Khub.info Learn TNPSC exam and online pratice

இந்திய அரசாங்க துறைகள்

Q1. நிதி மற்றும் திட்டம் அமைச்சகம் - MINISTRY OF FINANCE & PLANNING:

1.1.2015 அன்று, NITI AAYOG (National Institution for Transforming India) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், திட்டக்குழுவைப்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் 2015 நிலையில் சம்பந்தமில்லாத அல்லது தேவையற்ற தகவல்கள் என கருதலாம். ஆனால், பொது அறிவு என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Q2. திட்டக்குழு எப்போது அமைக்கப்பட்டது?
மார்ச் 1950
Q3. எந்த நாட்டு திட்டக்குழு கருத்துகள் நம் நாட்டு திட்டங்கள் தீட்டுவதில் பயன்படுத்தப்பட்டது?
USSR
Q4. திட்டக்குழுவுக்கு, பதவி அடிப்படையில், எப்போதும் தலைவராக இருந்தவர்....
பிரதம மந்திரி. 2015ல் ஆரம்பிக்கப்பட்ட NITI AAYOG-க்கும் பிரதம மந்திரி தான் தலைவர்.
Q5. திட்டக்குழுவின் அமைப்பு எவ்வாறு இருந்தது?

1. தலைவர்/ Chairman - பிரதம மந்திரி.
2. உதவி தலைவர் / Deputy Chairman / காபினெட் அமைச்சர் அந்தஸ்தில்.
3. துணை அமைச்சர் - திட்டம் - Minister of State for Planning.
4. 8 உறுப்பினர்கள் - பல துறைகளின் நிபுணர்கள்.
5. காரியதரிசி - Secretary. 6. ஒரு காரியாலயம் - Secretariate."
Q6. 2015 ஜனவரி முதல் ஆரம்பிக்கப்பட்ட "NITI AAYOG"-"நீத்தி ஆயோக்" விரிவாக்கம் / பொருள் என்ன?

NITI AAYOG (NATIONAL INSTITUTION FOR TRANSFORMING INDIA) - இந்தியாவில் மாற்றம் ஏற்படுத்த உதவும் தேசியக்குழு. (AAYOG = குழு = COMMISSION. NITI = திட்டம் =POLICY).

Q7. நீத்தி ஆயோக் - அமைப்பு என்ன?

1. தலைவர்/ Chairman - பிரதம மந்திரி.
2. காரியக்குழு - GOVERNING – COUNCIL - அனைத்து மாநில முதன் மந்திரிகள், யூனியன் பிரதேச லெஃப்டினன்ட் கவர்னர்கள்.
3. மண்டல குழுக்கள் - தேவையின் அடிப்படையில்.
4. சில துறைகளில் நிபுணர்கள் - சிறப்பு அழைப்பாளியாக.
5. துணைத் தலைவர் - VICE CHAIRMAN - ராஜீவ் குமார்  - இவர் ஒரு புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்.
6. முழு நேர உறுப்பினர்கள் - 2 - பிபேக் தேப்ராய் & சரஸ்வத்.
7. பகுதி நேர உறுப்பினர்கள் - 2 இந்திய தலைசிறந்த பல்கலை கழகங்களிலிருந்து இருவர்.
8. பதவி அடிப்படை உறுப்பினர்கள் - 4. பிரதமரால் நியமிக்கப்படும் நான்கு அமைச்சர்கள். இவர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தற்சமயம் - நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, சுரேஷ் பிரபு, ராதா மோகன் சிங்.
9. முக்கிய காரிய அதிகாரி - CHIEF EXECUTIVE OFFICER - சிந்து ஸ்ரீ குல்லார் - SINDHU SHREE KHULLAR - முன்னாள் IAS அதிகாரி மற்றும் திட்ட அமைப்பு குழு காரியதரிசி."

