம் என்ன?
பொருளாதார ரீதியாக "வறுமைக் கோடு poverty line என்ற ஒரு விதி/வரைமுறை உண்டு. அதாவது ஒருவரின் வருமானம், அவருடைய அத்தியாவசிய வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை என்பதை குறிப்பது. இதன் நோக்கம் ஏழ்மையை ஒழிப்பது. இதன் அடிப்படையில் வழங்கப்படுவதே "வருமான சான்று". இந்தச் சான்று மனுக்கள் பெற்ற 15 தினங்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும். இச்சான்று 6 (ஆறு) மாத காலத்திற்கு மட்டுமே செல்லத்தக்கதாகும். [அரசு ஆணை (பல்வகை) 1509, வருவாய்த் துறை நாள். 27.11.1991]
Q302. நாட்டினச் சான்று என்பது என்ன?
ஒருவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், அதாவது குடியுரிமை பெற்றவர் என்பதை குறிக்கும் சான்று. இது வட்டாட்சியரால் முறையான விசாரணைக்கு பின்னரே வழங்கப்படும்.
Q303. வாரிசுச் சான்று (Legal Heirship Certificate) என்பது என்ன? ஏழு ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு காணாமற் சென்றுவிட்ட நபர்களை இறந்தவர்களாகக் கருதி வாரிசு சான்று வழங்கும் நிலைமை ஏற்படும்போதும். இச்சான்று வட்டாட்சியரால் 15 தினங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதால் முழு விசாரணை செய்து தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு பின் வரக்கூடிய வாரிசு/களை உறுதியாக்கும் சான்று. இந்தச் சான்று வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும். [அரசாணை (பல்வகை) எண். 2906, வருவாய்த் துறை, நாள். 4.11.1981]
Q304. சொத்து மதிப்புச் சான்று என்பது ..................
ஒருவருடைய சொத்தின் மதிப்பை, அரசாங்க கோப்புகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யும் சான்று. சார்பதிவாளர் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் வழிகாட்டி மதிப்பு (guideline value) இவற்றைப் பரிசீலித்து தக்க பரிந்துரை செய்ய வேண்டும். இச்சான்று வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லத்தக்கதாகும். இச்சான்று வட்டாட்சியரால் பதினைந்து நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
Q305. பிறப்பு / இறப்புச் சான்று என்பது என்ன?
1. பிறப்பு சான்று என்பது ஒருவருடைய வயதை நிர்ணயிக்கக்கூடியது. இதன் மூலம், அவரின் உரிமைகள், சலுகைகள் பெறுவதற்கான தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. இதில் அவர் பிறந்த நேரம், தேதி, இடம், ஊர், மருத்துவமனை போன்ற பல விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. 2. இறப்பு சான்று என்பது, ஒரு குடும்பத்தில் ஒருவர் மரணம் அடையும் போது வழங்கப்படுகிறது. இயற்கை மரணம் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு, ஆயுள் காப்பீடு, சலுகைகள், வாக்குப்பட்டியல், போன்றவைகளிலிருந்து பெயர் நீக்கம் செய்ய, இறந்தவர் பணி செய்த நிறுவனத்திலிருந்து சலுகைகள் பெற போன்ற பல காரியங்களுக்கு உதவியாக இருக்கும். மரணம் விபத்தால் ஏற்பட்டிருப்பின், முக்கியமாக இழப்பீடு பெறவும், மற்றும் மேற்கூறிய பணிகளுக்கும் உதவியாக இருக்கும். இரண்டு வகை மரணமும், ஒரு குடும்பத்தின் வாரிசுகளை நிர்ணயம் செய்யவும் உதவும்.
Q306. பிறப்பு மற்றும் இறப்பு சான்றின் தேசிய அளவிலான முக்கியத்துவம் யாது?
இதை முறையான வகையில் பதிவு செய்யப்படுவதால், துல்லியமான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பெரும் உதவியாக இருப்பது மட்டுமின்றி, அரசாங்கத்தால் மக்கள் தொகை, ஆண் பெண் விகிதாச்சாரம், பெருக்கம் போன்ற புள்ளி விவரங்களை சேர்த்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்க உதவும்.
Q307. பிறப்பு மற்றும் இறப்பு சான்று யாரால் பதிவு செய்யப்பட்டு, சேகரிக்கப்பட்டு, புள்ளி விவரங்கள் தொகுக்கப் படுகிறது?
பிறப்பு மற்றும் இறப்பு தகவல்களை பதிவாளரிடம் நிகழ்வு நடந்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் தர வேண்டும். பிறப்பு மற்றும் இறப்புக்கான சான்றுகளை பின்வரும் அதிகாரிகள் வழங்குகின்றனர். கிராம பஞ்சாயத்துக்களுக்கான பிறப்புகள் மற்றும் இரப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டளவில் - இந்திய தலைமைப் பதிவாளர். மாநில அளவில் - மாநில முதன்மைப் பதிவாளர். மாவட்ட அளவில் - மாவட்ட பதிவாளர். நகராட்சி மற்றும் மாநகராட்சி - பிறப்பு, இறப்பு பதிவாளர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள்.
Q308. பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் பெறுவதில் தற்சமயம் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?
பிறப்பு மற்றும் இறப்பு இரண்டையும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவ மனைகள், மயானங்கள் அன்றாட பிறப்பு இறப்பை எல்லைக்குட்பட்ட அலுவலகங்களும் அறிக்கை அனுப்பப்பட்டு கணினியேற்றம் செய்யப்படுவதாலும், மேலும் பல பதிவு அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டதாலும், சான்றுகள் பெறுவது மிக எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த முறை பெரும்பாலும் நகராட்சி, மாநகராட்சி நிலைகளில் இயக்கத்தில் உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டாலே போதுமானது. கிராம புறங்களில் இன்னும் இந்த முறை பெருமளவில் நடைமுறையில் இல்லை.
Q309. ஆதரவற்ற குழந்தைச் சான்று என்பது என்ன?
ஒரு குழந்தைக்கு ஆதரவு அளிக்க பெற்றோரோ, உறவினரோ அல்லாத பட்சத்தில், இவ்வகை சான்று வழங்கப்படுகிறது. வட்டாட்சியருக்கு வருவாய் ஆய்வாளர் மூலம் அறிக்கை செய்ய வேண்டும். இச்சான்று வட்டாட்சியரால் ஏழு நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
Q310. ஆதரவற்ற விதவைச் சான்று என்பது என்ன?
ஒரு பெண், திருமணமாகி, கணவர் இறப்பால் விதவை நிலை அடைந்து, அடைக்கலமின்றி உறவினர் ஆதரவு இன்றி இருக்கும் பெண்களுக்கு, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பல சலுகைகளைப் பெறுவதற்காக வழங்கப்படுகிறது. இச்சான்று வருவாய் கோட்டாட்சியரால் முப்பது நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
Q311. கலப்புத் திருமணச் சான்று என்பது என்ன?
சாதிகள் இல்லா ஒரு சமூகத்தை உருவாக்க, அரசாங்கம், பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறிய அளவில் சில சட்ட திட்டங்களை இயக்கி முயன்று வருகிறது. மாறி வரும் சமூக சூழ்நிலையில், காதல் மற்றும் சம்மத கலப்பு திருமணங்கள் நடப்பதும் பெருகி வருகிறது. இதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த ஒருவருக்கும், வேறு இனத்தைச் சார்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்படும் திருமணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சான்றுகள் வழங்கப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சமூக பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சமூகத்தில் சில சலுகைகளுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்கவும் இந்த சான்று வழங்கப்படுகிறது. இச்சான்று வட்டாட்சியரால் 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
Q312. பள்ளிச் சான்றுகள் தொலைந்ததற்காக வழங்கப்படும் சான்று ………...
இச்சான்று வட்டாட்சியரால் 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
Q313. கணவனால் கைவிடப்பட்டவர் சான்று .....................
மனுதாரர் கணவனை விட்டுப் பிரிந்து அவரிடம் எவ்விதத் தொடர்புமின்றி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றாரா? அவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேல் தனித்து வாழ்ந்து வந்தால் கணவனால் கைவிடப்பட்டவராகக் கருதப்படுவார். இச்சான்று வட்டாட்சியரால் 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
Q314. சாதிச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்றவர்கள் :
Q315. பேரிடர் என்பது என்ன?
இயற்கை சீற்றத்தால் அல்லது மனித திறன் குறைபாடால் அல்லது மனித தீவிர வாத செயலால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அளவிலான விபத்து. இச்சொல் சமீப காலங்களில் அதிகமாக பயனில் உள்ளது.
Q316. கிராம நிர்வாகத்தில் பேரிடர் மேலாண்மை எந்தெந்த காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது?
இன்றைய சமுதாயம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அபாயங்கள் இயற்கை மற்றும் மனிதன் உருவாக்கி வருகின்ற பேரிடர்களாகும். பேரிடர்கள் கீழ்க்கண்டவாறு பிரதிபலிக்கப்படுகின்றன : (1) புயல் (2) வெள்ளம் (3) நிலநடுக்கம் (4) வறட்சி (5) சுனாமி (ஆழிப்பேரலை) (6) நிலச்சரிவு (7) தீ விபத்து (8) சூறாவளி (9) பனிப்புயல் (10) வெடி விபத்து (11) இராசயன மற்றும் தொழிற்சாலை பேரிடர்கள் (12) விபத்துகள் (13) தீவிரவாத தாக்குதலினால் உண்டாகும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் (14) தொற்று நோய் -- ஆகியவை அடங்கும்.
Q317. பேரிடர் மேலாண்மை குழுக்கள் ( Disaster Management ) எவ்வாறு அமைக்கப்படுகிறது?
அமைப்பு ஏற்பாடுகள் (Institutional Arrangements) : பேரிடர் மேலாண்மை நோக்கமே, சமுதாயத்தின் அடிப்படையில் பல்வேறு சமுதாய மற்றும் உள்ளூர் தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றின் பங்கால், பேரிடர் தணிப்பு மற்றும் மீளப் பெறுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பது தான். இதனடிப்படையில், பேரிடர் மேலாண்மைத் திட்டம், கிராம அளவில் தொடங்கி, இதே போன்ற திட்டத்தின் வாயிலாக ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்த வேண்டும் என்பதுவே, பேரிடர் மேலாண்மையின் நோக்கமாகும்.
Q318. கீழ்க்கண்டவாறு அமைப்புகள் அமைகின்றன :
மாநிலம் - மாநிலப் பேரிடர் மேலாண்மை இயக்கக்குழு
மாவட்டம் - மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு
ஊராட்சி ஒன்றியம் - ஊராட்சி ஒன்றியம் பேரிடர் மேலாண்மைக் குழு
கிராம் ஊராட்சி - ஊராட்சி பேரிடர் மேலாண்மைக் குழு
Q319. பேரிடர் மேலாண்மை குழுக்கள் எந்தெந்த நிலையில் இயங்குகின்றன?
