Q1. குஜராத் மன்னர்கள் RULERS OF GUJARAT
"இந்த பகுதி சிந்து சமவெளி நாகரீகம், மௌர்ய, சதவாஹன, குப்தர், சாளுக்ய, ராஷ்டிரகுட, பாலா, ப்ரத்திஹாரா, சோலங்கி, மேற்கு சாளுக்யா,
வகேலா, டெல்லி சுல்தானியம், முகலாயர்கள் ஆங்கிலேயர்கள் என பல நிலைகளைத் தாண்டிய பகுதி.
இந்த பகுதி 1391ல் முகமது பின் ஃபிருஸ் துக்ளக்கின் தளபதி ஸாஃபர் கான் ஆட்சியின் கீழ் வந்தது. இவர் தன்னை முஸாஃபர் ஷா என
அழைத்துக் கொண்டு 1411 வரை ஆட்சி செய்தார். இவரைத் தொடர்ந்து,
அகமது ஷா 1411-1442 -- அஹமதாபாத் நகரை உருவாக்கி தலைநகராக்கினார் (அனில்வாராவிலிருந்து மாற்றம்) .பிறகு
முகமது ஷா அஹமது ஷா (1442-1451),
மஹ்மூத் ஷா 2 (1459-1611). குஜராத்தை ஆண்ட மன்னர்களுள் மிகவும் சக்தி வாய்ந்த மன்னராக திகழ்ந்தார். இவருடைய காலத்தில், மேற்கில்
அரபிக்கடல், தெற்கில் காந்தேஷ், கிழக்கில் மாளவா, வடக்கில் ஜாலோர், நகௌர் வரை பரவிய பெரியா ராஜ்யமானது.
முஸாஃப்ர் ஷா 2 Muzaffar Shah II (1511-1526) இவருடைய காலத்தில் டையூ பகுதியில் போர்ச்சுகீசியர்கள், மேவார் பகுதியில் ரண சங்கா
போன்றவர்களின் பலத்த எதிர்ப்பு இருந்தது.
பகதூர் ஷா Bahadur Shah, 1526 -1537.குஜராத்தின் மற்றொரு சக்தி வாய்ந்த மன்னர். மேவார் மன்னர் ரண சங்காவைத் கன்வா போரில் தோற்கடித்து, கொன்று, இழந்த மாளவ பகுதியை மீட்டார். இருப்பினும் அவருடைய கடைசி காலத்தில், முகலாய மன்னர் ஹூமாயூன்
இடம் தோல்வி அடைந்து, பிறகு மீண்டும் ஹூமாயூனிடமிருந்து மீட்டுக்கொண்டார்.
போர்ச்சுகீசியர்கள் குஜராத்தின் மீது தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுத்து வரவே, அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக
அவர்களுடன் ஒரு கப்பலில் பேச்சுவார்த்தை நடத்தும் போது கடலில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இவருக்குப் பிறகு
வந்த மன்னர்கள் பலவீனமானவர்களாக இருந்ததால் முகலாய மன்னர் அக்பர் காலத்தில் இந்தப்பகுதி முகலாய ஆட்சியின் கீழ் வந்தது.
"