Q8. முன்னாள் திட்டக்குழுவின் மூன்று முக்கிய அங்கங்களாக இருந்த து?
1. தேசிய திட்டக்குழு - National Planning Council.
2. தேசிய வளர்ச்சிக்குழு - National Development Council.
3. மாநில திட்டக்குழுக்கள் - State Planning Commission.
Q9. திட்டக்குழு திட்டங்களை எத்தனை வருட கால அளவில் தீட்டியது?
ஐந்தாண்டுகள் - அதனால் ஐந்தாண்டு திட்டங்கள் என அழைக்கப்பட்ட து.
Q10. இதுவரை எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டுள்ளன?
முதல் - 1951-51 - 1955-56
இரண்டாம் - 1956-57 - 1960-61
மூன்றாம் - 1961-62 - 1965-66
நான்காம் - 1968-69 - 1973-74
ஐந்தாம் - 1974-75 -1978-79
ஆறாம் - 1980 - 85
ஏழாம் - 1986 - 90
எட்டாம் - 1992 - 97
ஒன்பதாம் - 1998 - 2002
பத்தாம் - 2002 - 2007
பதினொன்றாம் - 2007-2012
பன்னிரெண்டாம் - 2012-2017
Q11. ஐந்தாண்டு திட்டங்களில் கவரப்படாத வருடங்கள் எவை?
1966-67, 1967-68 & 1968 - 69 மற்றும் 1990 - 91, 1991-92. மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமையாததால் அத்திட்டம் கைவிடப்பட்டு, அதற்கு பதில் ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட து. 1990-92ல் பாகிஸ்தானுடன் போர் நடந்த தால், நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஓராண்டு திட்டங்கள் மட்டுமே அமல்படுத்தப்பட்ட து.
Q12. வறுமைக் கோட்டை வரையறுத்தது எந்த ஐந்தாண்டு திட்டம்?
ஆறாவது ஐந்தாண்டு திட்டம்.
Q13. "வறுமைக் கோடு" எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது?
ஒரு தனி மனிதன் உண்ணும் உணவில் உள்ள சத்து மற்றும் வாங்கும் திறன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவான கருத்தின்படி, கிராமப்புறங்களில் 2100 கலோரி, நகர்ப்புறங்களில் 2400 கலோரி சத்துணவு கிடைக்காதவன் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இந்த நிர்ணயமும் பல மேடைகளில் ஒரு விவாதிக்கப்படும் நிலையிலேயே உள்ளது. அடுத்தது வாங்கும் திறன். இது வருமானத்தை அடிப்படையாக்க் கொண்டது. இது ஒரு மாறும் சூழ் நிலை. ஆகவே, இதன் மூலமும் சரியான / நிலையாக விளக்கம் கிடைப்பதில்லை. சமீபத்தில் திரு. ரங்கராஜன் குழு அறிக்கையின்படி, கிராமப்புறத்தில் ரூ. 32, நகர்ப்புறத்தில் ரூ. 47ன் கீழ் தின வருமானம் பெறுபவர்கள், (சர்வதேச அறிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு) வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாக அறிவிக்கப்பட்ட து. இதுவும் நம் நாட்டில் ஒரு பெரும் சர்ச்சை உருவாக்கியது. ஆக, வறுமைக்கோட்டிற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு விளக்கம் கிடைக்க காத்திருப்போம்.
Q14. முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களை தீட்டிய இந்திய பொருளாதார நிபுணர் யார்?
P.C. மஹலனோபிஸ் (P.C.Mahalanobis)
Q15. "வறுமையை துரத்து" "GHARIBI HATAO" என்ற கோஷம் சம்பந்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்.
Q16. எந்த ஐந்தாண்டு திட்டம், ஒரு வருடம் முன்பாகவே நிறுத்தப்பட்ட து?
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்.
Q17. நம் நாட்டில் நாணய முறையை அறிமுகப்படுத்தியது யார்?
குப்தர்கள் - தங்க காசு - 390-550 AD.
Q18. நம் நாட்டில் "ரூபாய்" (RUPEE, RUPIAH) நாணய முறையை அறிமுகப்படுத்தியது யார்?
ஷெர்ஷா சூரி - 1542 AD ல் ரூபையா நாணய முறையை அறிமுகப்படுத்தினார். இதுவே காலப்போக்கில், RUPEE - ரூபாய் என மாறியது. சுமார் 179 கிராம் எடை கொண்ட வெள்ளி நாணயம்.
Q19. தசம நாணய முறை அறிவிக்கப்படுவதற்கு முன் இந்திய நாணய முறை எவ்வாறு இருந்த து?
கால் அணா, அரை அணா, ஒரு அணா, எட்டு அணா (அரை ரூபாய்), 16 அணா ஒரு ரூபாயாக இருந்தது.
Q20. தசம நாணய முறை எப்போது கொண்டுவரப்பட்ட து?
1.4.1957 முதல் - இந்திய நாணயச் சட்டம் 1955ன் கீழ்.
Q21. தசம நாணய முறை என்பது.....
நயா பைசா என்ற நாணய முறைப்படி, 1,2,5,10,20,25,50,100 (1 ரூபாய்) என்ற அடிப்படையில் நாணய முறை அமைந்தது. காலப்போக்கில் 1,2,5,20,25 பைசா புழக்கத்திலிருந்து நீங்கி, இப்போது 50 பைசாவும் அந்த நிலைக்கு வந்துவிட்ட து. காலப்போக்கில் குறைந்தபட்ச நாணயம் 1 ரூபாயாக இருக்க க்கூடும்.
Q22. RUPIAH/RUPEE என்ற வார்த்தை எங்கிருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது?
RUPAKAM - ரூபகம் - வெள்ளி நாணயம் - சமஸ்கிருத வார்த்தை.
Q23. காகித நாணயம் (PAPER CURRENCY) நம் நாட்டில் அரசாங்கத்தால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்ட து?
ஆங்கிலேயர்களால் 1882 ல்.
Q24. பணம் (MONEY) என்பது என்ன?
பொருள் அல்லது சேவை பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள்.
Q25. நாணயம் (காசு = COIN) என்பது என்ன?
உலோகத்தால் பல வடிவங்களில் செய்யப்படுவது அதற்கு மதிப்பு கொடுக்கப்படும்போது அது பொருளுக்கோ சேவைக்கோ மாற்றாக கொடுக்கப்படுவது.
Q26. வங்கி பத்திரம் (BANK NOTE) என்பது என்ன?
மாற்றுதலுக்கு உட்படுத்தக்கூடிய வாக்குப்பத்திரம். ஒரு வங்கியால் ஒருவரின் தேவைக்கு, ஒரு மதிப்புடன் கூடியதாக கொடுக்கப்படும் சட்டரீதியான பத்திரம். அதனால் தான் ரூபாய் நோட்டுகளில் "I Promise to Pay………….." கொடுப்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன்" என்ற வாக்கியம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்துடன் அச்சிடப்படுகிறது.
Q27. "மாறுதல் மதிப்பு" "EXCHANGE RATE" என்பது என்ன?
இதை "வெளி நாட்டு மாறுதல் மதிப்பு" - FOREIGN EXCHANGE = FOREX = FX என்று கூறுவர். அதாவது, ஒரு நாட்டின் நாணயம் (பணம்) மற்றொரு நாட்டு நாணயத்துடன் ஒப்பிடுகையில், அதன் மதிப்பு என்னவோ அதுவே இவ்வாறு அழைக்கப்படுகிறது. அதாவது, இன்றைய நிலையில் (JAN 2015) ஒரு அமெரிக்க டாலர் பெற, இந்திய ரூபாய் சுமார் 64 முதல் 67 வரை கொடுத்துப் பெற வேண்டும். இந்த மதிப்பு அன்றாட மாறுதலுக்குட்பட்ட து. இவ்வாறாக, நம் நாட்டு ரூபாய் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் என்ன மதிப்பு என்று, அந்த நாட்டு பொருளாதார அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
Q28. நம் நாட்டில் காகித நாணயம் (PAPER CURRENCY) எந்த சட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்டு சுழற்சிக்கு விடப்படுகிறது?
காகித நாணயச்சட்டம் 1861 - PAPER CURRENCY ACT 1861, இந்திய நாணய சட்டம் - 1906.
Q29. நம் நாட்டில் என்னென்ன மதிப்பில் காகித நாணயங்கள் - "PAPER CURRENCY " அச்சடிக்கப்படுகின்றன?
1,2,5,10,20,25,50,100, 500 & 1000 (9). இவற்றுள் 1,2,5 (சமீப காலத்தில் குறைந்த அளவில் 10) காகித நாணயங்கள் உலோக நாணயங்களாக மாற்றப்பட்டுவிட்டன. காரணம், காகித நாணயங்கள் சீக்கிரம் அழிவதாலும், அச்சடிப்பு செலவு அதிகமாகி வருவதாலும்.
Q30. நம் நாட்டை தவிர வேறு எந்த நாடுகள் நாணய முறையை பயன்படுத்துகின்றன?
(1). RUPEE - பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபாளம், மொரிஷியஸ், சிசெல்ஸ். (2) RUPIAH - இந்தோனேசியா; (3) RUPIAH - மாலத்தீவு.
Q31. இந்திய நாணயத்தின் சமீப கால அடையாள சின்னம் வடிவமைத்தவர் யார்?
D. உதய குமார் - IIT, கவுகாத்தியில் துணை பேராசிரியராக பணிபுரிகிறார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் முன்னாள் தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் N. தர்மலிங்கம் அவர்களின் குமார ர் என்பது குறிப்பிடத் தக்கது. இக்குறியீட் டு நாணயங்கள் ஜூலை 2011ல் வெளி வந்தன.
Q32. ஆங்கிலேயர் காலத்தில் புழக்கத்திற்கு விடப்பட்ட காகித நாணயங்கள் எவை?
1. விக்டோரியா உருவம் பதித்த து - 10,20, 50,100, 1000.
2. ஜார்ஜ் V உருவம் பதித்த து - 5, 10, 50, 100, 1000, 10000."
Q33. நம் நாட்டில் காகித நாணயங்களை வெளியிட்ட வங்கிகள் :
1. ஹிந்துஸ்தான் வங்கி - 1770 - 1782.
2. பெங்கால் மற்றும் பீஹார் பொதுவங்கி 1773 - 1775. இந்த வங்கி வாரன் ஹேஸ்டிங்ஸால் உருவாக்கப்பட்டது.
3. பெங்கால் வங்கி - 1784 - 1791."
Q34. எந்த வகை காகித நாணயம் ரிசர்வ் வங்கியால் முதலில் வெளியிடப்பட்ட து?
1938-ல் ஜார்ஜ் VI அரசர் உருவம் பதிக்கப்பட்ட ரூ.5/- காகித நாணயம். அதற்குப் பிறகு 10, 100, 1000, 5000, 10000 காகித நாணயங்கள் (ரூபாய் நோட்டுகள்)ஜூன் 1938ல் வெளியிட்ட து.
Q35. சுதந்திர இந்தியாவால் வெளியிடப்பட்ட முதல் காகித நாணயம் எது?
ரூ 1/- இந்திய சின்னமான "சிங்கத்தூண்" பதிக்கப்பட்ட து.
Q36. இந்திய காகித நாணயங்களில் பாதுகாப்பு இழை (Security Thread) எப்போது இணைக்கப்பட்ட து?