பேரிடர் மேலாண்மையின் படிநிலைகள் : C1 - முன்னேற்பாடு (Preparedness) C2 - எச்சரிக்கை (Warning) C3 - தாக்கும் நிலை (Impact Phase) C4 - காப்பாற்றும் நடவடிக்கை (Rescue Activities) C5 - மீட்பு நடவடிக்கை (Rescue) C6 - நிவாரண நடவடிக்கைகள் (Relief) C7 - புனர் வாழ்வளித்தல் (Rehabilitation) C8 - மறுசீர் அமைத்தல் (Reconstruction) C9 - இன்னலைத் தவிர்க்க நீண்ட காலத் திட்டம் தீட்டல் (Long term planning) C10 - திட்ட செயலாக்கம் (Plan Implementation)
Q320. தமிழ் நாட்டில் பேரிடர் மேலாண்மை எவ்வாறு இயங்கத் தொடங்கியது?
அரசாணை (நிலை) எண். 323, வருவாய் நாள் 8.7.2003ல் தலைமைச் செயலாளர் தலைமையின் கீழ் 15 உறுப்பினர்களைக் கொண்ட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டு இயங்கிவந்தது.
Q321. மத்திய அரசாங்கத்தால் பேரிடர் மேலாண்மை சட்டம் -- Disaster Management Act எப்போது இயக்கப்பட்டது?
இந்த சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் டிசம்பர் 2005ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 9.1.2006ல் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று, சட்டமானது. Disaster Management Act 2005 என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழநாடு சட்டம் இயக்கப்பட்டது. அரசாணை (நிலை) எண். 448, நாள் 28.11.2013ல் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமையை அரசு உருவாக்கியும் அதனை 1975ம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யவும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Q322. பேரிடர் மேலாண்மையில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு என்ன?
பேரிடர் மேலாண்மையில் கிராம மக்களுடன் இணைந்து செயல்படுவது கிராம நிர்வாக அலுவலரின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாகும். கிராம நிர்வாக அலுவலர் நமது மாநிலத்தில் ஏற்படுகின்ற பேரிடர்கள் பற்றியும், நிவாரணப்பணிகள் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இயற்கை இடர்பாடுகள், தீ விபத்து ஆகியவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், பண உதவிகள் வழங்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் கிராம நிர்வாக அலுவலர்களைக் கொண்டு நிறைவேற்றப்படுகின்றன.
Q323. ஜமாபந்தி -- வருவாய் தீர்வாயம் எவ்வாறு இயங்குகிறது?
வருவாய்த் துறையில் நிலவரி மற்றும் கிராமக் கணக்குகள் பசலி ஆண்டு முறையில் பராமரித்து முடிக்கப்படும். அரசுக்குச் சேர வேண்டிய கைப்பற்று நிலங்களின் நிலவரி, தண்ணீர் தீர்வை, புறம்போக்கு நில ஆக்கிரமனத் தீர்வை, அபராதம் மற்றும் உள்ளூர் வரிகள் (local cess and local cess surcharge ), மரத் தீர்வை ஆகியவை முறையாக கணக்கிடப்பட்டு கிராமக் கணக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும், பொருளாதார வளர்ச்சிக்கும் புள்ளி விவரங்களைத் தக்க முறையில் தரப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் ஆய்வு வருவாய்த் தீர்வாயம் ஆகும்.
இந்த வருவாய்த் தீர்வாயம் பொதுவாக ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும். இதற்கான வட்ட வாரியான மற்றும் கிராம வாரியான நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்யப்படும். துணை ஆட்சியர் நிலைக்கு சமன்பட்டவர்கள் ஒவ்வொரு வட்டத்தின் வருவாய் தீர்வாயத்தை நடத்த அலுவலர்களாக நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு வருவாய் கோட்ட அலுவலர் கண்டிப்பாக தன் அதிகார எல்லைக்குட்பட்ட ஒன்று அல்லது இரண்டு வட்டங்களுக்கு பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுழற்சி முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு வட்டத்திற்கு வருவாய்த்தீர்வாயத்தின் அலுவலராக இருப்பார்கள்.
முக்கியமாக வருவாய்த் தீர்வாயத்தின் போது பயிராய்வு செய்வது புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமனங்களைக் கவனமாக பார்வையிட்டு தக்க முறையில் நடவடிக்கை எடுப்பது, நில ஒப்படை, நில உரிமை விட்டுவிடல், நில உரிமை மற்றும் வகைப்பாடு மாற்றம், வருவாய் பதிவுகள் மாற்றம் ஆகியவை ஒழுங்காகவும், உடனடியாகவும் செய்யப்பட்டு முடிவெடுப்பது, பணக் கணக்குகளையும், தீர்வை தள்ளி வைக்கக் கோரும் விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து நிலத் தீர்வைகள் எவ்வெப்போது வசூலிக்கத் தக்கனவோ அவ்வப்போது அதனை வசூல் செய்வது, மிகையாக செலுத்திய நிலவரியைத் திருப்பிக் கொடுப்பது போன்ற பணிகள் முறையாக வட்டாட்சியர் மற்றும் அவரைச் சார்ந்த அலுவலர்கள் செய்துள்ளார்களா என்று ஆய்வு செய்யப்படும். மேலும், மேற்குறிப்பிட்ட இனங்கள் சம்பந்தமாக வரப்பெறும் மக்களின் கோரிக்கை மனுக்கள் மீதும் வருவாய்த் தீர்வாய அலுவலர் அப்பிரச்சினைகள் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பார்.
கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் கணக்குகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டுள்ளனவா என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கணக்குகளுடன் சரிபார்த்து அந்த வருவாய் கிராமத்திற்கான நிலவரி கேட்பு மொத்தம் எவ்வளவு என்று தீர்மானித்து வருவாய்த் தீர்வாயத்தின் அலுவலர் கிராம கணக்கு 10(2) மற்றும் 12 ஆகிய அக்ணக்குகளை ஒப்புதல் செய்வார். ஒப்புதல் செய்த தொகையானது அந்த கிராமத்தின் நடப்பு பசலி நிலவரி கேட்பாகும்.
இத்தகைய கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்திற்குண்டான எல்லா கணக்குகள் மற்றும் சிறப்புப் பதிவேடுகளை தயார் செய்து குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு வருவாய் ஆய்வாளர் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தின் தீவிர ஆய்வுக்குப் பின்பு வருவாய்த் தீர்வாயத்திற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்களின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். கடைசியாக நிகழ்ச்சி நிரலின்படி குறிப்பிட்ட நாளில் வருவாய்த் தீர்வாயத்தின் அலுவலர் முன்பு கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
Q324. வருவாய் தீர்ப்பாயம் - ஜமாபந்தி ஆண்டு தோறும் எப்போது நடத்தப்பட வேண்டும்?
ஒவ்வொரு பசலி ஆண்டும் இந்த தீர்வாயம் ஜூன் மாத இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும். தாமதம் நேரிட்டால் அதற்குண்டான காரணங்களை விளக்கி வருவாய் நிர்வாக ஆணையரின் ஆணை பெற்று வருவாய்த் தீர்வாயம் ஜூன் மாதத்திற்குப் பின்பு நடத்தலாம். ஆக வருவாய்த் துறையில் மக்களின் பிரச்சினைகள், தெவைகளைத் தீர்த்து வைப்பது தான் இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
Q325. இனாம் நிலம் பற்றிய ஒரு சிறு குறிப்பு?
ஒரு குறிப்பிட்ட காரியத்தைத் தொடர்ச்சியாகச் செய்வதற்காக, அதற்குப் பிரதிபலனாகக் கொடுக்கப்படும் நிலம் இனாம் நிலம் எனப்படும்.ஊழியம் தேவைப்படாத கிராமங்களைப் பொறுத்தமட்டில் அவை உரிமை அளிக்கப்பட்ட இனாம்களாக கருதப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு சம்பத்தப்பட்ட இனாம் நிலங்களை விற்கவோ, வாங்கவோ, மாற்றவோ உரிமையாக்கப்பட்டது. இதற்குண்டான தொகை ரயத்துவாரி தீர்வைக்கு நிகராக விதிக்கப்பட்டது. அந்த தொகைக்கு கிவிட் ரென்ட் என்று பெயர். ஊழியம் தேவைப்பட்ட இனாம்களை பொறுத்தவரையில் உரிமை அளிக்கப்படாத நிலங்களாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்ட இனாம் நிலங்களை விற்கவோ, வாங்கவோ, மாற்றவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. ஊழியம் நடைபெறும்வரை ஆண்டு அனுபவித்து வரலாம். ஊழியத்தை நிறுத்தி விட்டால் அந்த நிலங்களை அரசினர் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
Q326. எப்போது முதல் இனாம்கள் ஒழிக்கப்பட்டது?
1963ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின்படி இனாம்கள் ஒழிக்கப்பட்டது.
Q327. ஜமீந்தார் முறை எப்போது உருவானது, எவ்வாறு இயங்குகிறது?
மன்னர்கள் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல் செய்ய இடைத்தரகர்கள் ஏற்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு ஜமீந்தாரர் என்று பெயர். இவர்கள் பணி, நிலவரி போன்றவற்றை வசூல் செய்து கணக்குகளுடன் மன்னர்களுக்கு ஒப்படைப்பதாகும். இதற்காக அவர்களுக்கு நாட்டின் ஒரு பகுதியினை நிலவரி வசூல் செய்து ஆண்டு அனுபவித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பகுதிக்கு ஜமீன் என்று பெயர். பிறகு ஜமீந்தாரருக்கு வரிவசூல் செய்யும் உரிமை நிரந்தரமாக வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டது. முழு வருவாயும் கணக்கிடப்பட்டு ஒரு பகுதி அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தொகை பேஷ்குஷ் எனப்படும்
Q328. ஜமீன்தாரர் எப்போது ஒழிக்கப்பட்டது?
1948ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தினால் எல்லா ஜமீன்களும் ஒழிக்கப்பட்டது.
Q329. கிராம புறங்களில் நிலவி வந்த (வரும்) வருவாய் ரீதியான நில வகைகள் யாவை?
தேவ தாயம், தர்ம தாயம், தசபந்தம், பிரம்ம தாயம், சொந்தம், காவல் ஊழியம், கிராம ஊழியம், கைவினையர் இனாம்.
Q330. தேவதாயம் என்பது என்ன?
மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊழியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள். (நிலங்கள்)
Q331. தர்மாதாயம் என்பது என்ன?
சத்திரம், தண்ணீர்ப் பந்தல் மற்றும் கல்வி ஸ்தாபனங்களுக்குக் கொடுக்கப்பட்ட இனாம்கள்.(நிலங்கள்)
Q332. தசபந்தம் என்பது எதைக் குறிக்கிறது?
வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களைப் பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம்கள்.(நிலங்கள்)
Q333. பிரம்மதாயம் என்பது குறிப்பது …………….
