Q1. ச்சக் வம்ச ஆட்சி எவ்வாறு ஏற்பட்டது, அதன் ஆட்சிக்காலம், முடிவு என்ன?
"ச்சக் வம்சத்தினர் ஷா மிர் வம்ச மன்னர்களிடம் மந்திரிகளாக இருந்தவர்கள். ஷா மிர் மன்னர்கள் தங்கள் அதிகாரத்தை
சரிவர பயன்படுத்தாததினால், ச்சக் மந்திரிகள் அதிக பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். இதன் அடிப்படையில், ஷா மிர்
மன்னரை நீக்கிவிட்டு, 1540 ல் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டனர். ஆட்சியைப் பிடித்த ச்சக் வம்ச மன்னர் தன்னை
நசீருத்தீன் முகமது காஸி ஷா என பட்டம் சூட்டிக்கொண்டு ஆட்சி நடத்தினார். இந்த வம்சத்தில் 5 மன்னர்கள் ஆட்சி
செய்தனர். கடைசி மன்னர் நசீருத்தீன் முகமது யூசுப் பாத்ஷா காஸி, 1586ல் அக்பரால் வீழ்த்தப்பட்டு, காஷ்மீர் முகலாய
வம்ச ஆட்சியில் இணைக்கப்பட்டது. "