இரண்டாம் உலகப்போர் ( 1942-45) முடிந்தவுடன். காரணம், ஜப்பானியர்கள் மிக திறமையாகவும், நேர்த்தியாகவும் இந்திய காகித நாணயங்களை கள்ள நாணயமாக அச்சடித்து வெளியிட்டதால்.
Q37. 5000, 10000 ரூபாய் காகித நாணயங்கள் எப்போது புழக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டது? (Demonetisation)
1978 ல்.
Q38. மகாத்மா காந்தி உருவம் பதித்த காகித நாணயத் தொடர் (Paper Currency Series) எப்போது நம் நாட்டில் வெளியிடப்பட்ட து?
1996 ல்
Q39. காகித நாணயங்கள் வெளியிடுவதில் நடைமுறை பழக்கம் என்ன?
ரூ. 1/- மட்டும் நிதி அமைச்சகத்தால், காரியதரிசி (Secretary) கையொப்பத்தில் வெளியிடப்பட்ட து. (தற்சமயம் இல்லை). இதர காகித நாணயங்கள் 2,5,10, 20,50, 100, 500, 1000 ஆகியவை ரிசர்வ் வங்கியால் கவர்னர் கையொப்பத்தில் வெளியிடப்படுகிறது.
Q40. காகித நாணயங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதி என்ன?
"I Promise to pay the bearer the sum of ………… (value) Rupees" - "இதை வைத்திருக்கும் நபருக்கு, ரூபாய் .................(மதிப்பு) அளிப்பதாக உறுதி அளிக்கிறேன்.
Q41. காகித நாணயங்களில் அதன் மதிப்பு எத்தனை மொழிகளில் (ஆங்கிலம் நீங்கலாக) அச்சடிக்கப்பட்டிருக்கும்?
பதினைந்து.
Q42. நம் நாட்டில் அரசாங்க பாதுகாப்பு அச்சகங்கள் இயங்கும் இடங்கள் யாவை?
மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், நொய்டா, நாசிக், மைசூர், திவாஸ் மற்றும் சப்போனி (மே.வ).
Q43. "நாணய மதிப்பு பத்திரங்கள்" "Cash Value Papers" என்பது என்ன?
அரசாங்கத்தால் வெளியிடப்படும் நாணய மதிப்பு உள்ள பத்திரங்கள். உதாரணமாக, தபால் தலைகள், தபால் அஞ்சல் வழி தொடர்பு பொருட்கள் (கார்டு, இன்லேண்டு, கவர்கள், மற்றும் ரெவின்யூ ஸ்டாம்ப், பத்திரப்பதிவு முத்திரைத் தாள்கள் போன்றவை.
Q44. உலோக நாணயங்களுக்கு என்னென்ன உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன?
(1). நிக்கல்
(2). கப்ரோ நிக்கல்
(3). அலுமினியம் ப்ரான்ஸ்
(4). அலுமினியம் மாக்னீசியம்
(5). ப்ரான்ஸ்
(6). நிக்கல் ப்ராஸ்
(7). ஃபெரிட்டிக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்."
Q45. Demonetisation -நாணய சுழற்சி நிறுத்தல் என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட மதிப்புள்ள நாணயத்தை அதன் பொது சுழற்சியிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுதல். இந்த நடவடிக்கை பொதுவாக திடீரெனவும், உயர் மதிப்புள்ள நாணயத்தின் மீதும் எடுக்கப்படும். பொதுவாக இந்த நடவடிக்கை, நாட்டில் சுழலும் அல்லது பதுக்கப்பட்டுள்ள கணக்கில் வராத கருப்பு பணத்தை வெளி கொண்டு வருவதற்கே எடுக்கப்படும்.
Q46. Demonetisation -நாணய சுழற்சி நிறுத்தல் நம் நாட்டில் எப்போது நடந்துள்ளது?
1. 12.1.1946 - ஆங்கிலேயர்கள் காலத்தில் , 1000,5000 மற்றும் 10000 ரூபாய் காகித நாணயங்கள் சுழற்சியிலிருந்து நீக்கப்பட்டன. அப்போது அதற்குக் காரணமாயிருந்தது ஜப்பானியர்களால் கள்ள நோட்டுகள் சுழற்சியில் விடப்பட்டதால்.
2. 16.1.1978 -  ஜனதா அரசாங்கம் -- பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் (குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி) காலத்தில் - 1000, 5000, 10000 காகித நாணயங்கள், கணக்கில் வராத பணத்தை வெளி கொண்டு வருவதற்காக, சுழற்சியிலிருந்து நிறுத்தப்பட்டன.
3. 2014 - வருடம் அச்சடிக்கப்படாமல் 2005க்கு முன் புழக்கத்தில் விடப்பட்ட 500 ரூபாய் காகித நாணயங்களையும் சுழற்சியிலிருந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையும் கள்ள நோட்டு சுழற்சியின் எதிரொலி. 
4. 8.11.2017 -- தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் -- பிரதம மந்திரி நரேந்திர மோடி -- (குடியரசுத் தலைவர் ப்ரணாப் முகர்ஜி)  தலைமையிலான அரசாங்கம், கள்ள நோட்டு, கருப்புப் பணம் மற்றும் தீவிரவாத செயல்களை ஒடுக்கும் நடவடிக்கையாக ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகளை சுழற்சியிலிருந்து நிறுத்தியது. 
5. இதைத் தவிர்த்து, 1,2,3,5,10,20,25 பைசா நாணயங்கள் அவற்றின் பயனற்ற தன்மையால் சுழற்சியிலிருந்து நிறுத்தப்பட்டன. 50 பைசா நாணயமும் மெல்ல மெல்ல இந்த நிலையை அடைந்து வருகிறது. 
Q47. "நாணய மதிப்பு குறைத்தல்" "DEVALUATION" என்பது என்ன?
நம் நாட்டின் நாணயத்தை இதர நாட்டு நாணயத்துடன், சர்வதேச நாணய மதிப்பீட்டு கொள்கையின் அடிப்படையில் ஒப்பிட்டு, மதிப்பை குறைத்துக் கொள்ளுதல். இது ஒரு பொருளாதார நடவடிக்கை.
Q48. நம் நாட்டில் "நாணய மதிப்பு குறைத்தல்" (DEVALUATION) எப்போது நடந்துள்ளது?
1. ஜூன் 1949 : நம் நாடு, சர்வதேச நாணய நிதியத்துடன் - INTERNATIONAL MONETARY FUND -ல் சேர்ந்த போது, அதனால் நிர்ணயிக்கப்பட்ட நாணய தர (Standards) விதிகளுக்கு கட்டுப்படும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட து. இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 30.5% குறைத்துக் கொள்ளப்பட்ட து. அப்போதைய நிதி அமைச்சர் டாக்டர் ஜான் மத்தையாஸ்.
2. ஜூன் 1996 : சச்சீந்திர சவுத்ரி நிதி அமைச்சராக இருந்த போது.
3. 1.7.1991, 3.7.1991 : டாக்டர் மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த போது.
Q49. மத்திய நிதி நிலை அறிக்கை பொதுவாக எப்போது பாராளுமன்றத்தில் எப்போது சமர்ப்பிக்கப்படுகிறது?
பொதுவாக, பிப்ரவரி மாத கடைசி வேலை நாள் மாலை 5 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இது ஒரு பழக்கம் மட்டுமே. எந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதல்ல. இருப்பினும் சில அரசியல் காரணங்களால் இந்த வழக்கத்திலிருந்து மாறக்கூடிய வாய்ப்பு உண்டு. உதாரணமாக, 2009-10 நிதி நிலை அறிக்கை, அரசியல் காரணங்களால், 2009 - ஜூலை மாதம் தான் சமர்ப்பிக்கப்பட்ட து. இவ்வாறான நிலையில் "DEMANDS FOR GRANTS" அதாவது "மானியக் கோரிக்கைகள்" என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு அத்தியாவசிய செலவினங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
Q50. எந்த நிதி அமைச்சர், முதன் முதலாக மாலை 5 மணி நிதி நிலை அறிக்கை தாக்கலில் இருந்து மாறுபட்டார்?
யஷ்வந்த் சின்ஹா - BJP - 1999 - 2000 நிதி அறிக்கையை காலைப்பணி நேரத்திலேயே சமர்ப்பித்தார்.
Q51. மத்திய நிதி நிலை அறிக்கை எங்கு அச்சடிக்கப்படுகிறது?
பாராளுமன்றத்தின் வடக்கு பகுதியின் கீழ் தளத்தில் அமைந்துள்ள அரசாங்க அச்சகத்திலேயே அச்சிடப்படுகிறது.
Q52. தன் பிறந்த நாளில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த ஒரே நிதி அமைச்சர்?
மொரார்ஜி தேசாய் - 29 பிப்ரவரி (அவர் பிறந்த நாள்) 1964, 1968.
Q53. இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?
ஷண்முகம் செட்டி - 1947 - 1949. இதற்கு முன்பாக அவர் திருவாங்கூர் (திருவனந்தபுரம்) சமஸ்தான திவானாக ( நிதி அமைச்சர்) பணி ஆற்றியவர்.
Q54. மத்திய நிதி அமைச்சர்கள் இது வரை
வ.எண் பெயர் முதல் வரை
1 R.K. ஷண்முகம் செட்டி 15.8.1947 1949
2 ஜான் மத்தாய் 1949 1950
3 C.D. தேஷ்முக் 1950 1951
4 T.T. கிருஷ்ணமாச்சாரி 1951 13.2.1958
5 ஜவஹர்லால் நேரு 13.2.1958 13.3.1958
6 மொரார்ஜி தேசாய் 13.3.1958 29.8.1963
7 T.T.கிருஷ்ணமாச்சாரி 29.8.1963 1965
8 சசீந்திர சவுத்ரி 1965 13.3.1967
9 மொரார்ஜி தேசாய் 13.3.1967 16.7.1969
10 இந்திரா காந்தி 1970 1971
11 யஷ்வந்த்ராவ் சவான் 1971 1975
12 C. சுப்ரமணியன் 1975 1977
13 ஹரிபாய் M. படேல் 24.3.1977 24.1.1979
14 சரண் சிங் 24.1.1979 28.7.1979
15 ஹேம்வதி நந்தன் பகுகுணா 28.7.1979 14.1.1980
16 R. வெங்கட்ராமன் 14.1.1980 15.1.1982
17 பிரணாப் முகர்ஜி 15.1.1982 31.12.1984
18 V.P. சிங் 31.12.1984 24.1.1987
19 ராஜீவ் காந்தி 24.1.1987 25.7.1987
20 N.D. திவாரி 25.7.1987 25.6.1988
21 சங்கர் ராவ் சவான் 25.6.1988 2.12.1989
22 மது தண்டவதே 2.12.1989 10.11.1990
23 யஷ்வந்த் சின்ஹா 10.11.1990 21.6.1991
24 Dr. மன்மோகன் சிங் 21.6.1991 16.5.1996
25 ஜஸ்வந்த் சிங் 16.5.1996 1.6.1996
26 P. சிதம்பரம் 1.6.1996 21.4.1997
27 I.K. குஜ்ரால் 21.4.1997 1.5.1997
28 P. சிதம்பரம் 1.5.1997 19.3.1998
29 யஷ்வந்த் சின்ஹா 19.3.1998 1.7.2002
30 ஜஸ்வந்த் சிங் 1.7.2002 22.5.2004
31 P. சிதம்பரம் 22.5.2004 30.11.2008
32 Dr.மன்மோகன் சிங் 30.11.2008 21.1.2009
33 பிரணாப் முகர்ஜி 21.1.2009 26.6.2012
34 Dr. மன்மோகன் சிங் 26.6.2012 31.7.2012
35 P. சிதம்பரம் 31.7.2012 26.5.2014
36 அருண் ஜெட்லி 26.5.2014 ..............
       