வேதியர்களுக்கும் மற்றும் இதர மதத்திற்கும் சொந்த உபயோகத்திற்கு வழங்கப்பட்ட இனாம்கள்.(நிலங்கள்)
Q334. சொந்தம் என்பது எதைக் குறிக்கிறது?
முன்னாள் பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரது உறவினர், ஊழியர், வாரிசுதாரர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இனாம்கள்.(நிலங்கள்)
Q335. காவல் ஊழியம் என்பது என்ன?
நாட்டின் பண்டைக்கால காவலர் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்கள். (நிலங்கள்)
Q336. கிராம ஊழியம் என்பது எதைக் குறிக்கிறது?
சாதாரண கிராம வரிவசூல் மற்றும் கிராம காவலர் வேலைகளுக்காக வழங்கப்பட்ட இனாம்கள். (நிலங்கள்)
Q337. கைவினையர் இனாம் என்பது எதைக் குறிக்கிறது?
தச்சர், கொல்லர், நாவிதர் முதலிய கைவினையதாரர்களுக்குக் கிராம ஊழியத்திற்குக் கொடுக்கப்பட்ட இனாம்கள். (நிலங்கள்)
Q338. கிராம நிர்வாக அலுவலரால், நிலவரி தவிர்த்து, வசூலிக்கப்படும் இதர வரிகள் யாவை?
கிராம நிர்வாக அலுவலர் நிலவரி தவிர கீழ்க்கண்ட இதர பாக்கிகளையும் நிலவரி போல் வசூல் செய்ய வேண்டும். (சட்டப்பிரிவு 52) ► வாரகம் ► நகர்ப்புற நிலவரி ► நிலக்குத்தகை ► நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்படி குத்தகை மர்றும் நில மதிப்பு ► முத்திரைத்தாள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தொகை ► வறியர் வழக்கு பாக்கி ► சர்வே சி.எஸ்.எம். (ஏ) மற்றும் சி.எஸ்.எம். (பி) ► விவசாய வருமான வரி ► அபிவிருத்தி வரி ► பல வகையான வருவாய் பாக்கிகள்
Q339. பட்டா என்பது எதைக் குறிக்கிறது?
ஒரு தனி நபருக்குச் சொந்தமான நன்செய், புன்செய் நிலங்களின் புல எண், பரப்பு, தீர்வை விகிதம் மற்றும் உரிய தீர்வை முதலானவை அடங்கிய கிராமத்தில் பராமரிக்கப்படும் கிராம கணக்கு எண் 10 (1) -ன் நகல்தான் பட்டா. இதனை சிட்டா என்றும் வழக்கத்தில் கூறுவர். தற்போது கிராமவாரியாக உள்ள பட்டாக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் நகல் வேண்டுவோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ. 20 கட்டணம் செலுத்தி துணை வட்டாட்சியர் ஒப்பத்துடன் நகல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
Q340. வரி பாக்கியின் அடிப்படையில் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்யும் நடைமுறை என்ன?
1. அரசுக்குச் சேர வேண்டிய நிலவரித் தொகையினை பட்டாதாரர்களிடமிருந்து வசூலிக்கத் தேவைப்படும் இனங்களில் மட்டும் இச்சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். 2. ஜப்தி செய்வதற்கு அதிகாரம் படைத்த வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஜப்தி படிவம் 1ல் கையொப்பம் இட வேண்டும். ஜப்தி செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.
Q341. அடங்கல் - சிட்டா என்பது எதைக் குறிக்கிறது?
அடங்கல் என்பது கிராமக் கணக்கு எண் 2 ஆகும். நிலங்களின் பயிர் சாகுபடி மற்றும் உபயோகத்தை மாதந்தோறும் புலத்தணிக்கை செய்து குறிப்பு எழுதப்பட வேண்டிய பதிவேடு ஆகும். இதன் அடிப்படையில் தான் ஒரு கிராமத்தில் எவ்வளவு நிலம், என்ன பயிர் விளைகிறது, அது நீராதாரத்திலா அல்லது கிணற்றுப் பாசனமா அல்லது மானாவாரியா என்ற விவரங்கள் சேகரித்து பதியப்படுகிறது. மேலும் இப்பதிவேட்டில் பயிர் சாகுபடியான மாதம், அறுவடையான மாதம், விளைச்சலின் அளவு முதலியவை குறிப்பிடப்பட்டிருக்கும். வேளாண் புள்ளி விவரங்களுக்கு மிக அத்தியாவசியமான பதிவேடு.
இப்பதிவேடு நஞ்சையைப் பொறுத்தமட்டில் நீர்ப்பாய்ச்சும் ஆதாரங்கள் வாரியாகவும், புஞ்சை நிலங்களுக்கு தனியாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட குத்தகை விவரங்கள் குறிக்கப்பட வேண்டும். அரசுப் புறம்போக்கு நிலங்களைப் பொறுத்தவரையில் ஆக்கிரமனங்கள் இருந்தால் ஆக்கிரமித்துள்ள நபரின் பெயர், என்ன வகையான ஆக்கிரமிப்பு முதலான விவரங்கள் குறிக்கப்பட வேண்டும். இதனை குறுவட்ட ஆய்வர் தணிக்கை செய்து, ஆக்கிரமிப்பை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வங்கிக் கடன் பெறுவதற்கு இப்பதிவேட்டின் நகலை கிராம நிர்வாக அலுவலர் வழங்கலாம்.
Q342. குடிமக்கள் கிராம கணக்குகளை பார்வையிட முடியுமா?
கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பிலுள்ள கிராம கணக்குகளை குடிமக்கள் பார்வையிட அனுமதிக்கலாம். ரயத்துகள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் கீழ்க்கண்ட கிராம கணக்குகளை பார்வையிட்டு தகவல்கள் குறித்துக் கொள்ளலாம். இச்சலுகை கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள நடப்பு பசலி கணக்குகள் மற்றும் அதற்கு முந்தைய பசலிக்குண்டான கணக்குகளுக்கு மட்டும் உண்டு.
Q343. குடிமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் எவ்வகையான பதிவேடுகளை பார்வையிடலாம்?
1. கிராம பதிவேடு. 2. கிராம கணக்கு 2 - அடங்கல். 3. கிராம கணக்கு 1, 1 ஏ - சாகுபடி கணக்குகள். 4. கிராம கணக்கு 6 - தண்ணீர் தீர்வை கணக்கு. 5. கிராம கணக்கு 7 - ஆக்கிரமனம் மற்றும் பலவகை வருவாய்க் கணக்கு. 6. கிராம கணக்கு 10 (1), 10 (2) - சிட்டா மற்றும் பட்டாவாரி டிமாண்டு பதிவேடு 7. கிராம கணக்கு 13 - தண்டல் ரொக்க பதிவேடு. 8. கிராம கணக்கு 14, 16 - பட்டாவாரியான வசூல் விவரங்கள் கேட்பு, வசூல் மற்றும் பாக்கி ஆகிய விவரங்கள் காட்டும் பதிவேடுகள். 9. நில அளவு அமைப்பு படங்கள் 10. புல அளவு புத்தகங்கள்.
Q344. நிலவரி வசூல் எந்த சட்டத்தைச் சார்ந்த ஒரு நடவடிக்கை?
தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 1864.
Q345. தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 1864-ன் அடிப்படை கூறுகள் யாவை?
► கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்திற்குரிய நடப்பு பசலிக்கான நிலவரி, முன் நிலுவை வரி, கடன்கள், குத்தகைத் தொகை, அபிவிருத்தி வரி, முத்திரைத் தீர்வை, வித்தியாசத் தொகை, நில அளவை, கற்களின் மதிப்பு மற்றும் பல்வேறு வரி பாக்கிகளையும் வசூலிப்பதற்கு அதிகாரமுடையவர். ► தனிப்பட்ட நபர்களிடமிருந்து / குழுமங்களிலிருந்து வரவேண்டிய நிலுவை தொகைகளையும் வசூலிப்பதற்கும் கிராம நிர்வாக அலுவலர் அதிகாரம் படைத்தவர் ஆவார்.
Q346. நிலவரி வசூல் சம்பந்தமான "கிஸ்தி மாதம்" எதைக் குறிக்கிறது?
நிலவரியானது நான்கு தவணைகளில் ஜனவரி மாதம் முதல் செலுத்தப்பட வேண்டும். இதற்கு கிஸ்தி மாதங்கள் என்பார்கள்.
Q347. நிலவரி வசூல் செய்யும் முறையை விவரிக்கவும்?
► நிலவரியில் தரத் தீர்வை, பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி அபராதம், புறம்போக்கு நிலவரி அபராதம், உள்ளூர் மேல்வரி ( ) உள்ளூர் மிகு மேல்வரி ( ) ஆகியவை அடங்கும். நிலையான வஜாக்கள் மற்றும் பருவக்கால வஜாக்கள் ஆகியவை கணக்கிட்டு அவை தரத் தீர்வையிலிருந்து கழிக்கப்படுகின்றன. ► இவ்வாறாக மொத்தத் தொகை கணக்கிடப்பட்டு புன்செய், நன்செய் தீர்வை கழிவுகள் கழிக்கப்படுகின்றன. இவ்வாறாக கழிக்கப்பட்ட நிகரத் தொகைக்கு நிலவரி என்பார்கள். அத்துடன் நன்செய் நிலங்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் நன்செய் தீர்வை, கூடுதல் தண்ணீர் தீர்வை ஆகியவையும் சேர்த்து அந்த பட்டாதாரர் செலுத்த வேண்டிய நிலவரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ► கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு பசலியிலும் டிசம்பர் மாதம் ஒரு தோராய கேட்பு பட்டியல் தயார் செய்து வட்டாட்சியரின் ஒப்புதல் பெற்று ஜனவரி மாதத்திலிருந்து நான்கு தவணைகளாக நிலவரியை வசூல் செய்ய வேண்டும். இந்த நிலவரியுடன் கிராம நிர்வாக அலுவலர் நிலவரி பாக்கி மீது வட்டியாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் வசூல் செய்யவேண்டும்.
Q348. கிராம நிர்வாக அலுவலரால், நிலவரி தவிர்த்து, வசூலிக்கப்படும் இதர வரிகள் யாவை?
கிராம நிர்வாக அலுவலர் நிலவரி தவிர கீழ்க்கண்ட இதர பாக்கிகளையும் நிலவரி போல் வசூல் செய்ய வேண்டும். (சட்டப்பிரிவு 52) ► வாரகம் ► நகர்ப்புற நிலவரி ► நிலக்குத்தகை ► நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்படி குத்தகை மர்றும் நில மதிப்பு ► முத்திரைத்தாள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தொகை ► வறியர் வழக்கு பாக்கி ► சர்வே சி.எஸ்.எம். (ஏ) மற்றும் சி.எஸ்.எம். (பி) ► விவசாய வருமான வரி ► அபிவிருத்தி வரி ► பல வகையான வருவாய் பாக்கிகள்
Q349. வரி பாக்கியின் அடிப்படையில் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்யும் நடைமுறை என்ன?
