அவசர காலங்கள்
Q1. இந்திய அரசியல் சட்ட த்தின் எந்த விதிப்படி அவசர கால பிரகடனம் செய்யப்படுகிறது?
விதி எண். 352.
Q2. எந்த காரணங்களுக்காக அவசரக் காலம் நாட்டில் பிறப்பிக்கப்படுகிறது?
1. விதி எண். 352 (ii)ன் படி - போர், எதிரிகளின் தாக்குதல் மற்றும் உள் நாட்டில் ஆயுதம் தாங்கிய புரட்சி.
2. விதி எண். 352 (iii)ன் படி - இந்திய அரசியல் சட்ட விதிகள் மீறல், முடக்கம் அல்லது கடைப்பிடித்தலின் தடங்கல்.
3. நிதி நிலை நெருக்கடி.
Q3. நம் நாட்டில் இது வரை எத்தனை தடவை அவசர காலம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது?
மூன்று முறை.
(1). 1962 - (26.10.1962 --> 10.01.1968) சீனப்போர் - ஜவஹர்லால் நேரு.
(2) 1971 - (03.12.1971 ---> 21.03.1977) டிசம்பர் - வங்காள தேசப்போர் - இந்திரா காந்தி.
(3) 1974 - ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை - அரசியல் குழப்பங்கள் - சமாளிப்பதற்காக இந்திரா காந்தி அவர்கள் அவசர கால சட்டம் பிறப்பித்து ஆட்சியில் தொடர்ந்தார். இது இன்றும் பேசப்படும் ஒரு சர்ச்சை.
Q4. 1975 - 77ல் அவசர கால பிரகடனத்தை முன் வைத்த பிரதமர், ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர் யார்?
இந்திரா காந்தி பிரதமர் முன் வைக்க குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.