       
       
       
       

Q55. நிதி அமைச்சர்களுள் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றியவர்கள் யார்?
1. C.D. தேஷ்முக்,
2. Dr. மன்மோகன் சிங்
Q56. நிதி அமைச்சர்களுள் இரண்டு அல்லது அதற்கு மேல், அப்பதவியை வகித்தவர்கள் யார்?
(1). T.T.கிருஷ்ணமாச்சாரி - 2 முறை;
(2). மொரார்ஜி தேசாய் - 2;
(3). பிரணாப் முகர்ஜி - 2;
(4). யஷ்வந்த் சின்ஹா - 2;
(5). Dr. மன்மோகன் சிங் - 3;
(6). ஜஸ்வந்த் சிங் - 2;
(7). ப. சிதம்பரம் - 4.
Q57. நம் நாட்டின் ஒரே பெண் நிதி அமைச்சர் யார்?
இந்திராகாந்தி 1970-71.
Q58. ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து நிதி அமைச்சரான முதல் நபர் யார்?
C.D. தேஷ்முக்
Q59. மாநிலங்களவை உறுப்பினராக இருந்து நிதி அமைச்சரான முதல் நபர்?
பிரணாப் முகர்ஜி. அடுத்தது Dr. மன்மோகன் சிங்
Q60. தொடர்ச்சியாக அதிக காலம் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் யார்?
C.D. தேஷ்முக் 7 வருடங்கள் 1950 - 1951.
Q61. நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரிவுகள் யாவை?
(1). பொருளாதார விவகாரம் - Department of Economic Affairs;
(2). செலவினங்கள் - Department of Expenditure;
(3). வரவினங்கள் - Department of Revenue;
(4). நிதி சேவைகள் - Department of Financial Services;
(5). முதலீடுகளை திரும்ப ப் பெறுதல் - Department of Disinvestments. 
Q62. Disinvestment என்பது என்ன?
ஒரு நிறுவனத்தில் உள்ள மூலதனத்தை குறைத்துக் கொள்ளுதல் அல்லது முழுவதுமாக திரும்பப் பெறுதல்.
Q63. நிதி அமைச்சகத்தில் நேரடி அதிகாரிகளாக நியமிக்கப்படுபவர் யார்?
UPSC - மத்திய பொது தேர்வாணையக் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். அவர்களின் தர வரிசைப்படி, துறை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவ்வாறான ஒதுக்கீட்டில் INDIAN REVENUE SERVICE மற்றும் INDIAN ECONOMIC SERVICE துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுபவர்கள், இந்த அமைச்சக பணியில் நேரடி அதிகாரிகளாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.
Q64. வருமான வரித்துறை - INCOME TAX - நிதி அமைச்சகத்தின் எந்த பிரிவின் கீழ் இயங்குகிறது?
வரவினங்கள் துறை - Department of Revenue.
Q65. வருமான வரி சட்டம் முதல் முறையாக எப்போது அமலுக்கு வந்தது?
வருமான வரி சட்டம் 1961. 1.4.1962 முதல் அமலுக்கு வந்தது.
Q66. 2015-2016 நிலைப்படி, வருமான வரி முழு விலக்கின், வருமான வரம்பு என்ன?
மூத்த குடிமகனகள் (60+ வயது) - ரூ. 3,00,000.
மற்றவர்களுக்கு -- ரூ.2,50,000.
Q67. 2015-2016 நிலைப்படி, அதிகபட்ச வருமான வரி விகிதம் என்ன?
30% வருமானம் - 10 லட்சத்துக்கு மேல்.
Q68. எந்த வருடம் தன்னிச்சையாக வருமானம் வெளிப்படுத்துதல் (Voluntary Disclosure of income ) முறை கொண்டுவரப்பட்ட து?
1965, 1975. இருமுறை.
Q69. எப்போது, நிரந்தர கணக்கு எண் - PERMANENT ACCOUNT NUMBER - அறிமுகப்படுத்தப் பட்டது?
1972. 1994 முதல் புதிய வழி முறைகள் வகுக்கப்பட்டன.
Q70. DIRECT TAX - நேரடி வரி என்பது என்ன?
ஒரு தனி மனிதனோ அல்லது நிறுவனமோ, ஒரு குறிப்பிட்ட வரியை, வரி நிர்ணயித்த துறைக்கோ, அதிகாரிக்கோ, நேரடியாக செலுத்துவது. உதாரணம் - சொத்து வரி, வருமான வரி - போன்றவை.
Q71. INDIRECT TAX - மறைமுக அரி என்பது என்ன?
அரசாங்கத்துக்கு சேர வேண்டிய வரியை ஒரு இடைப்பட்டவர் (உதாரணம் - சில்லறை வியாபாரி) வசூல் செய்து பிறகு அரசாங்கத்துக்கு செலுத்துவது (உதாரணம் - விற்பனை வரி, மதிப்பு கூடுதல் வரி (VAT) போன்றவை.
Q72. CBDT - என்பது எதைக் குறிக்கிறது?
CENTRAL BOARD OF DIRECT - மத்திய நேரடி வரி குழு.
Q73. தேசிய நேரடி வரி பயிற்சி நிறுவனம் எங்கு உள்ளது? (National Academy of Direct Taxes)
நாக்பூர் - மகாராஷ்டிரா. 1951ல் ஆரம்பிக்கப்பட்ட து. இதற்கு முன்பு இது Indian Revenue Service Staff College என அழைக்கப்பட்டது.
Q74. வரிகள் சம்பந்தப்பட்ட சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட சில குழுக்கள் எவை?
(1).   வரதாச்சாரி கமிஷன் 1951;
(2).   ஜான் மத்தாய் கமிஷன் 1954;
(3).   சோக்ஸி கமிட்டி 1976;
(4).   L.K. ஜா கமிட்டி - 1987;
(5).   கேல்கர் கமிட்டி - 2002 - வரி விகித சீர்திருத்தம்;
(6).   M.C. ஜோஷி கமிட்டி - கருப்பு பணம்;
(7).   பூரேலால் கமிட்டி - வாகன வரி;
(8).   G.V. ராமகிருஷ்ணா கமிட்டி - முதலீடு திரும்ப பெறுதல்;
(9).   S. டெண்டுல்கர் கமிட்டி - வறுமைக் கோடு;
(10). Y.B.ரெட்டி கமிட்டி - வருமான வரி தள்ளுபடி;
(11). ராஜா செல்லைய்யா கமிட்டி - வரிகள் சீர்திருத்தம்;
(12). அசிம் தாஸ் குப்தா - பொருள் மற்றும் சேவை வரி;
(13). ராஸ் தோகி குழு - சேவை வரி."
Q75. எந்த நாடு மிகச்சிறிய காகித நாணயத்தை வெளியிட்டது?
ஃப்ரான்ஸ்
Q76. எத்தனை இந்திய காகித நாணயங்களில் காந்திஜியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது?
ஏழு - 5,10,20,50,100,500,1000.
Q77. காகித நாணயம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது?
806 AD
Q78. கனடா நாட்டு 2 டாலர் காகித நாணயத்தில் எந்த நாட்டு கொடியின் சின்னம் பதிக்கப்பட்டுள்ளது?
அமெரிக்கா.
Q79. யூரோ - EURO நாணய முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1.1.1999 முதல். ஆனால் சுழற்சிக்கு 1.1.2002 முதலே வந்தது. இன்றைய நிலையில் 19 ஐரோப்பிய நாடுகள் இந்த நாணய முறையை நேரடியாக ஏற்றுக் கொண்டுள்ளது. மீதி நாடுகள் இதை மறைமுக பயன்படுத்துகிறது. இந்த நாணயத்தை ஐரோப்பிய மத்திய வங்கி - European Central Bank, மேலாண்மை செய்கிறது. இந்திய ரூபாயில் சுமார் 72 ரூபாய்க்கு ஒரு யூரோ.
Q80. எந்த ஐரோப்பிய பெரிய நாடு இன்னும் யூரோ நாணய முறையை ஏற்றுக்கொள்ளவில்லை?
இங்கிலாந்து. இதைத் தவிர்த்து, பல்கேரியா, க்ரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், ஹங்கேரி, லித்துவேனியா, போலந்து, ரொமானியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் இந்த நாணய முறையை நேரடியாக தங்கள் நாட்டு நாணயமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
Q81. 1970க்கு பின் ஒமான் மற்றும் கத்தார் நாட்டு நாணயம் "ரியால்" . அதற்கு முன் அந்த நாடுகளின் நாணயம் என்ன?
இந்திய ரூபாய்க்கு சமமான கல்ஃப் ரூபாய் - GULF RUPEE. 1970 வரை இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டது.
Q82. உலகிலேயே மிக அதிகமாக புழக்கத்தில் இருக்கும் நாணயத்தின் பெயர் என்ன?
டாலர்.
Q83. இந்திய அரசர்களுள் யார் முதலில் நாணயம் அச்சிட்டு வெளியிட்டார்?
ஷெர்ஷா சூரி - தேவ நகரி எழுத்தில்.
Q84. அமெரிக்க நாணயம் டாலர் 1 மற்றும் 100ல் யாருடைய உருவம் பதிக்கப்பட்டுள்ளது?
டாலர் 1 - ஜார்ஜ் வாஷிங்டன்; டாலர் 100 - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.
Q85. அமெரிக்காவில் ஒரு டாலர் காகித நாணயம் துரதிர்ஷ்டமானது என கருதப்பட காரணம்?
எண் 13 பொதுவாக ஒரு துரதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. அதே நிலையில், அமெரிக்காவின் ஒரு டாலர் காகித நாணயத்தில் 13 நட்சத்திரம், 13 பட்டைகள், 13 படிகள், 13 அம்புகள் மற்றும் 13 இலைகள் கொண்ட ஆலிவ் கிளை இருப்பதால் இவ்வாறு கருதப்படுகிறது.
Q86. INTAGLIO - அச்சடிக்கும் முறை என்பது ....
கை உணர்வினால் தெரிந்து கொள்ளும் வகையில் மட்டத்திலிருந்து சற்று உயர்த்தி அச்சடிப்பது.
Q87. நம் நாட்டின் புதிய நாணயக்குறியீடுடன் - கொண்ட நாணயம் முதலில் எப்போது வெளியிடப்பட்டது?
8.7.2011.
Q88. நாடுகளும் நாணயமும்-COUNTRIES & CURRENCY
வ.எண் நாடு நாணயம்
1 ஆஃப்கானிஸ்தான் அஃப்கானி - AFGHANI
2 அர்ஜெண்டினா ஆஸ்ட் ரால் - AUSTRAL
3 பனாமா பல்பாவ் - BALBAO
4 எத்தியோப்பியா பிர் - BIRR
5 பொலிவியா பொலிவார் - BOLIVAR
6 ப்ரேசில் க்ரூஸாடோ - CRUZADO
7 கோஸ்டரிக்க, எல் சல்வேடார் கோலோன் - COLON
8 அல்ஜீரியா, பஜ்ரைன், ஈராக், ஜோர்டான், லிபியா தினார் - DINAR
9 துனிசியா, சூடான், செர்பியா மாண்டி நீக்ரோ, மேசடோனியா, மொராக்கோ, ஐக்கிய அரபு நாடுகள் திர்ஹாம் - DIRHAM
10 வியட் நாம் டாங் - DONG
11 சாவ் தோம் & பிரின்ஸிபே டோப்ரா - DOBRA
12 அர்மேனியா ட்ராம் - DRAM
13 காம்பியா டலாசி - DALASI
14 ஆன்டிகுவா பர்புடா, ஆஸ்திரேலியா, பெலிஸ், பஹாமாஸ், பார்பேடோஸ்,பொலிவியா, ப்ரூனே, கனடா, டொமினிகா, ஈக்குவடார், ஃபிஜி, க்ரெனாடா, கையானா, ஜமைக்கா, லைபீரியா, மார்ஷல் தீவு, மைக்ரோனேஷியா, மொனேகோ, நமிபியா, நௌரு, நியூசிலாந்து, பாலாவ், சிங்கப்பூர், செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்செண்ட் & தி க்ரெனடைன்ஸ், தைவான், ட்ரினிடாட் & டொபேகோ, துவாலு, அமெரிக்கா, ஜிம்பாப்வே டாலர் - DOLLAR
15 ஆஸ்திரியா, பெல்ஜியம், சைப்ரஸ், எஸ்தோனியா, ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, க்ரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லித்துவேனியா, லக்ஸ்ம்பர்க், மால்டா, நெதர்லாந்து,போர்ச்சுகல், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின் யூரோ - EURO
16 பெனின், பெர்கினோ ஃபாஸோ, புருண்டி, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ குடியரசு, காங்கோ ஜன நாயக குடியரசு கொமோரஸ், ஐவரி கோஸ்ட், டிஜிபௌட்டி, ஈக்குவடேரியல் கினி, கேபோன், கினி, கினி பிஸ்ஸாவ், லிச்சென்ஸ்டீன், மாலி, நிகர், ரவாண்டா, செனெகல், ஸ்விட்சர்லாந்து, டோகோ ஃப்ராங்க் - FRANC
17 ஹங்கேரி ஃபோரின்ட் - FORINT
18 நிக்கரகுவா கோல்ட்கொர்டோபா - GOLD CORDOBA
19 பராகுவே குர்ரானி - GURRANI
20 சுரி நாம் கில்டர் - GUILDER
21 உக்ரேன் ஹ்ரிவ்னியா - HRYVNIA
22 அங்கோலா க்வான்சா - KWANZA
23 க்ரோஷியா க்குணா - KUNA
24 செக்குடியரசு, ஸ்லோவாகியா கொருனா - KORUNA
25 டென்மார்க், நார்வே க்ரோன் - KRONE
26 எஸ்தோனியா க்ரூன் - KROON
27 மாளவி, ஜாம்பியா க்வாச்சா - KWACHA
28 ஐஸ்லாந்து, ஸ்வீடன் க்ரோனா - KRONA
29 லாவோஸ் கிப் - KIP
30 மியான்மர் க்யாட் - KYAT
31 பப்புவா நியூ கினி
கினா - KINA
32 சியரா லியோன் லியோன் - LEONE
33 லித்துவேனியா லிட்டாஸ் - LITAS
34 லாட்வியா லாட் - LAT
35 லெசோத்தா லோடி - LOTI
36 அல்பேனியா லெக் - LEK
37 பல்கேரியா லெவ் - LEV
38 ஜியார்ஜியா லாரி - LARI
39 ஹோண்டுராஸ் லெம்பிரா - LEMPIRA
40 மால்டா, சான் மரினோ, துருக்கி லிரா - LIRA
41 மால்டோவியோ, ருமேனியா லியூ - LEU
42 அஸர்பைஜான், துருக்மெனிஸ்தான் மனத் - MANAT
43 போஸ்னியா & ஹெர்ஸேகோவினா மார்க் - MARK
44 மொஸாம்பிக் மெட்டிகல் - METICAL
45 பூடான் ன்கல்ட்ரம் - NGULTRUM
46 எரிட்ரியா நாஃப்கா - NAFKA
47 இஸ்ரேல் நியூ ஷெகெல் - NEW SHEKEL
48 நைஜீரியா நைரா - NAIRA
49 பெரு நியூ சோல் - NEO SOL
50 மோரிட்டானியா ஊகுயா - OOGUIYA
51 டோங்கா பாங்கா - PA'ANGA
52 அண்டோரா பெஸெட்டா - PESETTA
53 போட்ஸ்வானா புலா - PULA
54 அர்ஜெண்டினா, சிலி, க்யூபா, டொமினிகன் குடியரசு, மெக்சிகோ, உருகுவே பெஸோ - PESO
55 சைப்ரஸ், எகிப்து, லெபனான், பிலிப்பைன்ஸ், சிரியா பௌண்ட் - POUND
56 இங்கிலாந்து பௌண்ட் ஸ்டெர்லிங் - POUND STERLING
57 கௌத்தமாலா க்வெண்ட்சால் - QUENTZAL
58 பெலாரூஸ், ரஷ்யா, தஜிகிஸ்தான் ரபிள் - RUBLE
59 கம்பூச்சியா ரியெல் - RIEL
60 சைனா ரெனிம்பி - RENIMBI
61 கிழக்கு திமோர், இந்தோனேசியா ரூபையா - RUPIAH
62 ப்ரேசில் ரியல் -REAL
63 இரான், ஒமான், கத்தார், சவுதி அரேபியா, யெமென் ரியால் - RIAL
64 மலேசியா ரிங்கிட் - RINGITT
65 மாலத்தீவுகள் ரூஃபியா - RUFIA
66 தென் ஆப்பிரிக்கா ராண்ட் - RAND
67 இந்தியா, மொரிஷியஸ், நேபாளம், பாகிஸ்தான், சிஷெல்லிஸ், ஸ்ரீலங்கா ரூபாய் (ரூப்பி) - RUPEE
68 ஆஸ்திரியா, கென்யா, சொமாலியா, தன்ஸானியா, தாய்லாந்து, உகாண்டா ஷில்லிங் - SHILLING
69 கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் சோம் - SOM
70 ஸ்லோவேனியா தோலார் -TOLAR
71 வங்காள தேசம் டாக்கா - TAKA
72 கஸகிஸ்தான் டெங்கே - TENGE
73 மங்கோலியா டுக்ரிக் - TUGRIK
74 சமோவா தலா - TALA
75 வனுவாட்டு வட்டு - VATU
76 கொரியா (இரண்டும்) வொன் - WON
77 சீனா யுவான் - YUAN
78 ஜப்பான் யென் - YEN
79 போலாந்து ஸ்லாட்டி - ZLOTY
Q89. வங்கிகள் - BANKS ; ஆயுள் காப்பீடு - INSURANCE
Q90. இந்திய ரிசர்வ் வங்கி எந்த சட்டத்தின் கீழ் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
ரிசர்வ் வங்கி தொடங்குவதற்கு காரணமாய் இருந்தது. "ஹில்டன் யங்" குழுவின் 1926 அறிக்கை. இதன் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 இயற்றப்பட்டு, 1.4.1935 முதல் இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட து.
Q91. ரிசர்வ் வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?
மும்பை 1937 முதல். அதற்கு முன்பாக கொல்கத்தா.
Q92. எப்பொது முதல் ரிசர்வ் வங்கி இந்திய மயமானது?
1.1.1949 முதல் - தேசிய மயமாக்கப்பட்ட து.
Q93. ரிசர்வ் வங்கிக்கு எத்தனை மண்டல மற்றும் கிளை அலுவலகங்கள் உள்ளன?
"19 மண்டல அலுவலகங்கள் : அஹமதாபாத், போபால், பெங்களூரு, சந்திகர், சென்னை, டெல்லி, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, நாக்பூர், பாட்னா, திருவன்ந்தபுரம்.
9 கிளை அலுவலகங்கள் : சமானா, டெஹ்ராடூன், காங்க்டாக், கொச்சி, பானாஜி, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், ஷிம்லா, ஸ்ரீ நகர், அகர்தாலா."
Q94. ரிசர்வ் வங்கியின் பயிற்சி நிலையங்கள் எங்குள்ளன?
சென்னை, கொல்கத்தா, நியூ டெல்லி, பேலாப்பூர்(நவி மும்பை).
Q95. ரிசர்வ் வங்கி தலைமயகத்தின் வாசலில் உள்ள உருவச்சிலையின் பெயர் என்ன?
யாக்க்ஷினி - "விவசாயத்தின் மூலம் முன்னேற்றம்" என்பதை குறிப்பதாக.
Q96. ரிசர்வ் வங்கியின் முத்திரையில் உள்ள மரமும் விலங்கும் எது?
பனை மற்றும் புலி
Q97. ரிசர்வ் வங்கியின் முக்கிய பணிகள் யாவை?