1. அரசுக்குச் சேர வேண்டிய நிலவரித் தொகையினை பட்டாதாரர்களிடமிருந்து வசூலிக்கத் தேவைப்படும் இனங்களில் மட்டும் இச்சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
2. ஜப்தி செய்வதற்கு அதிகாரம் படைத்த வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஜப்தி படிவம் 1ல் கையொப்பம் இட வேண்டும். ஜப்தி செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.
Q350. வரி பாக்கியின் அடிப்படையில் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்யும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் படிவங்கள் யாவை?
படிவம் - 1 :
அசையும் பொருட்களை ஜப்தி செய்யும் முன்னர், படிவம் - 1 ஆணை சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமையாளரிடம் காண்பிக்கப்பட்டு அவர் உரிய தொகையைச் செலுத்திவிடில் மீண்டும் ஆணைகள் குறித்து தகவல் தெரிவிக்காமல் கிராம நிர்வாக அதிகாரி ஜப்தி செய்யலாம். அன்றைய தேதியில் படிவம் - 1 ஆணையின் நகலை கிராம நிர்வாக அலுவலர் சொத்தின் உரிமையாளரிடம் வழங்க வேண்டும்.
படிவம் - 2 :
பொருட்களை ஜப்தி செய்தவுடன் ஜப்தி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல், அவை எங்கே பாதுகாப்பாக வைக்கப்படுகிறது என்ற விவரங்களுடன் படிவம் - 2 ல் சொத்தின் உரிமையாளருக்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்க வேண்டும். கால்நடைகளை ஜப்தி செய்திருப்பின் அவை பட்டியில் அடைக்கப்பட்டுவிடும். அதற்கான தீவனச் செலவை நிலவரி பாக்கியுடன் சேர்த்து வசூலிக்கலாம். அறுவடைக்கு வந்த பயிர்களை ஜப்தி செய்திருப்பின் அறுவடைக்கான செலவையும் சேர்த்து வசூலிக்கலாம்.
படிவம் - 3 :
ஏல அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்திலிருந்து 15 நாட்கள் கழித்த பின்னரே ஏலம் நடத்தப்படும். இந்த அறிவிப்பும் கிராம நிர்வாக அலுவலரால் சம்பந்தப்பட்ட நபருக்கு சார்வு செய்யப்படும். ஏலம் நடை பெறுவதற்கு முன்னர் நிலவரி செலுத்தப்பட்டால், ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் உரியவருக்கு திரும்ப கொடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தொகைகளைச் செலுத்தாவிடில் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு, அதிக தொகை கோருபவருக்கு ஏலம் உறுதி செய்யப்படும்.
Q351. வரி பாக்கியின் அடிப்படையில் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்யும் நடைமுறையில் சேராத பொருட்கள் யாவை?
அசையும் பொருட்களில் பெண்களின் தாலி, திருமண மோதிரம் ஆகியவற்றையும், விவசாயிகளின் விவசாயக் கருவிகள், ஒரு ஜோடி உழவுமாடுகள், வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றையும் ஜப்தி செய்யக்கூடாது.
Q352. வரி பாக்கியின் அடிப்படையில் அசையா சொத்துக்களை ஜப்தி செய்ய அனுமதிக்கு சட்டப்பிரிவு என்ன?
சட்டப்பிரிவு 25.
Q353. வரி பாக்கியின் அடிப்படையில் அசையா சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையாக, சொத்தை ஏலம் விடுவதற்கான அறிவுறுத்தல்கள் யாவை?
1. ஏல அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பின்னரே ஏலம் நடத்தப்படும்.
2. ஏலம் நடத்தப்படும் நாளுக்கு முதல் நாள் சூரிய அஸ்தமனம் வரையில் நிலத்தின் மேல் பற்று கொண்ட எவரும் அல்லது உரிமையாளரும் பாக்கித் தொகையை செலுத்தினால் அத்தொகையை கிராம நிர்வாக அலுவலர் பெற்றுக்கொண்டு அதற்கு ரசீது வழங்கலாம். ஏலம் கைவிடப்படும் (பிரிவு 36).
3. அனைத்து அறிவிப்புகள் கொடுத்த பிறகும் கால அவகாசம் வழங்கிய பின்னரும் பாக்கிதாரர் தொகையை செலுத்த தவறினால் குறிக்கப்பட்ட நாளில் ஏலம் நடைபெறும். 4. சட்டப்பிரிவு 39-ன் படி படிவம் 10-ல் ஏல விற்பனையில் நிலத்தை ஏலம் எடுத்தவர் வாங்கியது குறித்த அறிவிப்பு மாவட்ட அரசிதழில் வெளியிடப்படும். அதே அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராமத்திலும் வெளியிடப்பட வேண்டும்.
5. ஏல விற்பனையில் விற்பனை செய்யப்பட்ட நிலங்களின் பதிவேடு படிவம் எண் 9-ல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரித்து வரப்படும். ஏலம் எடுத்தது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் விற்பனை செய்யப்பட்ட நிலங்கள் எந்த வித வில்லங்கமும் இல்லாத நிலமாகக் கருதப்படும். (பிரிவு 42).
6. ஏலத்தில் விடப்பட்ட தொகை அதிகத் தொகையாக இருப்பின் அரசுக்குச் சேர வேண்டிய தொகை போக மீதியை சம்பந்தப்பட்ட பாக்கிதாரருக்கு வழங்க வேண்டும். குறைவாக இருக்கும்போது அரசுக்குச் சேரவேண்டிய மீதித் தொகையை பாக்கிதாரரிடமிருந்து கிராம நிர்வாக அலுவலர் வசூலிக்க வேண்டும்.
7. ஜப்தி செய்யப்பட்ட சொத்தை எவரும் ஏலத்தில் கோராவிடில் அதற்கு சிறிய தொகை செலுத்தி விட்டு அரசே அந்நிலத்தைத் தன் பொறுப்பில் ஏல தரிசு நிலங்களாக வைத்துக் கொள்ளலாம்.
8. எக்காரணத்தைக் கொண்டும் ஜப்தி நடவடிக்கையை சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பும் மேற்கொள்ளக்கூடாது.
1. நிலையான 'அ' பதிவேடு: புலன்களையும் அவற்றில் ஏற்படும் மாறுதல்களையும் காண்பிக்கும் நிலையான பதிவேடு. நிலத்தின் பரப்பையும் தீர்வை வீதத்தையும் காட்டும் 'அ' பதிவேட்டின் தொகுப்பாகும்.
2. கணக்கு எண் 1: கிராமத்தின் மாதவரி சாகுபடி கணக்கு ஆகும்
3. கணக்கு எண் 1A: கணக்கு எண் 1ல் உள்ள மொத்த பயிர் விபரங்கள்
4. கணக்கு எண் 2: அடங்கல்
5. கணக்கு எண் 2C: அரசு புறம்போக்கிலுள்ள மரங்களின் விவரம் காட்டும் பதிவேடு
6. கணக்கு எண் 2D: கிராமத்தில் நீர் பாய்ச்சப்பட்ட பரப்பின் விவரங்களை காண்பிக்கும் விவரப்பட்டி ஆகும்
7. கணக்கு எண் 2F: வனங்கள், சாகுபடிக்கு லாயக்கான மற்றும் சாகுபடிக்கு லாயக்கில்லாத தோட்டப் பயிர்கள் மற்றும் நடப்பாண்டு சாகுபடி, நடப்பாண்டு தரிசு நிலங்கள் அடங்கிய விபரம்
8. கணக்கு எண் 3: பட்டா மாறுதல்கள் செய்யப்பட்ட உத்தரவுகளை பதிவு செய்த விபரம்
9. கணக்கு எண் 3A: இந்த கணக்கு 3ம் எண் கணக்கின் கைப்பற்ற நிலங்களில் ஏற்பட்ட மாறுதல்களின் சுருக்கமாகும்.
10. கணக்கு எண் 4: கிராமக்கணக்குகளின் 4 என்பது அனைத்து அரசிறைக் கழிவு
11. கணக்கு எண் 5 (வஜா கணக்கு): நிலவரி தள்ளுபடி குறித்த கணக்கு பதிவேடு
12. கணக்கு எண் 6: தண்ணீர்த் தீர்வை விதிப்பு குறித்து காட்டும் பதிவேடு.
13. கணக்கு எண் 6A: இக்கணக்கு 6ம் எண் கணக்கின் உட்தொகுப்பாகும்
14. கணக்கு எண் 7: அரசு புறம்போக்கு நிலங்களில் செய்யப்படும் ஆக்கிரமிப்பு விபரங்கள்
15. கணக்கு எண் 8A - 8B: நீர்ப்பாசன வருவாய்க் கணக்குகள்
16. கணக்கு எண் 9A: தமிழ்நாடு கூடுதல் தீர்வை மற்றும் கூடுதல் தண்ணீர் வரி சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் வருவாயினை காண்பிக்கும் பதிவேடு
17. கணக்கு எண் 10(1) சிட்டா: கிராமத்திலுள்ள பட்டாதாரர்களின் மொத்த நில விபரம்
18. கணக்கு எண் 10(2): பட்டாவாரியாக நிலவரி கேட்பு
19. கணக்கு எண் 10A: இந்த கணக்கு கிராமக் கணக்கு 19ல் உள்ள மரண பதிவேட்டுடன் தொடர்புடையது
20. கணக்கு எண் 10C: தன்பதிவேடு போல் இது ஒரு முக்கியமான பதிவேடு, கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பிய மனுக்கள் உரிய முறையில் பதியப்பட்டு முடிக்கப்பட்டுள்ளனவா என்ற விவரங்கள் இந்த அக்கணக்கின் மூலம் அறியலாம்.
21. கணக்கு எண் 11: ஒவ்வொரு பட்டாதாரருக்கும் அளிக்கப்பட்ட பட்டா படிவமாகும்
22. கணக்கு எண் 13: கிராமம் முழுமைக்கும் உள்ள நில வருவாய் நிர்ணய சுருக்கமாகும்
23. கணக்கு எண் 12: கிராமங்களில் தினசரி வசூல்களை காண்பிக்கும் கணக்கு
24. கணக்கு எண் 14: ஒவ்வொரு பட்டாதாரரிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட தொகையினை காண்பிக்கும் 13ம் எண் கணக்கின் சுருக்கமாகும்
25. கணக்கு எண் 14A: 14ம் எண் கணக்கின் படிவத்திலேயே தயாரிக்கப்படும் சுருக்கம்.
