புஷ்யபூதி வம்சம் -- PUSHYABHUTI DYNASTY – 606 – 647 AD
Q1. புஷ்யபூதி வம்சம் குப்தர்கள் காலத்து சிநேக மன்னர்களாக இருந்தவர்கள். இந்த வம்சத்து
முதல் முக்கிய மன்னர் யார்? அதன் தலைநகரம் எது?
ப்ராபகர வர்தனா -- இதன் தலைநகரம் தானேஸ்வர்.
Q2. புஷ்யபூதி வம்ச ஆட்சியின் மிகவும் புகழ்பெற்ற, முக்கியமான மன்னர் யார்?
ஹர்ஷா (வர்தனா). ப்ரபாகர வர்தனாவின் இரண்டாவது மகன். இவருடைய மூத்த சகோதரர் சசங்கா என்ற இடத்தில் நடந்த போரில் மாண்டதால், மன்னர் பதவி ஏற்றார்.
Q3. ஹர்ஷா காலத்தில் இந்த வம்ச ஆட்சி பரவியிருந்த பகுதிகள் யாவை?
"கி.பி 612 ல், ஹர்ஷா வட இந்தியா முழுமையாக -- பஞ்சாப், கண்டா, ஒடிச, மிதிலா, பீஹார்
போன்ற பகுதிகளை தன் வசம் கொண்டுவந்து ஆட்சி புரிந்தார். "
Q4. ஹர்ஷர் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்று வளர்ந்த மதம் எது?
இந்து மதம் -- முக்கியமாக பிராமணர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
Q5. ஹர்ஷரின் அரசவை கவிஞர் யார், அவருடைய படைப்புகள் யாவை?
பாணா -- இவருடைய படைப்ப்புகள் -- ஹர்ஷசரிதா, காதம்பரி, பார்வதி பரிணய்.
Q6. ஹர்ஷர் காலத்தில் விஜயம் செய்த சீன யாத்திரிகர் யார்?
ஹூவான் சுவாங் -- 7 வது நூற்றாண்டின் முதல் கால் பகுதியில்.
Q7. ஹர்ஷரின் சொந்த இலக்கிய படைப்புகள் யாவை?
ரத்னாவளி, நாகாநந்தா, ப்ரியதர்சிகா -- அச்சமய அரசியல் நிலையை விளக்குகிறது.
Q8. ஹர்ஷர் எந்த இரண்டு இடங்களில் ஆன்மீக சபைக்கூட்டத்தை நடத்தினார்?
கனௌஜ் மற்றும் ப்ரயாக்.
Q9. ஹர்ஷரின் ராணுவ வெற்றிகள் யாவை?
"ஐக்கிய தானேசர் மற்றும் கனௌஜ் பகுதிகள். கனௌஜ் தலைநகராக்கப்பட்டது. வங்காளத்தில்
ஷசங்கா மன்னர், குஜராத்தில் துருவசேனா மன்னர், மற்றும் ஒடிசாவின் கஞ்ஜம் பகுதி
ஆகியவை இவர் காலத்து ராணுவ வெற்றிகள். தென் இந்தியாவில் படையெடுக்க முயன்று
சாளுக்ய மன்னர் புலிகேசி 2 ஆல் தடுக்கப்பட்டார். "
Q10. புஷ்யபூதி வம்ச ஆட்சியின் தலைநகராக விளங்கிய நகரம் எது?
கனௌஜ்.