(1). மத்திய அரசின் வங்கியாக செயல்படுவது;
(2). நிதி கொள்கைகள் தீட்டுவது;
(3). இந்திய ரூபாயின் மாறுதல் மதிப்பை (Exchange Rate) பராமரிப்பது;
(4). சர்வதேச நிதி அமைப்பில் இந்தியா சார்பில் பிரதி நிதித்துவம்;
(5). வங்கிகளின் நடவடிக்கை சட்ட திட்டங்களை வகுப்பது, கண்காணிப்பது:
(6). வங்கிகளின் நடவடிக்கை சட்ட திட்டங்களை வகுப்பது, கண்காணிப்பது:
(7). புது வங்கிகள் துவங்க அனுமதி அளிப்பது;
(8). தேசிய வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் அளித்தல்- போன்ற நிதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள்.
Q98. ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் யார்?
சர் ஆஸ்போர்ன் அர்கால் ஸ்மித் - 1935 - 1937
Q99. ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் யார்?
C.D. தேஷ்முக் - 1943 - 1949. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து, மத்திய நிதி அமைச்சரான (1950-1957) முதல் இந்தியர்.
Q100. ரிசர்வ் வங்கி கவர்னர்கள் இதுவரை ......
வ.எண் பெயர் முதல் வரை
1 சர் ஆஸ்போர்ன் ஸ்மித் 01.4.1935 30.6.1937
2 ஜேம்ஸ் ப்ரெட்பட் டெய்லர் 1.7.1937 17.2.1943
3 சி.டி. தேஷ்முக் 11.8.1943 30.6.1949
4 பெனெகல் ராமராவ் 1.7.1949 14.1.1957
5 K.G. அம்பே காவ்ன்கர் 14.1.1957 28.2.1957
6 HVR அய்யங்கார் 1.3.1957 28.2.1962
7 P C பட்டாசார்யா 1.3.1962 30.6.1967
8 L K ஜா 1.7.1967 3.5.1970
9 BN அதார்கர் 4.5.1970 15.6.1970
10 S. ஜகன்னாதன் 16.6.1970 19.5.1975
11 N C சென் குப்தா 19.5.1975 19.8.1975
12 K.R. புரி 20.8.1975 2.5.1977
13 M. நரசிம்மன் 3.5.1977 30.11.1977
14 I G படேல் 1.12.1977 15.9.1982
15 டாக்டர்.மன்மோகன்சிங் 16.9.1982 14.1.1985
16 அமிதவ் கோஷ் 15.1.1985 4.2.1985
17 R.N. மல்ஹோத்ரா 4.2.1985 22.12.1990
18 S. வெங்கிட ரமணன் 22.12.1990 21.12.1992
19 C. ரங்கராஜன் 22.12.1992 21.11.1997
20 பிமல் ஜலான் 22.11.1997 6.9.2003
21 Y.V. ரெட்டி 6.9.2003 5.9.2008
22 D. சுப்பாராவ் 5.9.2008 4.9.2013
23 ரகுராம் ராஜன் 4.9.2013 4.9.2016
24. அர்ஜித் பட்டேல்   4.9.2016 ....
       
       
       
       