26. கணக்கு எண் 14B: வசூலிக்க இயலாதென கருதப்பட்ட பாக்கி விவரங்களை தெரிவிக்கும் விவரப்பட்டி
27. கணக்கு எண் 14C: அதிக வசூல் விவரங்களை காண்பிக்கும் விவரப்பட்டி
28. கணக்கு எண் 15: வசூலான நிலவரியை வங்கியில் இருசால் செய்வதற்கான சுருக்கமான பட்டியல்
29. கணக்கு எண் 16: பசலி வாரியாக ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ஒவ்வொரு பட்டாதாரரும் செலுத்த வேண்டிய கேட்பு, வசூல், பாக்கி காண்பிக்கும் கணக்காகும்
30. கணக்கு எண் 17: பட்டாதாரர் நிலவரியை தாமதமாக செலுத்தினால் விதிக்கப்படும் வட்டி
31. கணக்கு எண் 18 (கிஸ்தி ரசீது): நிலவரி செலுத்தியதற்காக வழங்கப்படும் பற்றுச் சீட்டு
32. கணக்கு எண் 19: பிறப்பு, இறப்பு இறந்து பிறந்தவை பதிவு செய்யும் பதிவேடு
33. கணக்கு எண் 20 (மழைக்கணக்கு): மழை பெய்த அளவு விபரங்கள் 34. கணக்கு எண் 21: பட்டாதாரர் அல்லது மற்றவர்களுக்கு சொந்தமான கால்நடைகள் குறித்தான கணக்காகும்.
35. கணக்கு எண் 23: கிராமத்தில் ரயத்துவாரி உரிமை முறையில் உள்ள பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையை காண்பிப்பது
36. கணக்கு எண் 24: கனிமங்கள், சுரங்கங்கள் சம்பந்தப்பட்ட விபரப் பதிவேடு.
Q354. கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் பற்றிய அறிவுறுத்தல் என்ன?
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசாணை எண் 581, வ.து.நாள் 3.4.1987-ன் படி பணிகள் அட்டவணை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி முதன்மையான பணி கிராமக் கணக்குகளைச் சரியான முறையில் பராமரிப்பதாகும். இக்கணக்குகள் அனைத்தும் நிலம் தொடர்பானவை. இதில் முக்கியமான பதிவேடு நிலையான பதிவேடு ஆகும்.
Q355. நிலையான பதிவேடு ன் முக்கியத்துவம் யாது?
இது புலன்களையும், அவைகளில் ஏற்படும் மாறுதல்களையும் காண்பிக்கும் நிலையான பதிவேடு ஆகும். ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் தனித்தனியாக பதிவேடு உள்ளது. நடைமுறையில் ஏற்படும் மாறுதல்களைப் பதிவு செய்ய ஏதுவாக இடைச்செருகலாக வெற்றுக் காகிதங்கள் வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட புல எண்களுக்கு எதிரே அந்த வெற்றுக் காகிதத்தில் பிற்காலத்தில் ஏற்படும் மாறுதல்கள் பதியப்பட்டு வரும். இப்பதிவேட்டில் முதல் பகுதியாக வருவாய்க் கிராமத்தின் வரலாற்றுக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுக் குறிப்பில் அந்த வருவாய்க் கிராமத்திற்குண்டான மொத்த விவரங்கள் அடங்கும். கிராம அளவில் வருவாய் ரீதியாக முக்கியமான பதிவேடு.
Q356. நிலையான ""அ"" பதிவேட்டின் அடக்க விவரங்கள் யாவை?
1. கிராமத்தின் பெயரும், உரிமை முறையும் 2. அமைவிடம் 3. பரப்பும் எல்லையும் 4. வெவ்வேறு வகைப்பாட்டின் பரப்பு 5. எல்லை வரையறுத்தல் 6. மக்கள் தொகை 7. நில உடைமைகள் 8. புஞ்சைத் தொகுதிகள் 9. பாசன விவரங்கள் 10. குடி மராமத்து 11. கிணறுகள் 12. வகைப்பாடும், வரிவிதிப்பும் 13. மீன் வளம்"
Q357. 'அ' பதிவேடு நடைமுறையில் எத்தனை வகையான நில விவரங்கள்/பத்தியில் பராமரிக்கப்படுகிறது?
1. புல எண், உட்பிரிவு எண் 2. பழைய புல எண், உட்பிரிவு எண் 3. ரயத்துவாரி (ர) (அ) (இ) 4. வகைப்பாடு 5. இருபோக நஞ்சை எனில் மொத்தத் தீர்வை வீதம் 6. மண் வயணமும் / ரகமும் 7. தரம் 8. ஹெக்டேர் ஒன்றுக்கு தீர்வை வீதம் 9. பரப்பளவு 10. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற நில உடைமையாளரின் பெயர் 11. குறிப்பு தற்போது விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு, கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு என ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு 'அ' பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.
Q358. B' பதிவேடு என்பது என்ன அதன் தற்சமய நிலை என்ன?
இந்த பதிவேடு இனாம்களின் (நிலங்கள்) நிலைப்புல பதிவேடாகும். பல்வேறு வகை இனாம்களின் கீழும், அதாவது சமய, அறக்கட்டளை, சொந்தப்பணி மற்றும் தசபந்தம் ஆகிய இனாம்களின் கீழ் உரிமைப் பட்டயம் முறைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு நேராக ஒவ்வொரு உரிமைப் பட்டயத்தின் கீழ் வரும் புலன்களும் காட்ட வேண்டும். 1936ம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான கிராமங்களில் இனாம் நிலங்கள் ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டு அதற்குண்டான நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் இப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
Q359. அரசு நிலங்களை குத்தகைக்கு விடுவது பற்றிய விவரம் என்ன?
பொதுவாக அரசு நிலங்கள் குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்டு தனி நபர்கள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு தற்காலிக அனுபவத்திற்கு குறிப்பிட்ட நோக்கங்களுக்கென வழங்கப்படுவது நிலக் குத்தகை எனப்படும். (வ.நி.ஆ. 24ஏ). இவைகள் (அ) குறுகிய கால குத்தகை மற்றும் (ஆ) நீண்ட கால குத்தகை. ஆண்டுக்கு குத்தகைத் தொகை நிலமதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுகிறது. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் அமைந்திருக்கும் குத்தகை தேர்வில்
கீழ்க்கண்டவாறு குத்தகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நோக்கம் குத்தகை விகிதம் சதவீதம் தலவரி தல மேல்வரி மொத்தம் வணிக நோக்கம் 2% 2% 10% 14% வணிகமல்லாத நோக்கம் 1% 1% 5% 7%
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைந்திருக்கும் அரசு நிலங்களை குத்தகைக்கு வழங்கும்போது அது வணிக நோக்கமாயின் நில மதிப்பில் ரூ. 14 (கூடுதல் மேல்வரி உள்பட) ஆண்டு குத்தகையாகவும், வணிக நோக்கமில்லாத நிலையில் நில மதிப்பில் 7% (கூடுதல் மேல்வரி உள்பட) ஆண்டு குத்தகையாகவும் நிர்ணயம் செய்து வசூல் செய்யப்படுகிறது.
Q360. அரசு நிலங்களை குத்தகைக்கு விடுவது பற்றிய விவரம் என்ன?
பொதுவாக அரசு நிலங்கள் குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்டு தனி நபர்கள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு தற்காலிக அனுபவத்திற்கு குறிப்பிட்ட நோக்கங்களுக்கென வழங்கப்படுவது நிலக் குத்தகை எனப்படும். (வ.நி.ஆ. 24ஏ). இவைகள் (அ) குறுகிய கால குத்தகை மற்றும் (ஆ) நீண்ட கால குத்தகை. ஆண்டுக்கு குத்தகைத் தொகை நிலமதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுகிறது. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் அமைந்திருக்கும் குத்தகை தேர்வில் கீழ்க்கண்டவாறு குத்தகை நிர்ணயம் செய்யப்படுகிறது. நோக்கம் குத்தகை விகிதம் சதவீதம் தலவரி தல மேல்வரி மொத்தம் வணிக நோக்கம் 2% 2% 10% 14% வணிகமல்லாத நோக்கம் 1% 1% 5% 7%
Q361.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைந்திருக்கும் அரசு நிலங்களை குத்தகைக்கு வழங்கும்போது அது வணிக நோக்கமாயின் நில மதிப்பில் ரூ. 14 (கூடுதல் மேல்வரி உள்பட) ஆண்டு குத்தகையாகவும், வணிக நோக்கமில்லாத நிலையில் நில மதிப்பில் 7% (கூடுதல் மேல்வரி உள்பட) ஆண்டு குத்தகையாகவும் நிர்ணயம் செய்து வசூல் செய்யப்படுகிறது.
Q362. அரசு நிலங்களை குத்தகைக்கு விடும் கால அளவு என்ன?
நிலங்களை மூன்று ஆண்டு வரை குத்தகைக்கு விடலாம். அதற்கு மேல் பொதுவாக நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு விடுவது இல்லை. சிறப்பு நேர்வுகளில் நிலநிர்வாக ஆணையம் (ம) அரசு ஆணையை பெற்று நிலங்களை நீண்ட கால குத்தகைக்கு விடலாம். (வ.நி.ஆ.எண்.24ஏ2). ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் அப்போது நிலவும் சந்தை மதிப்பின் அடிப்படையில் குத்தகை தொகையை மாற்றி அமைக்கவேண்டும் (வ.நி.ஆ. 24ஏ2) குத்தகை ஆணையை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. (பிரிவு 90(1) (B) இந்தியப் பதிவுச் சட்டம்).
Q363. எந்தெந்த நிலங்களில் குத்தகை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது?
1. ஏரி, ஓடை, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலை புறம்போக்குகள் (அரசு ஆணை 41, வருவாய்த்துறை, நாள் 20.1.1987). 2. மேய்க்கால் (ம) மந்தவெளி புறம்போக்கு நிலங்கள் (அரசு ஆணை 959, வருவாய்த்துறை, நாள் 23.6.1987). 3. மயானம் (அரசு ஆணை 116, வருவாய்த்துறை, நாள் 20.1.1988) இம்மூன்று வகையான நிலங்கள் சமுதாயத்தில் பொதுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக தடை செய்யப்பட்டுள்ளது.
Q364. அரசு நிலங்களை குத்தகை விடும் அதிகாரம் பெற்றவர்கள் மற்றும் நிதி அதிகார வரம்பு என்ன?
1. வட்டாட்சியர்கள் - இல்லை 2. வருவாய் கோட்ட அலுவலர் - ரூ. 20,000 வரை 3. மாவட்ட ஆட்சியர் - ரூ. 50,000 வரை 4. நில நிர்வாக ஆணையர் - ரூ. 2,00,000 வரை 5. அரசாங்கம் - ரூ. 2,00,000 க்கு மேல். இந்நிதி அதிகாரமானது குத்தகை விடப்படும் நிலத்தின் சந்தை மதிப்பாகும்.
Q365. அரசு நிலங்களை குத்தகை எடுத்தவர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டிய கால அவகாசம் என்ன?