Q101. அதிக நாட்கள் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர்கள் யார்?
(1). C.D. தேஷ்முக் - 5 வருடம் 323 நாட்கள்;
(2). R.N. மல்ஹோத்ரா - 5 வருடம் 321 நாட்கள்;
(3). பிமல் ஜலான் - 5 வருடம் 288 நாட்கள். "
Q102. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து பிரதம மந்திரியானவர் யார்?
மன் மோகன் சிங்
Q103. இந்தியர்களால் மேலாண்மை செய்யப்பட்டு துவங்கப்பட்ட முதல் வங்கி எது?
அவுத் கமர்ஷியல் வங்கி - Oudh Commercial Bank – 1881.
Q104. இந்தியர்களால் மேலாண்மை செய்யப்பட்டு துவங்கப்பட்ட இரண்டாவது வங்கி எது?
பஞ்சாப் நேஷனல் வங்கி - 1884. இன்றும் இந்த வங்கி லாபகரமாக இயங்கி வருவது குறிப்பிட த்தக்கது.
Q105. இந்திய சுதந்திர போராட்டத்தின் எந்த பகுதி இந்திய வங்கிகள் உருவாகக் காரணமாயிருந்தது?
சுதேசி இயக்கம்.
Q106. இம்பீரியல் வங்கி (Imperial Bank) என்பது என்ன? பிறகு என்னவாக மாறியது?
ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட பாங்க் ஆஃப் பெங்கால் (1806), பாம்பே (1890) மற்றும் மெட்ராஸ்(1843) ஆகிய மூன்று வங்கிகளையும் இணைத்து 1921ல் தொடங்கப்பட்ட து இம்பீரியல் வங்கி (பேரரசு வங்கி). இது 1949 வரை ரிசர்வ் வங்கியாக செயல்பட்ட து. பிறகு தேசிய மயமாக்கம் அடிப்படையில், 1.7.1955 முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India ) வாக செயல்படத்துவங்கியது.
Q107. தேசிய மயமாக்கலுக்கு முன் இயங்கிய அரசு வணிக வங்கி எது?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.
Q108. நம் நாட்டில் தொடங்கப்பட்ட சில முக்கியமான தனியார் வணிக வங்கிகள் எவை?
1. அலஹாபாத் வங்கி: 24.4.1865 - அலஹாபாத்தில் தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தற்சமய தலைமையகம் கொல்கத்தா.
2. பாங்க் ஆஃப் இந்தியா : 7.9.1906. சர் ச்சூன் டேவிட் என்ற பாக்தாத் யூத இனத்தைச் சேர்ந்த இவர், மற்ற இந்திய இனத்தவர்களையும் சேர்த்துக் கொண்டு, கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட து. மும்பையை தலைமையாக கொண்டு இயங்குகிறது.
3. பாங்க் ஆஃப் பரோடா : 20.7.1908 - மஹாராஜா சாயாஜிராவ் கேக்வாட் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த வங்கி வடோடரா (பரோடா) குஜராத் தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.
4. பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா : 1935 - காலே மற்றும் சாத்தே என்ற இரண்டு மராட்டிய முற்போக்குவாதிகளால் தொடங்கப்பட்ட இந்த வங்கி பூனேவை தலைமையாகக் கொண்டு இயங்கி வருகிறது.
5. சென்ட் ரல் பாங்க் ஆஃப் இந்தியா : 21.12.1911 - சர் சொராப்ஜி போச்கன் வாலா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த வங்கி மும்பையை தலைமையாக கொண்டு இயங்கி வருகிறது.
6. கனரா வங்கி : 1906, 1910ல் தொடங்கி, கர்நாடகாவில் இயங்கி வந்த இரு வங்கிகளை இணைத்து 1969ல் கனரா வங்கியாக இயங்க தொடங்கிய இந்த வங்கி, பெங்களூருவைத் தலைமையாகக் கொண்டு இயங்குகிறது.
7. தேனா பாங்க் : 26.5.1938 - தேவ் கரண் நாஞ்ஜி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த வங்கி, மும்பையை தலைமையாகக் கொண்டு இயங்கி வருகிறது.
8. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் : 10.2.1937 - சிதம்பரம் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த வங்கி சென்னையை தலைமையாக கொண்டு இயங்குகிறது.
9. இந்தியன் பேங்க் : 15.8.1907 - வி.கிருஷ்ணசாமி ஐயர் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த வங்கி சென்னையை தலைமையாகக் கொண்டு இயங்குகிறது.
10. பஞ்சாப் நேஷனல் பாங்க் : 19.5.1894 - லாலா லஜ்பத் ராய் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த வங்கி புது டெல்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது.
11. சிண்டிகேட் பாங்க் : 1925 - T.M.A. பாய் மற்றும் வாமன் குட்வா என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி மணிபால் (கர் நாடகம்) தலைமையாகக் கொண்டு இயங்கி வருகிறது.
12. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா : 11.11.1919 - தொடங்கப்பட்ட இந்த வங்கி மகாத்மா காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட து. இதன் தலைமையகம் மும்பை.
13. யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா : 1950ல் துவக்கப்பட்ட இந்த வங்கி கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. கொமில்லா பாங்கிங் கார்ப்பொரேஷன், பெங்கால் சென்ட் ரல் பாங்க், கொமில்லா யூனியன் பாங்க் மற்றும் ஹூக்ளி பாங்க் ஆகியவை இணைந்து இந்த வங்கி உருவானது.
14. யூகோ பேங்க் : 6.1.1943 - கண்ஷ்யாம் தாஸ் பிர்லா அவர்களால் தொடங்கப்பட்ட இந்த வங்கி கொல்கத்தாவை தலைமையாக கொண்டு இயங்குகிறது.
15. விஜயா பாங்க் : 23.10.1931 அன்று அத்தவார் பால கிருஷ்ண செட்டி அவர்களால் தொடங்கப்பட்ட இந்த வங்கி பெங்களூரு தலைமையாக கொண்டுள்ளது.
16. ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் : 19.2.1943 அன்று ராய் பஹதூர் லாலா சோஹன் லால் அவர்களால் லாகூரில் தொடங்கப்பட்ட இந்த வங்கி தற்சமயம் குர்காவ்ன் தலைமையாக கொண்டு இயங்குகிறது.
17. கார்ப்பொரேஷன் பாங்க் : 12.3.1906 அன்று கான் பஹதூர் ஹாஜி அப்துல்லா ஹாஜி காசிம் சாஹேப் பஹதூர் மற்றும் அவருடைய தோழர்களுடன் உருவாக்கப்பட்ட இந்த வங்கி மங்களூரு தலைமையாகக் கொண்டு இயங்குகிறது.
18. ஆந்திரா பாங்க் : 20.11.1923 அன்று போகராஜு பட்டாபி சீதாராமைய்யா அவர்களால் நிறுவப்பட்டு ஹைதராபாத் தலைமையாக கொண்டுள்ளது.
19. பஞ்சாப் & சிந்த் பாங்க் : 24.6.1908ல் பாய் வீர் சிங், சர் சுந்தர் சிங் மஜிதா மற்றும் சர்தார் தர்லோச்சன் சிங் ஆகியோரால் நிறுவப்பட்டு, டெல்லியை தலைமையாக கொண்டு இயங்குகிறது." "
Q109. வங்கிகள் தேசிய மயமாக்கல் முதன்முதலில் எப்போது, யாரால் நடத்தப்பட்டது?
19.7.1969 - இந்திரா காந்தி, பிரதமர்.
Q110. முதல் வங்கிகள் தேசிய மயமாக்கலில் எத்தனை மற்றும் என்னென்ன வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?
19.7.1969 அன்று கீழ்க்கண்ட பதினான்கு வங்கிகள், முதல் கட்டமாக, தேசிய மயமாக்கப்பட்டது.
(1).   அலஹாபாத் பாங்க்
(2).   பாங்க் ஆஃப் இந்தியா
(3).   பாங்க் ஆஃப் பரோடா
(4).   பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா
(5).   சென்ட் ரல் பாங்க் ஆஃப் இந்தியா
(6).   கனரா பாங்க்
(7).   தேனா பாங்க்
(8).   இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்
(9).   இந்தியன் பேங்க்
(10). பஞ்சாப் நேஷனல் பாங்க்
(11). சிண்டிகேட் பாங்க்
(12). யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
(13). யூகோ பாங்க்
(14). யுனைட ட் பாங்க் ஆஃப் இந்தியா. "
Q111. இரண்டாவது வங்கி தேசிய மயமாக்கல் யாருடைய காலத்தில் எப்போது நடைமுறைப்படுத்தப் பட்ட து?
15.4.1980 - பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் கீழ்க்கண்ட ஆறு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.
(1). ஆந்திரா பாங்க்
(2). கார்ப்பொரேஷன் பாங்க்
(3). நியூ பாங்க் ஆஃப் இந்தியா
(4). விஜயா பாங்க்
(5). ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்
(6). பஞ்சாப் & சிந்த் பாங்க்
இவற்றுள் நியூ பாங்க் ஆஃப் இந்தியா, 1993ல் பஞ்சாப் நேஷனல் பாங்குடன் இணைந்த படியால், தற்சமயம் 19 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன.
Q112. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சிறப்பு அம்சம் என்ன?
17000 கிளைகள், 190 அயல் நாட்டு கிளைகள், கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய வங்கி, உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று.
Q113. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் உப வங்கிகள் (இணை - Subsidiaries) எவை?

(1). ஸ்டேட் பாங்க் ஆஃப் பிக்கானிர் & ஜெய்ப்பூர் 1966.
(2). ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் - 1940
(3). ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் - 1913
(4). ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தோர் - 1920
(5). ஸ்டேட் பாங்க் ஆஃப் பட்டியாலா - 1917
(6). ஸ்டேட் பாங்க் ஆஃப் சௌராஷ்டிரா - 1902
(7). ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் - 1945.
இவை அனைத்தும் 1.1.1960 முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் உப வங்கிகளாக இயங்குகின்றன. 

குறிப்பு:   15.2.2017ல் மத்திய அரசாங்கம் எடுத்த முடிவின் படி, இந்த வங்கிகள் அனைத்தும் 1.4.2017  முதல் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டுவிட்டன. 