(அரசு ஆணை 60 வ.து. நாள் : 6.2.1999) : அந்தந்த அலுவலர்கள் அவரவர்கள் அதிகார வரம்புக்குட்பட்டே குத்தகை நீடிப்பதற்கு ஆணையிடலாம். குத்தகை பெற்றவர் குத்தகை தொகை நிர்ணயித்து ஆணையை வழங்கிய 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில் மேலும் 30 நாட்கள் நீடிப்பு செய்யலாம். மொத்தத்தில் 90 நாட்களுக்குள் குத்தகை தொகையை செலுத்தவில்லை என்றால் குத்தகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Q366. நிலம் ஒப்படை என்பது என்ன?
கிராமப்புற மக்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த வேலைகளையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அனைவருக்கும் நிலம் இருப்பதில்லை. எனவே விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு அரசு வழங்கி வருகிறது. விவசாய் நில ஒப்படை வருவாய் நிர்வாக ஆணை 15-ன் கீழ் செய்யப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் நிலமற்றோருக்கு, அரசு நிலத்தை வேளாண்மைக்கோ அல்லது வீடு கட்டவோ, சில வரை முறைகளின் படி அளிப்பது
Q367. நில ஒப்படை முறையில் அனுசரிக்கப்படும் முன்னுரிமை முறை என்ன?
1. எல்லை பாதுகாப்புப்படை வீரர் (ம) இராணுவப்படை உட்பட முப்படையில் பணீயில் இருந்தபோது உயிரிழந்தவர்கள் அல்லது செயலிழந்தவர்களின் குடும்பங்கள். 2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர். 3. விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் 4. முன்னாள் ராணுவத்தினர் 5. நிலமற்ற ஏழைகள்
Q368. நில ஒப்படை நடவடிக்கையில் அனுசரிக்கப்பட வேண்டிய விதிகள் யாவை?
1. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறத்தில் ரூ. 16,000/- ம் நகர்ப்புறத்தில் ரூ. 24,000/-க்கும் குறைவானவர்களுக்கே இலவச நில ஒப்படை செய்யபப்டுகிறது. (அரசு ஆணை (நிலை) எண். 287, வருவாய்த்துறை, நாள். 31.5.2000) 2. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக இதர மாவட்டங்களில் ஒப்படை செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு (அவர் ஏற்கனவே வைத்திருக்கும் நிலப்பரப்பும், ஒப்படை பரப்பும் சேர்த்து 3 ஏக்கர் புன்செய் அல்லது 1.50 ஏக்கர் நன்செய் என்ற வரம்புக்குட்பட்டு செய்யப்படுகிறது. 2 (அ). கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் புன்செய் 1 ஏக்கர் அல்லது நன்செய் 0.50 ஏக்கர் பரப்பளவு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3. நில ஒப்படை பெற்றவர் ஒப்படை பெற்ற நாளில் இருந்து (மூன்று ஆண்டுகளுக்குள்) நிலத்தை சாகுபடி செய்ய வேண்டும்.
Q369.
4. நிலத்தை யாருக்கும் 10 ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது. 10 ஆண்டுகளுக்கு மேல் விற்பனை செய்ய வேண்டியிருப்பின் உரிய அலுவலர் அனுமதி பெற்ற பின்புதான் விற்பனை செய்யலாம். தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் நிலங்கள் வேறு பிரிவினருக்கு விற்பனை செய்யக்கூடாது. 5. நிலத்தில் குறைந்தது 10 மரங்கள் நட வேண்டும். 6. நிபந்தனைகள் மீறப்பட்டால் எவ்வித இழப்பீடின்றி ஒப்படை செய்யப்பட்ட நிலத்தை அரசுக்கு மீளப்படும். 7. சமுதாய நிலங்கள் அதாவது ஏரி, குளம், வாய்க்கால், குட்டை போன்ற நீர்நிலை புறம்போக்குகள் மந்தவெளி, மேய்க்கால் மற்றும் மயானம் ஆகிய நிலங்கள் ஒப்படை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இது தவிர மலைப் பிரதேசங்களிலும் விவசாய நில ஒப்படை தடை செய்யப்பட்டுள்ளது. 8. சென்னை மற்றும் இதர நகர்ப்புறங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட தூர அளவிற்கு நில ஒப்படை தடை செய்யப்பட்டுள்ளது.
Q370. விவசாய நிலங்களை ஒப்படை செய்வதற்கு வருவாய் துறை அலுவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிதி வரம்பு என்ன?
விவசாய நில ஒப்படை செய்வதற்கு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட நிதி அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஆணை நிலை 60, வ.து. நாள் : 6.2.1999. அலுவலர் நிதி வரம்பு 1. வட்டாட்சியர் ரூ. 10,000 2. கோட்டாட்சியர் ரூ. 20,000 3. மாவட்ட வருவாய் அலுவலர் ரூ. 50,000 4. மாவட்ட ஆட்சித் தலைவர் ரூ. 2,00,000 5. நில நிர்வாக ஆணையர் ரூ. 2,50,000 6. அரசு ரூ. 2,50,000 - மேல்
Q371. எத்தகைய நிலங்களை ஒப்படை செய்யலாம்?
1. பொதுவாக தீர்வை ஏற்பட்ட தரிசு ஆட்சேபனையற்ற நிலங்களை மட்டும் நிலமற்ற ஏழைகளுக்கு ஒப்படை செய்யலாம். தடை செய்யப்படாத புறம்போக்கு நிலங்களை ஒப்படை செய்ய தகுதியிருப்பின் மாவட்ட ஆட்சியரின் நில வகைபாடு மாற்ற உத்தரவுக்குப் பின்பு நிதி வரம்பின்படி ஒப்படை செய்யலாம். தீர்வை ஏற்பட்ட தரிசு நிலங்கள் வசதியுள்ளவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதனை அகற்றி நிலமற்ற ஏழைகளுக்கு நில ஒப்படை செய்யலாம். வசதியுள்ளவர்களுக்கு ஒப்படை செய்யக்கூடாது. 2. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களைப் பொறுத்தவரையில் அமைப்பின் தீர்மானம் பெற்ற பிறகே நிலங்களை ஒப்படை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் (த.நா. பஞ்சாயத்து சட்டம் 1994). 3. கிராம நத்தம் புறம்போக்கு அருகில் உள்ள நிலங்களை ஒப்படை செய்யக்கூடாது. (அரசு ஆணை 901, வ.து. நாள் : 8.7.1986 மற்றும் அரசு ஆணை 959. வ.து. நாள் : 20.1.1987). 4. கனிம வளமுள்ள நிலங்களை ஒப்படை செய்யக்கூடாது. 5. ஒதுக்க காடுகளுக்கு 200 மீட்டருக்குள் அமைந்துள்ள நிலங்கள் ஒப்படை செய்யக்கூடாது. 6. துறைமுகம் மற்றும் ரயில்வே நிலங்களுக்கு 805 மீட்டருக்குள் அமைந்திருக்கும் நிலங்களை அத்துறையினரின் இசைவினைப் பெற்ற பிறகே நில ஒப்படை செய்யலாம்.
Q372. வீட்டுமனை ஒப்படை செய்வதற்கான வலியுறுத்தல்கள் யாவை?
1. சமுதாயத்தில் நலிந்த பிரிவினர்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை தேவையான வசிப்பதற்கு இடம் வழங்குவது அரசின் நோக்கமாகும். அரசால் ஒப்படை செய்ய தடை செய்யப்பட்ட இடங்களைத் தவிர்த்து ஒப்படை செய்ய எங்கெங்கு நிலம் உள்ளதோ அங்கு வீட்டுமனைகளை தகுதியுள்ளவர்களுக்கு நிலை ஆணை 21-ன் கீழ் வரையறைக்குட்பட்டு வழங்கப்படுகிறது. 2. கிராமப்புறங்களில் நிலமற்ற ஏழைக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 16,000/-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கும், நகர்ப்புறங்களை பொறுத்தவரையில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 24,000/-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது. 3. கிராமப்புறங்களில் 3 சென்ட் நகராட்சி எல்லைக்குள் ஒன்றரை சென்டும், மாநகராட்சி எல்லைக்குள் ஒரு சென்டு என்ற அளவில் வீட்டு மனைகள் ஒப்படை செய்யப்படுகிறது.
Q373. பாசன ஆதாரங்கள் - தண்ணீர் தீர்வை முறைகள் எவ்வகையாக பிரிக்கப்பட்டுள்ளன?
முதல் வகுப்பு : வருடம் முழுவதற்கும் ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடிய நிரந்தர பாசன ஆதாரங்கள் (வைகை, காவேரி முதலியவை) இரண்டாம் வகுப்பு : ஒரு வருடத்தில் எட்டு முதல் 10 மாதங்கள் சாகுபடிக்கு நீர் கொடுக்கக்கூடியது. (பெரிய ஏரிகள்) மூன்றாம் வகுப்பு : ஒரு வருடத்தில் ஆயக்கட்டு நிலங்களுக்கு ஐந்து மாதம் முதல் எட்டு மாதம் வரை பாசனத்திற்கு தண்ணீர்க் கொடுக்கக் கூடியவை. நான்காம் வகுப்பு : மூன்று மாதங்கள் அதற்கு மேலும் ஆனால் ஐந்து மாதங்கள் வரை ஆயக்கட்டு நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடிய பாசன ஆதாரங்கள். (சிறிய ஏரிகள்)
Q374.
ஐந்தாம் வகுப்பு : மூன்று மாதங்களுக்குக் குறைவாக நீர் வழங்கக்கூடிய பாசன ஆதாரங்கள் (குளங்கள், குட்டைகள்).
Q375. அரசு நிலங்களை வேறு மேம்பாடு காரணங்களுக்காக மத்திய அரசுக்கு நில மாற்றம் செய்வதில் உள்ள வலியுறுத்தல்கள் யாவை?
அரசு புறம்போக்கு நிலங்களை மைய அரசுத் துறைகளுக்கு வருவாய் நிலையாணை 23-ன் கீழ் வழக்கமாக சந்தை மதிப்பினை வசூலித்துக்கொண்டு நிலமாற்றம் செய்யப்படுகிறது. பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற வணிக நோக்கமில்லாத காரணங்களுக்கு நிலக்கிரயமின்றி நிலமாற்றம் செய்யப்படுகிறது. வணிக நோக்கங்களுக்காக நிலங்களை கேட்கும்போது நிலத்தின் மதிப்பு வசூல் செய்து கொண்டு நிலமாற்றம் செய்யப்படுகிறது.
Q376. அரசு நிலங்களை வேறு மேம்பாடு காரணங்களுக்காக மத்திய அரசுக்கு நில மாற்றம் செய்வதில் கிராம நிர்வாக அலுவலர் பணிகள் யாவை?