Q114. தேசிய வங்கிகளுள் எந்த வங்கியின் நிறுவன நாள் (Foundation Day) சுதந்திர தினத்தன்று அனுசரிக்கப்படுகிறது?
15 ஆகஸ்ட், இந்தியன் வங்கி.
Q115. தேசிய வங்கிகளுள் எந்த வங்கி மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்ட து?
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, 1920
Q116. SCHEDULED BANKS - வரையறுக்கப்பட்ட அல்லது திட்டமிடப்பட்ட வங்கிகள் என்பது என்ன?
தனியார் துறையில், ரிசர்வ் வங்கியின் அதிகாரம் பெற்று, (தேசிய மயமாக்கப்படாத) இயங்கும் வங்கிகள். இவை ரிசர்வ் வங்கி சட்டம் 1934ன் இரண்டாவது அட்டவணையில் (Second Schedule of RBI ACT 1934) கொடுக்கப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டு, ரிசர்வ் வங்கியில் தேவையான அளவு முதலீட்டு முன் தொகை (Paid up Capital) செலுத்தி இயங்கும் வங்கிகள்.
Q117. நம் நாட்டில் இயங்கும் வரையறுக்கப்பட்ட வங்கிகள் (SCHEDULED BANKS) யாவை?
1. ஆக்ஸிஸ் பாங்க்: AXIS BANK : 1994ல் UTI (Unit Trust of India)வங்கியாக UTI, LIC மற்றும் இதர காப்பீட்டு (Insurance) நிறுவனங்கள் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட து. தலைமையகம் - மும்பை.
2. கேத்தலிக் சிரியன் பாங்க் : 1.1.1921 அன்று தொடங்கப்பட்டு திருச்சூர் (கேரளா) தலைமையாக கொண்டு இயங்குகிறது.
3. ஃபெடரல் பாங்க்: FEDERAL BANK : 1931ல் நெடும்புரம், திருவல்லா, திருவனந்தபுரம் என்ற இட த்தில் துவங்கப்பட்டு, அலுவா, கொச்சியை தலைமையாக கொண்டு இயங்குகிறது.
4. தனலக்ஷ்மி பாங்க் : 1927ல் துவங்கப்பட்ட இந்த வங்கி, திருச்சூர் (கேரளா) தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது.
5. HDFC பாங்க் : ஆகஸ்ட் 1994ல் தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் மும்பை.
6. ICICI பாங்க் : 1994ல் தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் மும்பை.
7. இண்டஸ் & இண்ட் பாங்க்: INDUS & IND BANK : ஏப்ரல் 1994ல் தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் மும்பையில் உள்ளது.
8. வைஸ்யா பாங்க்: ING VYSYA BANK : நெதர்லாந்தின் ING குழுமத்துடன் வைஸ்யா பாங்க் இணைந்து 2002ல் தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது.
9. ஜம்மு & காஷ்மீர் பாங்க் : 1.10.1938ல் தொடங்கப்பட்ட இந்த வங்கி ஸ்ரீ நகரை தலைமையாகக் கொண்டு இயங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடையது.
10. கர்நாடகா பாங்க் : 1924ல் தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் மங்களூரு.
11. கரூர் வைஸ்யா பாங்க் : 1916ல் துவங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் கரூர்.
12. கோட்டக் மஹிந்திரா பாங்க் : 1985ல் தொடங்கப்பட்டு மும்பையை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.
13. சௌத் இந்தியன் பாங்க் : 1929ல் தொடங்கப்பட்டு திருச்சூர் (கேரளா) தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது.
14. யெஸ் பாங்க் - YES BANK : 2004ல் துவங்கப்பட்டு மும்பையை தலைமையகமாக க் கொண்டு இயங்குகிறது.
15.IDFC BANK: அக்டோபர் 2015ல் தொடங்கப்பட்ட வங்கி. மும்பை தலைநகரம். "
Q118. நம் நாட்டில் செயல்படும் வெளி நாட்டு வங்கிகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
1.   ABN ஆம்ரோ பாங்க், நெதர்லாந்து: 1991ல் இந்தியாவில் தொடங்கியது.
2.   அபுதாபி கமர்ஷியல் பாங்க்: 1985 முதல் நம் நாட்டில் இயங்குகிறது.
3.   அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாங்க்.
4.   BNP பரிபாஸ் பாங்க்
5.   சிட்டி பாங்கி
6.   டச்சு பாங்க்
7.   HSBC பாங்க்
8.   ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பாங்க்
9.   பாங்க் ஆஃப் சிலோன்
10. பாங்க் ஆஃப் பஹ்ரைன் & குவைத்
11. பாங்க் ஆஃப் அமெரிக்கா
12. பாங்க் ஆஃப் டோக்யோ"
Q119. வியாபார ரீதியாக அல்லாமல், சில குறிப்பிட்ட செயல்களுக்காக இயங்கும் வங்கிகள் யாவை?
1. எக்ஸிம் பாங்க் - EXIM BANK : ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சட்டம், 1981ன் கீழ், 1922ல் துவங்கப்பட்ட இந்த வங்கி, ஏற்றுமதி, இறக்குமதி தேவைகளை பூர்த்தி செய்ய நிதிக் கடன் உதவி அளித்து வருகிறது. இதன் தலைமையகம் மும்பை.
2. NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT - நபார்ட் - : B. சிவராமன் குழுவின் பரிந்துரையின் பேரில் ஒரு பிரத்தியேக 1981 சட்ட்த்தின் கீழ் 12.7.1982 அன்று துவங்கப்பட்டு, மும்பை தலைமையகமாக க் கொண்டு இயங்கும் இந்த வங்கி, விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. கிராமப்புறங்களில் இயங்கும் கூட்டுறவு வேளாண் வங்கிகள் மூலம் கடன் உதவிகள் அளித்து வருகிறது.
3. IDBI பாங்க் - INDUSTRIAL DEVELOPMENT BANK OF INDIA : தொழிற்துறை முன்னேற்றத்துக்காக, ஒரு பிரத்தியேக சட்ட த்தின் கீழ் 1964ல் துவங்கப்பட்ட இந்த வங்கி, தற்சமயம் வர்த்தக ரீதியாகவும் பெரிய அளவில் இயங்கி வருகிறாது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.
4.பாரதீய மஹிலா பாங்க் - BHARATIYA MAHILA BANK : 19.11.2013 அன்று துவங்கப்பட்ட இந்த வங்கி முழுவதுமாக பெண்களால், பெண்களின் முன்னேற்றத்துக்கு துவங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் புது டெல்லி.
5. பந்தன் பாங்க் - BANDHAN BANK : 23.8.15 - கொல்கத்தா - சிறிய அளவு பொருளுதவி வங்கி. "
Q120. பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு துவங்கப்பட்ட வங்கி எது?
பாரதீய மஹிலா பாங்க் - BHARATIYA MAHILA BANK : 19.11.2013
Q121. நம் நாட்டில் ATM - உடனடி பணம் எடுப்பு இயந்திர சேவையை துவக்கிய வங்கி எது?
HSBC
Q122. REPO RATE - ரெப்போ விகிதம் என்பது என்ன?
ரிசர்வ் வங்கியால் மற்ற வங்கிகளுக்கு (தேசிய) அளிக்கப்படும் கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம்.
Q123. வங்கி சீர்திருத்தங்கள் பற்றி அறிக்கை அளித்த முக்கியமான குழு எது?
நரசிம்மன் குழு - 1991 மற்றும் 1998ல் இரண்டு அறிக்கைகள் சமர்ப்பித்தது.
Q124. ஸ்டேட் பாங்க் உடன் ஏழு இணை வங்கிகள், எதன் அடிப்படையில் சேர்க்கப்பட்ட து?

மெக்கின்ஸி McKINSEY REPORT  ன் பரிந்துரையின் கீழ் பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் தன்னிச்சையாக இயங்கி வந்தன.  1.4.2017 முதல் முழுமையாக        பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டு விட்டன. 