1. நிலமாற்றம் தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் கிராமத்தில் கேட்பு துறைக்கு வழங்குவது குறித்து தண்டோரா மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். பொது மக்களிடம் ஆட்சேபனை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆட்சேபனை உள்ள இனங்களில் அவைகளை விசாரித்து உண்மையான நிலை குறித்த அறிக்கையை வருவாய் ஆய்வர் மூலம் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 2. மேலும் நிலத்தின் சந்தை மதிப்பினை நிர்வாகம் செய்ய அக்கம்பக்கத்தில் உள்ள நிலங்களின் உண்மை மதிப்பினை தெரிவிக்க வேண்டும்.
Q377. மேம்பாட்டு பணிகளுக்காக, அரசிடம் நிலங்கள் இல்லாத போது, சில சமயங்களில் தனியார் பட்டா நிலங்களை நில எடுப்பு செய்ய வேண்டிய அவசியம் பற்றிய வலியுறுத்தல்கள் யாவை?
அரசு துறைகள் / அரசு நிறுவனங்களுக்கு பொது நோக்கத்திற்காக நிலங்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய நிலங்கள் தேவைப்படும்போது, அரசு நிலங்கள் இல்லாதபோது பட்டா நிலங்களை 1894-ம் ஆண்டு நில எடுப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தலாம். கையகப்படுத்தும் செயல்முறைகளை முழுமையாக முடிப்பதற்கு மூன்று ஆண்டு காலம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக விரைவாக நடவடிக்கை எடுக்க Pert Chart நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு விரைவாக நிலங்கள் தேவைப்படும்போது பிரிவு 17(1) மற்றும் பிரிவு 17(2)ன் கீழ் உடனடியாக நிலத்தை கையகப்படுத்த முடியும்.
Q378. நில எடுப்பு பணியில் கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் யாவை?
1. நில எடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தும்போது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அறிவிப்புகளை கிராமத்தில் அவ்வப்போது விளம்பரம் செய்ய வேண்டும். நோட்டீஸ்களை நில உரிமையாளரிடம் சரியான முறையில் சார்வு செய்ய வேண்டும். 2. நிலத்தின் உண்மையான மதிப்பினை நில எடுப்பு அலுவலருக்கு தெரிவிப்பதும், கிராம கணக்குகள் நகல் வழங்குவதும் கிராம நிர்வாக அலுவலர் கடமையாகும். 3. தீர்ப்பாணை விசாரனையில் உண்மையான நிலச் சொந்தக்காரர்கள், குத்தகைதாரர்கள், அனுபோகதாரர்கள், வாரிசுதாரர்கள் ஆகியோர் பற்றிய சரியான முழு விவரங்கள் தெரிவிப்பது கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பாகும். இத்தகைய விவரங்கள் வழங்கினால்தான் உண்மையான சொந்தக்காரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை சரியான முறையில் நில எடுப்பு அலுவலரால் பகிர்வு செய்ய முடியும். 4. முறையற்ற வகையில் நில சொந்தக்காரர்கள் கையகப்படுத்தும் நிலங்களை பராதீனம் செய்திருந்தாலும் அதனை கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
Q379. நில ஒப்படை விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் யாவை?
1. கிராம நத்தம் புறம்போக்கில் உள்ள காலி இடங்களை வீட்டுமனை ஒப்படை செய்யக் கோரி வரப்பெறும் மனுக்களை கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் வீட்டுமனை ஒப்படைப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு கிராமத்தில் அறிவிப்பு ஒன்றினை விளம்பரம் செய்து ஆட்சேபனைகள் உண்டா என்பதனை தீர விசாரிக்க வேண்டும். அதே நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கருத்தினைப் பெற்று ஆட்சேபனையில்லாத நிலையில் தகுதியின் அடிப்படையில் வீட்டுமனை ஒப்படை செய்ய வருவாய் ஆய்வாளர் மூலம் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்யலாம்.
2. வீட்டுமனை பெற தகுதியான நபர்களை மட்டும் கிராம நிர்வாக அலுவலர் அடையாளம் கண்டு உண்மையான தகுதியுள்ள நபர்களுக்கு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.
3. வருவாய்த்துறை அலுவலர்களின் தணிக்கைக்குப் பின்பு ஒப்படை ஆணை உரிய அலுவலர்கள் நிதி வரம்பிற்கு உட்பட்டு வழங்குவார்கள். ஒப்படை செய்யப்பட்ட ஆணை பெற்ற பின்பு கிராம நிர்வாக அலுவலர் வீட்டுமனை அடங்கல், சிட்டா, 'அ' பதிவேடு மற்றும் வீட்டுமனை பதிவேடு ஆகிய கணக்குகளில் பதிவுகள் மேற்கொள்வது உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
4. வீட்டுமனை ஒப்படை பெற்றவர் கூட்டுறவு சங்கங்கள் தவிர இதர நிறுவனங்களில் வீட்டுமனை பட்டாவை அடமானம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் அரசாணை எண். 532. வ.து.இ. நாள் : 29.11.2001-ன் படி தெசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுமனைப் பட்டாவை அடமானம் வைத்து கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணித்து விதிமீறல் இருந்தால் அறிக்கை அனுப்ப வேண்டும்.
5. வீட்டுமனை ஒப்படை பெற்ற பிறகு 12 மாதத்திற்குள் வீடு கட்ட வேண்டும். இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
6. ஒப்படை செய்யப்பட்ட மனையை யாருக்கும் விற்கக்கூடாது. நிபந்தனைகள் மீறப்பட்ட இனங்களை கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
7. ஆதிதிராவிடர் நலத்துறையில் வீட்டுமனைப் பட்டா வழங்கிய ஆறு மாதக் காலத்திற்குள் வீடு கட்ட வேண்டும். (வ.நி.ஆ. 22).
Q380. ஆயக்கட்டு என்பது எதைக் குறிக்கிறது?
ஒரு பாசன ஆதாரத்திலிருந்து சாகுபடிக்கு நீர் பெறுவதற்காக பதிவு செய்யப்படும் நிலங்கள் ஆயக்கட்டு நிலங்கள் எனப்படும்.
Q381. கூட்டு ஆயக்கட்டு என்பது எதைக் குறிக்கிறது?
ஒன்றுக்கு மேற்பட்ட இரு பாசன ஆதாரங்களிலிருந்து பாசனம் பெற பதிவு செய்யப்பட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு கூட்டு ஆயக்கட்டு என்று பெயர்.
Q382. புறம்போக்கு கிணறுகள் என்பது என்ன?
இவைகளால் ஒவ்வொன்றும் 3 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு இருக்குமானால் இந்த மாதிரி கிணறுகளை பாசன ஆதாரங்களாக பதிவு செய்து ஆயக்கட்டு நிலங்களுக்குரிய தீர்வை விதிக்கப்படும்.
Q383. துறவு கிணறுகள் என்பது எதைக் குறிக்கிறது?
ஆறு, வாய்க்கால் மற்றும் ஓடைக் கரையில் திறந்த அல்லது மூடிய வாய்க்காலின் மூலம் இணைத்துக்கட்டப்பட்ட கிணறுகளுக்கு துறவுக் கிணறுகள் என்று பெயர். இதன்மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் தீர்வை விதிக்க வேண்டும்.
Q384. இசா ஏரி என்பது என்ன?
ஒரு வருவாய் கிராமத்தில் ஏரி அமைந்திருந்து, ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்களை ஆயக்கட்டு நிலங்களாகக் கொண்ட ஏரி.
Q385. பசலி ஜாஸ்தி என்பது என்ன?
ஒரு போக நன்செய் நிலங்களாக பதிவு செய்யப்பட்ட நன்செய் நிலங்களில், இரண்டாம் போகத்திற்கு தண்ணீர், அரசு பாசன ஆதாரத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு சாகுபடி செய்யப்படுமானால் அதற்கு விதிக்கப்படும் தண்ணீர் தீர்வைக்கு " பசலி ஜாஸ்தி " என்று பெயர். (தரத் தீர்வையுடன் இரண்டாம் போக சாகுபடிக்கு தீர்வையில் பாதி விதிக்கப்பட வேண்டும்).
Q386. தீர்வை ஜாஸ்தி என்பது என்ன?
ஆயக்கட்டில் சேர்க்கப்படாத புன்செய் மானாவாரி மற்றும் புறம்போக்கு அரசு பாசன ஆதாரங்களிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளப்பட்டு சாகுபடி செய்யப்படுமானால் அதற்குண்டான தண்ணீர் தீர்வைக்கு "தீர்வை ஜாஸ்தி" என்று பெயர்.
Q387. அனுமதிக்கப்பட்ட நீர் பாசனத்திற்கு மேல், அரசு நீர் ஆதாரத்திலிருந்து பாசனத்திற்கு நீர் எடுக்கப்படுமேயானால் இதற்கு அபராதம் மற்றும் விகிதம் எவ்வாறு விதிக்கப்படுகிறது?
1. முதல் முறையாக தண்ணீர் எடுத்துக் கொண்டால் - ஒரு மடங்கு (Single Time). 2. இரண்டாம் முறையாக தண்ணீர் எடுத்துக் கொண்டால் - ஐந்து மடங்கு (Five times). 3. மூன்றாம் முறையாக தண்ணீர் எடுத்துக் கொண்டால் - பத்து மடங்கு (Ten times). 4. நான்காம் முறையாக தண்ணீர் எடுத்துக் கொண்டால் - இருபது மடங்கு (Twenty times) இவ்விதிப்பு நாற்றங்கால் பயிருக்குக் கிடையாது.
Q388. டஃபசல் பயிர்கள் (Duffasal Crops) என்பது எதைக் குறிக்கிறது?
ஒரு பருவத்திற்கு மேல் பூமியில் அறுவடை செய்யாமல் உள்ள சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் (கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் வெற்றிலை முதலிய பயிர்கள்). இம்மாதிரி பயிர்களுக்கு தண்ணீர் தீர்வை விகிதங்கள் வருவாய் நிர்வாக ஆணை- 4-ல் விவரிக்கப்பட்டுள்ளது.
Q389. பசலி தீர்வை வசூலிக்கும் முறை என்ன?
1. ஒரு போக நன்செய்யில் ஒரு பசலியில் விதைக்கப்பட்டு அப்பசலியிலேயே அறுவடை செய்யப்பட்டால் 1% மடங்கு ஒரு போக நன்செய் தீர்வை. 2. ஒரு பசலியில் நடப்பட்டு அடுத்த பசலியில் அறுவடை செய்யப்படுமானால் ஒவ்வொரு பசலியிலும் 1 போக நன்செய்த் தீர்வை. 3. டஃபசல் பயிருக்கு முன்னர் அல்லது அதற்குப் பின்னர் நீர்ப்பாய்ச்சப்பட்ட பயிர் வேறொன்று விளைவிக்கப்பட்டால் முதல் பசலியில் ஒரு போக நன்செய் தீர்வை, 2வது பசலியில் அந்தத் தீர்வை 1% மடங்கு. 4. நீர்ப்பாய்ச்சப்பட்ட வேறு இரண்டு பயிர்கள், டஃபசல் பயிருக்கு முன்னர் ஒன்றும் அதற்குப் பின்னர் ஒன்றும் விளைக்கப்பட்டால் முதல் பசலியில் ஒரு போக நன்செய் தீர்வையும் 2வது பசலியில் அந்தத் தீர்வையில் இருமடங்கும்.
Q390. கிராமப் புறங்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்கள் யாவை?
1. முதியோர் ஓய்வூதியத் திட்டம் (சாதாரணம்) (1.4.1962 முதல்). 2. ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம் (1.11.1974 முதல்). 3. ஆதரவற்ற விதவை ஓய்வூதிய உதவித் திட்டம் (1.6.1975 முதல்). 4. ஆதரவற்ற விவசாயக் கூலி ஓய்வூதிய உதவித் திட்டம் (15.3.1981 முதல்). 5. கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம் (25.4.1986 முதல்). 6. ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம் (6.11.1974 முதல்). 7. முதிர் கன்னி ஓய்வூதியத் திட்டம் (1.7.2008 முதல்). 8. இலவச வேட்டி வழங்கும் திட்டம் (15.1.1985 முதல்). 9. விபத்து நிவாரணத் திட்டம் (28.8.1996 முதல்). 10. தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் (15.8.2005 முதல்). 11. இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை (1.1.2008 முதல்). 12. இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை (1.4.2010 முதல்). 13. இந்திராகாந்தி தேசிய விதவைகள் உதவித்தொகை (1.4.2010 முதல்).
Q391. பட்டா (நில உரிமை) மாற்றுதல் என்பதற்கான நிலைகள் யாவை?
வருவாய் நிலை ஆணை எண். 31ல் கண்ட விதிமுறைகளின் படி பட்டா மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 1. உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றிவிடுதல். 2. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் வருவாய்த் துறையினரின் விற்பனைகளால் மாறுதல். 3. வாரிசுதாரருக்கு சட்ட முறையினால் மாறுதல் என மூன்று வகைப்படும்.
Q392. நில உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றி விடுதல் என்பது ஏற்படும் தருணங்கள் யாவை? :
1. நிலத்தின் பட்டாதாரர் தன் நிலத்தை தனியொருவருக்கு விற்பனை செய்தல் அல்லது தானம் கொடுத்தல். 2. மற்றொருவர் நிலத்துடன் தன் நிலத்தை பரிவர்த்தனை செய்தல். 3. தனிநபர் தன் நிலத்தின் உரிமையை அரசுக்கு விட்டுவிடுதல். 4. நிலங்களை பாகப்பிரிவினை செய்தல். 5. நிலங்களை அவரவர் பங்கிற்கு ஏற்ப உட்பிரிவு செய்தல். 6. தனியார் நிலங்களின் நன்செய்/புன்செய் வகைப்பாடுகளை மாற்றுதல்.
Q393. நில உரிமை. நீதிமன்றங்களின் தீர்ப்பு மற்றும் வருவாய்த்துறையின் விற்பனை, ஆகியவற்றால் மாறுதல் ஏற்படும் தருணங்கள் யாவை?
1. நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் நில உரிமை மாறுபடுதல். 2. நீதிமன்றத்தால் நிலங்கள் விற்கப்படுதல். 3. அரசு வரி பாக்கிக்காக தனியார் நிலங்களை அரசு ஏலம் விட்டு அரசு வாங்கியது/அதனை தனி நபருக்கு ஏலம் விடுவது. 4. நிலமெடுப்பு மூலமாக, தனியார் நிலங்கள் எடுக்கப்படுதல். 5. வாரிசு இல்லாததால் அரசுக்கு வரப்பெற்ற சொத்துக்கள்.
Q394. வாரிசுதாரருக்குச் சட்ட முறையினால் பட்டா மாறுதல் ஏற்படும் தருணங்கள் யாவை?
1. உரிமையாளரின் வாழ்காலத்தில் அவரது அனுமதியுடன் அல்லது அவரது மரணத்தின் காரணமாக வாரிசுதாரர்களுக்கு பதிவு மாற்றம் செய்தல். 2. பட்டாதாரர் காணாமல் போகும்போது வாரிசுதாரர்களின் பெயரில் மாற்றம் செய்தல். 3. கைப்பற்று நிலம் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வேறு நபர்களின் அனுபோகத்தில் இருப்பின் பட்டா மாறுதல் செய்தல்.
Q395. பட்டா மாறுதல் நடவடிக்கைகள் குறித்து கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் யாவை?
1. பட்டா மாறுதல் கோருபவரின் விண்ணப்பத்தில் கண்ட புல எண், பரப்பு, வகைபாடு சரியாக உள்ளதா என்பதனை தெளிவு செய்ய வேண்டும். 2. சிட்டாவில் அவர் பெயர் உள்ளதா, அவருக்கும், நிலத்திற்கும் என்ன தொடர்பு என்பதனை தெளிய வேண்டும். 3. நிலத்தை விற்றவருக்கும், விற்பனை செய்வதற்கான உரிமை/அதிகாரம் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும். 4. ஒரு புலத்தின் முழு அளவும் விற்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதனை ஆய்வு செய்ய வேண்டும். 5. நிலத்தின் உரிமை குறித்து நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா என்பதனை ஆராய வேண்டும். 6. நீதிமன்ற தீர்ப்பின்பேரில் மாறுதல், உட்பிரிவு கோரப்பட்டால், நீதிமன்ற தீர்ப்பின் நகல் இணைக்கப்பட்டுள்ளதா என்பதனை ஆராய வேண்டும். 7. நீதிமன்ற தீர்ப்பின் பேரில் மாறுதல், உட்பிரிவு கோரப்பட்டால், நீதிமன்ற தீர்ப்பின் நகல் இணைக்கப்பட்டுள்ளதா என்பதனையும் அதன் உண்மைத் தன்மையும் ஆராய வேண்டும். 8. எந்தவொரு காரணத்தையும் முன்னிட்டும் பட்டா மாறுதல் கோருபவருக்கு அதற்கான உரிமை உள்ளதா, அவ்வுரிமை எவ்வாறு கிடைத்தது, அதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும்.
Q396. நில வகைகள் யாவை?
1. நன்செய் 2. புன்செய் 3. மானாவாரி 4. புறம்போக்கு
Q397. வருவாய் ரீதியாக நிலங்கள் பிரிக்கப்படும் முறைகள் யாவை?
1. தீர்வை ஏற்பட்ட தரிசு 2. தீர்வை ஏற்படாத தரிசு 3. புறம்போக்கு 4. ஒதுக்கக் காடுகள்
Q398. நில சீர்திருத்தம் என்பது என்ன?
விவசாய நில உடைமைகளில் ஏற்றத் தாழ்வுகளை நீக்க நில உடைமைக்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அத்தகைய உச்சவரம்புக்கு மேல் நிலங்களை வைத்திருந்தால், அதனை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கும் நோக்கத்திற்காக 1961-ஆம் ஆண்டைய தமிழ்நாடு நிலச் சீர்திருத்த ( நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 58/61) இயற்றப்பட்டது.
Q399. தற்போது அமலில் உள்ள நில உச்சவரம்பு வலியுறுத்தல்கள் யாவை?
1. ஐந்து நபர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு - 15 தர ஏக்கர். 2. ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கு - 5 தர ஏக்கர்.
3. மொத்த உச்ச வரம்பு -- 30 தர ஏக்கர்.
4. 1.3.1972 நிலையில் இருந்த நம்பகங்களுக்கு (Trust)
5. 1-3-1972-க்குப் பிறகு எந்த நம்பகமும் விவசாய நிலங்கள் பெறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பொது நம்பகங்கள் கல்வி மற்றும் மருத்துவமனை நோக்கங்களுக்காக மட்டுமே 01.03.1972 தேதிக்குப் பிறகும் நிலங்கள் வாங்கலாம். ஆனால், அதற்கு சட்டப்பிரிவு 37 B-யின் கீழ் அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதே போல் தொழில் மற்றும் வணிக நோக்கங்களுக்காக தொழில் நிறுவனங்கள் உச்ச வரம்புக்கு மேல் விவசாய நிலங்கள் வாங்கும் பட்சத்தில் சட்டப்பிரிவு 37 A-யின் படி அரசின் அனுமதி பெற வேண்டும். குறிப்பு : ஒரு தர ஏக்கர் என்பது நிலத்தின் தீர்வைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. இது ஒரு சாதாரண ஏக்கருக்கும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்.
உபரி நிலங்களை ஒப்படை செய்த உடன் நில மதிப்பினை வசூல் செய்ய சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நில சீர்திருத்த உதவி ஆணையர் பட்டியல் ஒன்றினை அனுப்புவார். அதில் குறிப்பிட்டுள்ளபடி நில ஒப்படைதாரர்களிடமிருந்து நில மதிப்பினை கிராம நிர்வாக அலுவலர் வசூல் செய்ய வேண்டும். இரண்டு தவணைகள் தொடர்ச்சியாக நிலமதிப்பு, தொகை கட்டாமல் இருப்பின் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்படை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம். மேலும், ஒப்படை நிபந்தனைகள் மீறப்பட்டாலும் நிலத்தை ஒப்படைதாரர்களிடமிருந்து திரும்பப் பெறலாம்.
1. நிலச் சீர்திருத்த சட்டப்படி உச்ச வரம்புக்கு மேல் நிலங்களை வைத்திருக்கின்ற நில உரிமையாளர் / நிறுவனங்கள் பட்டியலை உதவி ஆணையருக்கு கிராமக் கணக்குகளின் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.
2. சட்ட விதிகளின்படி சில இனங்களின் (தோப்பு முதலியவை) சீர்திருத்தச் சட்டத்திலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டது. ஒப்படை செய்யப்பட்ட பின்பு விதி விலக்கு அளிக்கப்பட்டட இனங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டால் அதனை நிலச்சீர்திருத்த உதவி ஆணையருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
3. இச்சட்டத்தின் கீழ் அவ்வப்போது வழங்கப்படும் அறிவிப்புகளை கிராமத்தில் விளம்பரம் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவிக்கைகளை சார்வு செய்ய வேண்டும்.
4. உபரி நிலங்களை ஒப்படை கோரும் விண்ணப்பதாரர்களுடைய தகுதி குறித்தான எல்லா விவரங்களையும் விசாரணையில் விடுபடாமல் தெரிவிக்க வேண்டும்.
5. நிலமதிப்பு வசூல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் நிலமதிப்பு லெட்ஜர் (ம) வசூல் கணக்குகள் பராமரிக்க வேண்டும்.
6. உபரி நிலமானது ஏற்கனவெ குத்தகைதாரர் கைப்பற்றில் இருந்தால் அத்தகைய நிலத்தை அவருக்கு ஒப்படை செய்திருப்பின் உபரி நிலமாக அறிவிப்பு செய்த நாள் முதல் ஒப்படை செய்யும் நாள் வரையில் உள்ள குத்தகை பணத்தை அவரிடம் வசூல் செய்ய வேண்டும்.