Q125. இந்திய அரசாங்கம் எந்த ஆண்டு எதற்காக, யாரிடம் தன்னிடம் இருந்த தங்க கையிருப்பை அடமானம் வைத்தது?
1991ல் நிதி நெருக்கடியால் வெளி நாட்டு பண பட்டுவாடா தடைபட்ட தால், பாங்க் ஆஃப் இங்கிலாந்திடம் அடமானம் வைத்த து.
Q126. நம் நாட்டில் ஆயுள் காப்பீடு - LIFE INSURANCE எவ்வாறு தொடங்கியது?
1818ல், இந்த வணிகம் ஆங்கிலேய விதவைகளின் வாழ்வாதாரத்திற்காக தொடங்கப்பட்ட து.
Q127. நம் நாட்டில் தொடங்கப்பட்ட முதல் காப்பீட்டு கழகங்கள் யாவை?
1. பாம்பே ம்யூச்சுவல் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சொஸைட்டி - Bombay Mutual Life Insurance Society - 1870
2. ஓரியண்டல் அஷ்ஷுயூரன்ஸ் கம்பெனி லிமிடெட் - Oriental Assurance Co. Ltd., - 1880
Q128. நம் நாட்டில் பொது காப்பீடு - General Insurance வணிகம் எப்போது துவங்கியது?
1850 ல் ஆங்கிலேயர்களின் ட்ரைடான் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியால் துவங்கப்பட்டது.
Q129. நம் நாட்டில் காப்பீடு சட்டம் - Insurance Act எப்போது கொண்டுவரப்பட்ட து?
1938ல். இதற்கு முன்னால் 1912, 1918களில் கொண்டு வரப்பட்ட சட்டங்களின் மாறுதல்களுடன் கூடிய தொகுப்பு.
Q130. ஆயுள் காப்பீடு எப்போது தேசிய மயமாக்கப்பட்ட து?
1956. தேசிய மயமாக்கப்பட்ட போது சுமார் 240 ஆயுள் காப்பீடு கழகங்கள் இயங்கி வந்தன. அவைகளை இணைத்து இந்திய ஆயுள்காப்பீட்டுக்கழகம் - Life Insurance Corporation of India - 1.9.1956 முதல் உருவாக்கப்பட்ட து.
Q131. பொது காப்பீடு - GENERAL INSURANCE எப்போது தேசிய மயம் ஆக்கப்பட்ட து?
1972. பொது காப்பீடு தேசிய மயமாக்கல் சட்டம் 1972ன் படி பொது காப்பீடு 1.1.1973 முதல் தேசிய மயமாக்கப்பட்ட து. பொது காப்பீட்டுக் கழகம் (General Insurance Company ) கீழ்க்கண்ட துணை நிறுவனங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட து.
1. நேஷனல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி
2. நியூ இந்தியா இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி
3. ஓரியண்டல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி
4. யுனைடெட் இந்தியா இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி"
Q132. காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்கள் எப்போது அனுமதிக்கப்பட்ட து?
2000 - 2001
Q133. காப்பீட்டுத்துறையில் 2015 நிலையில் தனியார் பங்கு எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
49%
Q134. தனியார் துறையில் இயங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் எவை?
1.   SBI Life Insurance
2.   PNB Metlife Insurance
3.   ICICI – Prudential
4.   Bajaj Allianz
5.   Max Life
6.   Sahara Life
7.   Tata Life
8.   HDFC Life
9.   Birla Sun Life
10. Kotak Life
11.  India First Life
12.  Ariva Life
13.  Reliance Life
14.  Exide Life
15.  Shriram Life
16.  Bharti AXA Life
17.  Future General Life
18.  IDBI Federal Life
19.  AEGON Religare Life
20.  Canara HSBC Oriental
21.  Edelweiss Tokio Life "
Q135. எந்த குழுவின் பரிந்துரை மூலம் காப்பீடு துறையில் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன?
R.N. மல்ஹோத்ரா சீர்திருத்தக்குழு.
Q136. காப்பீட்டுத் துறை சீராக செயல்படவும் கண்காணிப்பு இருக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு எது?
IRDA – INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY - காப்பீடு சீர் மற்றும் அபிவிருத்தி அதிகார அமைப்பு. 1999ல் IRDA சட்டத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பில், ஒரு தலைவர், மூன்று ஆயுட்கால உறுப்பினர்கள், நான்கு உறுப்பினர்களை (தற்காலிக) கொண்டது. இதன் தலைமையகம் ஹைதராபாத்.
Q137. பங்கு சந்தை - STOCK EXCHANGE:
Q138. பங்கு SHARE/STOCK என்பது என்ன?
ஒரு நிறுவனத்தை நடத்த தேவையான மூலதனத்தை, பொது மக்களிடமிருந்து பொது சந்தையில், ஒரு பங்கின் விலை இவ்வளவு என்று நிர்ணயம் செய்து விற்பனை மூலம் திரட்டுவது.
Q139. பங்கு சந்தை என்பது (STOCK EXCHANGE) என்ன?
ஒரு நிறுவனத்தின் பங்கின் மதிப்பு அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுத்து வளர்ச்சியோ வீழ்ச்சியோ அடையும். அந்த நிலையை கண்காணித்து, லாபத்திற்கோ அல்லது அதிக நஷ்டம் ஏற்படாமல் இருக்கவோ, பங்குகளை விற்பது வழக்கம். அவ்வாறு விற்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நிறுவனமே பங்குச் சந்தை - STOCK EXCHANGE.
Q140. உலகிலேயே மிகப் பழமையான பங்குச்சந்தை எது?
ஆம்ஸ்டெர்டாம், நெதர்லாந்து. 1602ல் ஆரம்பிக்கப்பட்டது. இங்குதான் உலகில் முதல்முறையாக டச்சு கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய பங்குகளை பொது மக்களுக்கு விற்றது.
Q141. இந்தியாவின் மிகப் பழமையான பங்குச்சந்தை எது?
BSE - BOMBAY STOCK EXCHANGE - 1875ல் தொடங்கப்பட்ட து. தலால் தெரு, (DALAL STREET) மும்பையில் அமைந்துள்ள ஃபிரோஸ் ஜீஜிபாய் வளாகத்தில் அமைந்துள்ளது. இதில் சுமார் 5450 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் இது உலகிலேயே மிகப் பெரியதாகிறது. உலகின் 20 முதல் தர பங்குச் சந்தைகளில் இதுவும் ஒன்று. இதன் பங்குக் குறியீடு - 1986ல் துவங்கப்பட்ட து.
Q142. மும்பை பங்கு சந்தையின் குறிக்கோள் வாக்கியம் என்ன?
THE EDGE IS EFFICIENCY
Q143. தேசிய பங்கு சந்தை - - எங்குள்ளது?
1992ல் தொடங்கப்பட்ட இந்தப் பங்குச் சந்தை மும்பையை தலைமையகமாக க் கொண்டு இயங்குகிறது. இதில் சுமார் 1700 நிறுவனங்கள் பதிவு செய்த உறுப்பினர்களாக உள்ளனர். இந்தியாவின் முதல் முழுவதுமாக மின்னணுவால் இயங்கக் கூடிய பங்குச்சந்தை.
Q144. நம் நாட்டில் எங்கெல்லாம் பங்குச் சந்தைகள் உள்ளன?
கொல்கத்தா, பெங்களூரு, பாட்னா, கான்பூர், புவனேஷ்வர், டெல்லி, ஜெய்பூர்.
Q145. பங்குதார ர்களின் நலன் மற்றும் பங்கு வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பு எது?
SEBI - Securities and Exchange Board of India - செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா - 1988ல் தொடங்கப்பட்டு 1992ல், சில சட்ட மற்றும் நிர்வாக (Quasi legislative, Judicial, Executive) அதிகாரங்களுடன் சட்ட பூர்வமாக உருமாற்றம் பெற்றது.
Q146. உலகின் சில முக்கியமான பங்குச் சந்தைகளை பற்றி கூறுக.
1. NYSE-NEWYORK STOCK EXCHANGE : 17.7.1729 அன்று ""பட்டன்வுட்"" என்றழைக்கப்படும் ஒரு மரத்தின் கீழ், வால் தெரு (WALL STREET) நியூயார்க்கில் சில பங்கு தரகர்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டதே இந்த பங்குச்சந்தை. இந்த தரகர்களின் ஒப்பந்தத்தை ""பட்டன்வுட் ஒப்பந்தம்"" என்றழைப்பர். ஆங்கிலத்தில் இந்த பங்குச்சந்தையை BIG BOARD என்றும் கூறுவர். உலகில் டாலர் மதிப்பில் அதிகமான வியாபாரம் செய்யும் சந்தைகளில் இது முதலிடமும், நிறுவன உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 8.3.1817 முதல் இதன் பங்குச்சந்தை குறியீடு (INDEX) NYSE/NIFTY என அழைக்கப்படுகிறது.. இந்த பங்குச் சந்தையின் கோஷம் - ""INTEGRITY PROTECTING THE INTERESTS OF MAN"".
2. NASDAQ - National Association of Securities Dealers Automated Quotient, நியூயார்க், அமெரிக்கா, முழுவதுமாக மின்னணுவால் உலகின் முதன் முதலில் இயக்கப்பட்ட பங்குச்சந்தை. 8.2.1971 முதல் இயங்கி வருகிறது.
3. LSE - LONDON STOCK EXCHANGE - லண்டன் பங்குச்சந்தை - 1697ல், ஜான் கேஸ்டிங் என்பவரால், ""ஜொனாதன் காபி ஹவுஸ்"" என்ற இடத்தில் துவக்கப்பட்டு, இன்று பேட்டர் நாஸ்டர் ஸ்குவேர் (Peter Noster Square) என்ற இட த்தில் இயங்குகிறது. இந்த பங்கு சந்தையின் 1986ம் ஆண்டு பங்கு வியாபார விதிமுறைகளை BIG BANG என்று அழைப்பர்.
4. டோக்யோ : 1.6.1875 முதல் இயங்குகிறது. மொத்த வர்த்தகத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சந்தை. இதில் சுமார் 2300 நிறுவனங்கள் வர்த்தக உறுப்பினர்களாக உள்ளனர்.
5. யூரோ நெக்ஸ்ட் - EURONEXT : யூரோ நாணய அறிமுகத்துக்குப்பின், ஐரோப்பிய நாடுகளின் நாணய புழக்கம் மாறுதலுக்குட்பட்ட து. அதன் அடிப்படையில், ஆம்ஸ்டெர்டாம், ப்ரூஸெல்ஸ், பாரீஸ் பங்கு சந்தைகளை இணைத்து, ஆம்ஸ்டெர்டாம் தலைமையாகக் கொண்டு செப்டம்பர் 2000 முதல் இந்த பங்குச் சந்தை இயங்குகிறது."
Q147. பரஸ்பர நிதி (MUTUAL FUND) என்பது என்ன?
அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களால் பொது மக்களிடமிருந்து நிதி வசூலிக்கப்பட்டு, அதை பொதுமக்களின் சார்பாக, லாபம் ஈட்டக்கூடிய அரசாங்க பங்கு பத்திரங்கள், குறுகிய கால கடன் முதலீடுகள், பங்குச்சந்தை முதலீடு போன்றவற்றில் முதலீடு செய்யப்படும் நிதி - பரஸ்பர நிதி.
Q148. பரஸ்பர நிதியில் முன்னிலை நிறுவனம் எது?
யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா - இந்திய அரசாங்கத்தால், ஒரு சட்டத்தின் மூலம், 1963ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை உருவாக்க மிகவும் பாடுபட்டவர் கர்னல் ஆகாஷ் பஹல் என்பவர்.
Q149. பரஸ்பர நிதியில் எப்போதிலிருந்து தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன?
1991ல் தாராள மயமாக்கல் கொள்கை அனுசரிக்கப்பட்ட து. அதன் அடிப்படையில் 1993 முதல் பரஸ்பர நிதியில் தனியார் பங்கு தொடங்கியது. அதில் முக்கியமாக, தேசிய வங்கிகளும், இந்திய தனியார் துறை வங்கிகளும் அதிகமாக பங்கு பெற்றுள்ளன.
Q150. பரஸ்பர நிதி முதலீட்டில் தற்சமயம் இயங்கி வரும் முன்னிலை தேசிய/தனியார் நிறுவனங்கள் எவை?
1.   HDFC Mutual Fund
2.   Reliance Mutual Fund
3.   ICICI Prudential Mutual Fund
4.   Birla Sun Life Mutual Fund 5. UTI Mutual Fund
5.   SBI Mutual Fund
6.   Kotak Mahindra Mutual Fund
7.   Tata Mutual Fund
8.   L & T Mutual Fund
9.   Sundaram Mutual Fund
10. JP Morgan Mutual Fund
11. Axis Mutual Fund
12. Peerless Mutual Fund
13. ING Mutual Fund
14. Escorts Mutual Fund
15. IDBI Mutual Fund
16. HSBC Mutual Fund
17. BNP Parileas Mutual Fund
18. Morgan Stanley Mutual Fund
19. Goldman Sachhs Mutual Fund
இவற்றைத் தவிர சில சிறிய நிறுவனங்களும் இயங்கி வருகின்றன."
Q151. அனைத்து நிதி நிறுவனங்களின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்து சான்று அளிக்கும் நிறுவனங்கள் யாவை?
1. CRISIL: CREDIT RATING INFORMATION SERVICES INDIA LTD., - 1987ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் மும்பையை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.
2. ICRA: INVESTMENT INFORMATION AND CREDIT RATING AGENCY OF INDIA LTD., - 1991ல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் குர்காவ்ன், ஹரியானாவை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.
3. CARE : CREDIT ANALYSIS AND RESEARCH LTD., - 1993ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், மும்பை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.
4. DCR INDIA : DUFF AND PHELPS CREDIT RATING INDIA P. LTD., - 1932 - நியூயார்க்.
5. ONICRA : CREDIT RATING AGENCY INDIA LTD.,"
Q152. நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளின், நிதி நிலை ஸ்திரத் தன்மையை பற்றி ஆய்வு செய்வதில் உலகின் தலை சிறந்த நிறுவனம் எது?
Mc GRAW HILL - மெக் க்ரா ஹில் 1917 - நியூயார்க். இதன் துணை நிறுவனம் ஸ்டாண்டர்டு அண்டு பூவர் (STANDARD & POOR)
Q153. நிதி நிலை ஆய்வு நிறுவனங்களால் - CREDIT RATING AGENCIES - நிதி நிறுவன ங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அளிக்கப்படும் சான்றுகளின் தர வரிசை என்ன?
AAA - மிக அதிகமான பாதுகாப்பு
AA    - அதிகமான பாதுகாப்பு
A       - தேவைக்கேற்ற பாதுகாப்பு
BBB   - சுமாரான பாதுகாப்பு
BB    - குறைவான பாதுகாப்பு
B       - பாதுகாப்பு இல்லை
C       - கணிசமான ஆபத்து
D       - இயல்பு நிலை தவறியது"
Q154. பங்குச் சந்தையில் பங்கேற்ற முதல் பெண்மணி/கள் யார்?
பார்பரா மற்றும் ஸ்டெமிஸ்ட் - 1919 - டொராண்டோ பங்குச் சந்தை
Q155. தி ஹேங் செங்' 'the Hang Seng' என்பது எந்த பங்குச்சந்தையின் குறியீடு?
ஹாங்காங்
Q156. மும்பை பங்குச்சந்தையின் குறியீடான "SENSEX - சென்செக்ஸ்" என்ற அடைமொழியை கோர்த்து அறிமுகப்படுத்தியவர் யார்?
தீபக் மொஹோனி.
Q157. "பட்டன் வுட் உடன்படிக்கை" எந்த பங்குச்சந்தையுடன் தொடர்புடையது?
நியூயார்க் - பட்டன்வுட் என்பது ஒரு மர வகை.
Q158. NASDAQ - இதன் விரிவாக்கம் என்ன?
National Association of Securities Dealers Automated Quotient
Q159. பொவெஸ்பா- BOVESPA என்பது......
சாவ் பாவ்லோ, ப்ரேசில் பங்கு சந்தை.
Q160. இந்திய நிதி முதலீடு நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பு எது?
SEBI - Stock Exchange Board of India.
Q161. உலகில் எந்த நிறுவனத்திற்கு அதிகமான பங்குதாரர்கள் (Share Holders) உள்ளனர்?
ரிலையன்ஸ் குழுமம் - Reliance Group, India.-- சுமார் 40 லட்சம் பங்குதாரர்கள்.